Skip to main content

"கதை நல்லா இருக்கு, நல்லா பண்ணு" - மாதவனுக்கு நம்பிக்கை அளித்த சூர்யா

Published on 22/06/2022 | Edited on 22/06/2022

 

madhavan talk about surya

 

தமிழ் மற்றும் இந்தி சினிமாவில் கவனம் செலுத்தி வரும் மாதவன் இயக்குநராக அறிமுகமாகவுள்ள படம் 'ராக்கெட்ரி - நம்பி விளைவு'. இந்த படம் இஸ்ரோவில் பணியாற்றிய வான்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் முதன்மை கதாபாத்திரமான நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் மாதவன் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஜூலை மாதம் 1-ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியீட்டிற்கு சில நாட்களே உள்ள நிலையில் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. 

 

இந்நிலையில் 'ராக்கெட்ரி - நம்பி விளைவு' படக்குழுவினர் சென்னையில் இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தினர். இதில் கலந்து கொண்டு மாதவன் செய்தியாளர்களின் பல கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது நிருபர் ஒருவர் இப்படத்தில்  சூர்யா ஷாருக்கான் கதாபாத்திரம் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு மாதவன், இப்படத்தில் சூர்யா, ஷாருக்கான் அவர்களாகவே நடித்துள்ளனர். முதலில் இந்த கதையை எழுதும் பொழுது சூர்யா, ஷாருக்கான் உள்ளிட்டோர் நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. முதலில் இந்த கதையை சூர்யாவிடம் சொல்லிய போது நல்ல கதையாக இருக்கு, நல்லா பண்ணுயான்னு சொன்னார். இதே போல ஷாருக்கானிடம் இந்த கதையைக் கூறினேன். இதைக் கேட்ட அவர் கதை நல்லா இருக்கு கண்டிப்பா நான் இந்த படத்தில் ஒரு சின்ன ரோலாவது பண்ணுவேன். அப்படி இல்லையென்றால் படத்தில் பின்னாடியாவது உக்கார வாய்ப்பு கொடுன்னு சொன்னார். இதை நான் சூர்யா கிட்ட சொன்னேன். உடனே அவரும் ஷாருக்கானே பன்றாரு நானும் இந்த படத்தில் நடிப்பேன் என்றார். அப்படிதான் இவர்கள் இருவரும் இந்த கதைக்குள் வந்தனர். ஆனால் இருவரும் இப்படத்தில் நடித்ததற்காக ஒரு பைசா கூட வாங்கவில்லை" என்றார்.

 

சார்ந்த செய்திகள்