Skip to main content

#MeToo வை வைத்து விளையாடிய நபருக்கு கஸ்தூரி கொடுத்த பதிலடி !

Published on 18/10/2018 | Edited on 18/10/2018
kasthuri

 

ஸ்ரீரெட்டிக்கு பிறகு சினிமாவில் தற்போது மீடூ மூவ்மெண்ட் மூலம் பல்வேறு பிரபலங்கள் பாலியல் புகார்கள் கூறி வரும் நிலையில் ரஜினி ரசிகர் ஒருவர் 'நடிகை கஸ்தூரி என்னை படுக்கைக்கு அழைத்து 1 லட்சம் தரேன் என்றார். 1 மணிநேரம் என்னால் முடியாது என்று சொன்னேன்' என பதிவிட்டிருந்தார். இதற்கு கஸ்தூரி அவருக்கு பதிலடிகொடுக்கும் விதமாக... 'அட, பொய் சொல்லும்போதுகூட உண்மையை உளறிட்டான் பாருங்க. அவனால முடியாதுதான்- முடியாதவன் முடியாதுன்னு சொல்லித்தானே ஆவணும் ! #கே_கூ. ரஜினி பேரை கெடுக்க இந்த மாதிரி எத்தினி பேரு அலையறானுவளோ' என பதிவிட்டிருந்தார்.

 

 

 

இது திரையுலகில் மீண்டும் பரபரப்பை உண்டாக்கிய நிலையில் அந்த ரஜினி ரசிகர் மீண்டும்....'எல்லோரும் பேசி முடிச்சிட்டிங்களா?இப்ப நான் பேசவா.நான் பதிவு பண்ணியது உண்மை அல்ல. இதுல நான் சொல்ல வந்தது சோசியல் மீடியாவில் வருவதை நம்பி அதுக்கு ஒரு கருத்து சொல்லி டைம் வேஸ்ட் பண்ணாதிக்க...ஒரு விழிப்புணர்வுக்கு உங்க name use பண்ணிட்டேன் @KasthuriShankar  மேடம் sorry..' என பதிவிட்டார். இதற்கு நடிகை கஸ்தூரி 'its ok, all is forgotten, don't worry be happy. இதனால் அறியப்படுவது என்னவெனில், கஸ்தூரி கிட்டே வாலாட்டினா பத்து வருஷம் பொறுக்கமாட்டேன், அப்பவே நறுக்கிடுவேன் என்பதே! peace' என பதில் பதிவு போட்டு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இவர்கள் இருவரும் இப்படி மீடூ வை பயன்படுத்தி சமூகவலைத்தளத்தில் விளையாடியது ரசிகர்களிடையே கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாடகி சுசித்ராவின் நிலை என்ன?

Published on 14/11/2019 | Edited on 14/11/2019

பிரபல திரைப்பட பாடகி சுசித்ரா,  ’யாரடி நீ மோகினி’ உள்ளிட்ட படங்களில் நடித்த கார்த்திக்கை திருமணம் செய்துகொண்டார்.  திரைப்படங்கள், விழாக்கள் என்று பரபரப்பாக இருந்தார் சுசித்ரா. கடந்த 2017ம் ஆண்டில் திடீரென சுசித்ராவின் டிவிட்டர் பக்கத்தில் இருந்து,  ’சுச்சி லீக்ஸ்’ என்ற பெயரில் தனுஷ், விஜய் டிவி டிடி, ஹன்சிகா, த்ரிஷா, அனிருத், ஆண்ட்ரியா, சின்மயி, ராணா, ஸ்ருதிஹாசன், ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரின் அந்தரங்க வீடியோக்களும், புகைப்படங்களும் வெளியானதால் திரையுலகம் அதிர்ந்தது. இதையடுத்து, தனது டிவிட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்து, அதிலிருந்த புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார்கள்’’ என்று சுசித்ராவே சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

’இது ஹேக்கர்களின் வேலை அல்ல, சுசித்ராவேதான் வெளியிட்டுள்ளார், அவருக்கு மனநிலை சரியில்லை’ என்றும் அப்போது தகவல் பரவியது.  இந்த விவகாரம் தொடர்ந்த நிலையில்,  இதை யாரும் பெரிதுபடுத்தவேண்டாம் என்று சுசியின் கணவர் கார்த்திக் வேண்டுகோள் விடுத்தார். ஆனாலும் இந்த விவகாரம் தொடர்ந்த நிலையில், சுசித்ராவிடம் இருந்து கார்த்திக் விவாகரத்து பெற்றார்.  

 

s

 

விவாகரத்திற்கு பின்னர் தனது குடும்பத்தினரை விட்டு விலகி, அடையாறில் உள்ள வீட்டில் சுசித்ரா தனியாக வாழ்ந்து வந்தார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு அவர் காணாமல் போய்விட்டதாக, அவரது தங்கை சுஜிதா, அடையாறு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சுசித்ராவை தேடி வந்த போலீசார், சென்னை தி.நகரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் இருந்து சுசித்ராவை மீட்டனர்.  மீட்பின்போது, ‘’என்னை மனநலம் பாதிக்கப்பட்டவள் போல் குடும்பத்தினர் நடத்துகிறார்கள். அதனால்தான் வீட்டினருடம் இருந்து விலகி தனியாக வாழ்ந்தேன். இப்போது அங்கேயும் இருக்கப் பிடிக்காததால்தான் ஓட்டலில் தங்கியிருந்தேன்’’ என்று கூறியதாக ஒரு தகவல் வந்தது. காவல்துறையினர் இது குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.

‘போக்கிரி’ போன்ற படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களை பாடியவரும் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற ரேடியோ ஜாக்கியும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளருமான சுசித்திராவின் நிலை என்ன என்று அவரின் ரசிகர்கள் கவலையுற்றிருக்கின்றனர்.

 

IIT

 

 

Next Story

ஆபாசமாக மெசேஜ் செய்த நபரால் அதிர்ச்சியில் பாடகி சின்மயி!

Published on 11/06/2019 | Edited on 11/06/2019

பாடகி சின்மயிக்கு சமூக வலைத்தளம் மூலம் ஆபாசமாக மெசேஜ் செய்த நபரால் கடும் அதிர்ச்சியாகி உள்ளார்.இதற்கு முன்பு மீ டூ மூலம் தனக்கு நடந்த பாலியல் தொந்தரவு பற்றி வெளிப்படையாக கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.இந்த நிலையில் சமூக வலைத்தளம் மூலம் தனக்கு வந்த ஆபாச மெசேஜ்களை பதிவிட்டுள்ளார்.மேலும் அந்த நபர் பேசியுள்ளதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வெளியிட்டுள்ளார். 


 

சின்மயியிடம் மோசமான ஆபாச வார்த்தைகளால் முகம் சுளிக்கும் வகையில் பேசியுள்ள அந்த நபரை பலரும் ட்விட்டரில் திட்டி தீர்த்து வருகின்றனர்.இந்த சம்பவத்தை தொடர்ந்து பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் பாடகி சின்மயிக்கு தனிப்பட்ட முறையில் மேசேஜ்களை அனுப்புகின்றனர். அதனை சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.