Skip to main content

“தொழில் மீதான மரியாதைக்கு எடுத்துக்காட்டாக இருப்பவர்” - கமல்ஹாசன் வாழ்த்து

Published on 27/10/2023 | Edited on 27/10/2023

 

kamalhassan about sivakumar

 

ஓவியக் கலைஞராக இருந்து பின்பு நடிகராக உருமாறி கிட்டத்தட்ட 190 படங்களில் நடித்துள்ளவர் சிவகுமார். இப்போது நடிப்பிலிருந்து ஓய்வெடுத்திருக்கும் சிவகுமார் கடைசியாக அஜித் - ஜோதிகா நடிப்பில் 2001 ஆம் ஆண்டு வெளியான பூவெல்லாம் உன் வாசம் படத்தில் நடித்திருந்தார். நடிகராக மட்டுமல்லாமல் சொற்பொழிவாளராகவும் பல மேடைகளில் பேசியுள்ளார். 

 

இந்த நிலையில் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார் சிவகுமார். அவருக்குத் திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், கமல்ஹாசன் அவரது எக்ஸ் தள பக்கத்தில், "அண்ணன் சிவகுமார், தலைமுறை தாண்டும் கலைஞர்களில் மூத்தவர்; தொழில் மீதான மரியாதைக்கு எடுத்துக்காட்டாக இருப்பவர்; ஓவியக் கலைஞராக இருந்து நடிகராக மலர்ந்து இன்று மாபெரும் சொற்பொழிவாளராகவும் பரிணமளிக்கிறார். சிவகுமார் அண்ணன் அவர்களை இப்பிறந்த நாளில் மகிழ்வோடு வாழ்த்துகிறேன். நீடு வாழ்க" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

சிவகுமாருடன் கமல்ஹாசன் இணைந்து அன்னை வேளாங்கண்ணி, சொல்லத்தான் நினைக்கிறன், பட்டிக்காட்டு ராஜா, அரங்கேற்றம் என 1970களில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.  

 

 

 

சார்ந்த செய்திகள்