Skip to main content

'அவர் ஒரு ஒன் டேக் ஆர்ட்டிஸ்ட்' - மா.கா.பாவை புகழ்ந்த இயக்குனர் 

Published on 04/01/2019 | Edited on 04/01/2019
manik

 

மொஹிதா சினி டாக்கீஸ் தயாரிப்பாளர் எம்.சுப்ரமணியன் தயாரித்த 'மாணிக்' திரைப்படத்தைப் பற்றி இயக்குனர் மார்ட்டின் பேசியபோது... "நான் ஒரு விஸ்காம் மாணவன். எனக்கு மிகப் பெரிய ஆசை ஒரு தனியார் நியூஸ் சேனலுக்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்பது. ஆனால், அங்கோ அவர்கள் எனக்கு சரியான ப்ரொபைல் இல்லை என்று சொல்லி வெளியே அனுப்பினார்கள். சரியான மீடியா ப்ரொபைல் வேண்டும் என்று நான் குறும்படம் ஒன்றை எடுத்தேன். அதை நாளைய இயக்குனர் நிகழ்ச்சிக்கு அனுப்பினேன். ஆனால் நான் செலக்ட் ஆகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றேன். இறுதிச் சுற்று வரை சென்றேன். இயக்குநர் சுந்தர். சி அவர்கள் என்னை இதே பாணியில் பணியாற்ற சொன்னார். நானும் லாஜிக் இல்லாமல் கதை செய்யும் பாணியில் இப்போது வரை பயணித்து 'மாணிக்' படத்தை இயக்கியுள்ளேன். 'மாணிக்' என்னுடைய வாழ்க்கையில் நடந்த கதை என்றே கூறலாம். இப்படத்தின் கதாபாத்திரங்கள் மிகவும் புதுமையாக இருக்கும். தரன் படத்துக்கு மிகச் சிறப்பான இசையை தந்துள்ளார். அவர் நான் கேட்டதை சரியான அளவுகோலில் பின்னணி இசையாக தந்துள்ளார். 

 

 

அவருடன் விவாதித்து பின்னணி இசை பணியாற்றியது மறக்க முடியாதது. நாயகன் மா.கா.பா ஆனந்துக்கு அவர் நடித்த படங்களில் இது கண்டிப்பாக பெஸ்ட்டாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அவர் ஒரு ஒன் டேக் ஆர்ட்டிஸ்ட் என்று சொல்ல வேண்டும். நாம் சொல்வதை சரியாக கவனித்து அதிகம் சிரத்தை எடுத்து ஒரே டேக்கில் நடிப்பார். அவருடைய மனைவியிடம் நான் நடித்ததில் இது தான் மிகச் சிறந்த படம் என்று அவரே கூறியதாக என்னிடம் கூறியுள்ளார். படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் மிகப்பெரிய அளவில் பேசப்படும். ஒவ்வொரு கதாபாத்திரமும் வெற்றி பெற வேண்டும் என்று நாங்கள் அதிகம் உழைத்துள்ளோம். அது படத்தில் கண்டிப்பாக தெரியும். படத்தில் உள்ள முன்னணி நடிகர்கள் அனைவரும் நான் கேட்டதை கொடுத்தனர். அவர்களுடன் பணியாற்றியது மற்றும் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கொடுத்த சுதந்திரம் எல்லாம் படத்தை சிறப்பாக உருவாக்க உதவியது" என்றார் இயக்குனர் மார்ட்டின். மொஹிதா சினி டாக்கீஸ் தயாரிப்பாளர் M.சுப்ரமணியன் தயாரித்து புதுமுக இயக்குனர் மார்ட்டின் இயக்கிய  "மாணிக்" திரைப்படம் நாளை 4-ஆம் தேதி திரைக்கு வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"விஜய் சேதுபதி சூப்பர் ஹீரோ இல்ல... கடவுள்"

Published on 12/02/2019 | Edited on 12/02/2019

ரஞ்சித் ஜெயக்கொடி விஜய் சேதுபதியை வைத்து புரியாத புதிர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு  அறிமுகமானவர். இப்போது ஹரிஷ் கல்யானை வைத்து இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் படத்தை இயக்கியுள்ளார். அவருக்கும் விஜய் சேதுபதிக்கும் உள்ள நெருக்கத்தை இந்த நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

Next Story

"என் தந்தை இடத்தில் இவர்கள்..." - மா.கா.பா.ஆனந்த்

Published on 30/05/2018 | Edited on 31/05/2018
makapa anand


சிவகார்த்திகேயனை அடுத்து சின்ன திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் நடிகர், தொகுப்பாளர் மா.கா.பா.ஆனந்த். 'வானவராயன் வல்லவராயன்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் நடிப்பில் அடுத்ததாக 'பஞ்சுமிட்டாய்' படம் வரும் ஜூன் 1ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் தன் எதிர்கால திட்டம் குறித்து நடிகர் மா.கா.பா.ஆனந்த் ஒரு பேட்டியில் பேசுகையில்.... "டிவி, சினிமா இரண்டிலுமே பயணிக்க ஆசைப்படுகிறேன். பாண்டிராஜ், தம்பி ராமையா என்று எனது தந்தை இடத்தில் இருப்பவர்களிடம் ஆலோசனைகள் அறிவுரைகள் பெற்றுக் கொள்கிறேன். எல்லாவற்றையும் முயற்சிக்க சொல்கிறார்கள். எனக்கு சினிமா இதுவரை முழுநேர பணியாக மாறவில்லை. டிவிக்கு தான் முக்கியத்துவம் தருகிறேன். வாய்ப்பு வருகிற படங்களில் நடிக்கிறேன். ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு ஒதுங்கலாம் என்று நினைத்தேன். இருந்தும் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் படத்தில் அவருக்கு நண்பராக நடிக்கிறேன். நண்பராக நடிக்க வைக்க அவர்கள்தான் யோசித்தார்கள். ஆனால் நான் யோசிக்கவில்லை. கதாநாயகனாக மட்டும்தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்கவில்லை. எந்த வேடமாக இருந்தாலும் சரி. தயாராக இருக்கிறேன்" என்றார்.