Skip to main content

“தம்பி போய் உட்காரு, எங்களுக்கு தெரியும்...பெருசா வந்துட்டாரு..” - சென்ட்ராயனிடம் ஆவேசப்பட்ட கே.ராஜன் 

Published on 22/09/2022 | Edited on 22/09/2022

 

K. Rajan is an angry Sendrayan  Lokal Sarakku Audio Launch

 

யோகிபாபு, நடன இயக்குநர் தினேஷ் மாஸ்டருடன் இணைந்து 'லோக்கல் சரக்கு' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை 'சுறா', 'அழகை மலை' போன்ற படங்களை இயக்கிய ராஜ்குமார் இயக்க, உபாசனா, இமான் அண்ணாச்சி, சென்ட்ராயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'டிஸ்கவர் ஸ்டுடியோஸ்' சார்பில் இப்படத்தை  தயாரிக்கும் சுவாமிநாதன் ராஜேஷ், படத்திற்கு இசையும் அமைத்திருக்கிறார். 

 

இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இவ்விழா மேடையில் தயாரிப்பாளர் கே.ராஜன் மற்றும் சென்ட்ராயன் இருவரும் காரசாரமாக பேசிக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முதலில் இவ்விழாவில் பேசிய கே.ராஜன், “தம்பி ராஜேஷுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். நீங்கள் இப்போது தயாரிப்பாளராகவும், இசையமைப்பாளராகவும் ஆகிவிட்டீர்கள். ஆனால் இதற்கு அடுத்து நீங்கள் படம் தயாரிக்கக் கூடாது. முதலில் 5 அல்லது 10 படத்துக்கு இசையமைத்து பெரிய ஆள வாங்க. நிறைய சம்பாதியுங்கள்" என்று சொல்லிக்கொண்டிருந்தார். 

 

இதனிடையே குறுக்கிட்ட சென்ட்ராயன், "எங்க தயாரிப்பாளர், அவர் எங்க முதலாளி, அவரு படம் பண்ணத்தான் எங்களுக்கு வேலை கிடைக்கும் என்று கூறினார். இதை பார்த்து ஆவேசமடைந்த தயாரிப்பாளர் கே. ராஜன், "போய் உட்காரு, நாங்க வேற வேலை வாங்கி தருகிறோம். ஆனால் அவரை வேலை இல்லாமல் ஆக்கிட்டாதீங்க. உட்காரு தம்பி, உங்க வேலைக்காக நாங்கள் வெளியே போகணுமா... எங்களுக்கு தெரியும். பெருசா எதிர்ப்பு தெரிவிக்க வந்துட்டாரு. நான் என்ன சொன்னேன், இசையமைப்பாளராக இருந்து படமெடுக்க வந்துட்ட. ஆனால் படம் எடுக்கிறதில் இருக்கும் டார்ச்சர் எங்களுக்கு மட்டும் தான் தெரியும் நடிகர்கள் ஒன்னும் தெரியாது, அதனால்தான் நல்ல சம்பாதிச்சுட்டு படம் எடுக்க வாங்க, அப்போதான் கடன் பிரச்சனையை சமாளிக்க முடியும் என்று சொன்னேன்.  ஆனால் நீங்க  இப்படி இடையில் புகுந்து டிஸ்டர்ப் பண்ணட்றீங்க, அப்படி எல்லாம் பண்ணக்கூடாது, ஏன்னா நான் பலபேரை  டிஸ்டர்ப் போன்றவன்” என தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“அவரு ஜெயிக்கனும்னு ஆசைப்படமாட்டார்” - அனுபவம் பகிரும் செண்ட்ராயன்

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
sendraayan about daniel balaji

காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், பைரவா, உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் டேனியல் பாலாஜி(48). திருவான்மியூரில் தனியாக வசித்து வந்த நிலையில் நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து கொட்டிவாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். 

இவரது மறைவு திரைத்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டேனியல் பாலாஜியின் மறைவு செய்தி அறிந்த இயக்குநர்கள் கௌதம்மேனன், வெற்றிமாறன், அமீர் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் அஞ்சலிக்காக அவருடைய உடல் வைக்கப்பட்டுள்ளது. டேனியல் பாலாஜி ஏற்கனவே கண்களை தானம் செய்திருந்த நிலையில் அவருடைய கண்கள் தானமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. 

திரைத்துறை சார்ந்த பிரபலங்கள் அவரது மறைவுக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கமல்ஹாசன், சூர்யா, ராதிகா, ஆண்ட்ரியா, சந்தீப் கிஷன், மோகன் ராஜா, அதர்வா உள்ளிட்டவர்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர். இதனிடையே இயக்குநர்கள் வெற்றிமாறன், கௌதம் மேனன், அமீர், விஜய் சேதுபதி, அதர்வா உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். 

இந்த நிலையில் நடிகர் செண்ட்ராயன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி அவருடன் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். அவர் பேசுகையில்,  “பொல்லாதவன் படத்தில் மிகப் பெரிய வில்லன் ரோல் டேனியல் அண்ணன் நடித்தார். அவருடன் வரும் காட்சிகளிலெல்லாம் அழகா எனக்கு சொல்லிக் கொடுப்பார். அவரு ஜெயிக்கனும்னு ஆசைப்படமாட்டாரு. அந்த டீம் ஜெயிக்கணும், சீன் ஜெயிக்கணும் படமே ஜெயிக்கணும்-னு ஆசைப்படுவாரு. அவருடன் மூணு படம் வேலை பார்த்திருக்கேன். ரொம்ப நல்ல மனிதர். அவர்கிட்ட எதைபத்தி கேட்டாலும் கரெக்டா சொல்லுவார். உயிரோடு இருக்கும் போதே கண்தானம் பண்ணியிருக்கார். அதற்கு பெரிய மனசு வேணும். இன்னும் 50 வருஷம் வாழ்ந்திருக்கலாம். அதற்குள் கடவுள் கூப்பிட்டுவிட்டார்.  ” என்றார். 

Next Story

புதிய திரைப்பட நகரம் குறித்து தயாரிப்பாளர் கே.ராஜன் முதல்வருக்கு கோரிக்கை

Published on 10/01/2024 | Edited on 10/01/2024
producer rajan about new film city

எஸ்.ஆர். பிலிம் பேக்ட்ரி சார்பில் ராஜன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘இமெயில்’. இப்படத்தில் அசோக்குமார், ராகினி திவிவேதி, ஆதவ் பாலாஜி, ஆர்த்தி ஸ்ரீ உள்ளிட்டோர் முண்ணனி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் மறைந்த நடிகர் மனோபாலா மற்றும் லொள்ளு சபா மனோகர், வனிதாஸ்ரீ உள்ளிட்டோர் முக்கிய வேடங்களிலும் பில்லி முரளி வில்லனாகவும் நடித்துள்ளனர். அவினாஷ் கவாஸ்கர் இப்படத்திற்கு இசையமைக்க திரவுபதி புகழ் ஜுபின் பின்னணி இசை மேற்கொண்டு இருக்கிறார். தமிழ், கன்னடம் என இரு மொழிகளில் இப்படம் தயாராகி உள்ளது. இப்படம் ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில் இப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது.  

இதில் இயக்குநர் கே.பாக்யராஜ், தயாரிப்பாளர்கள் கே.ராஜன், மதுராஜ், நடிகர்கள் அருள்தாஸ், நடிகை வனிதா விஜயகுமார், கோமல் சர்மா, ரத்னா, லொள்ளு சபா மனோகர், சிதம்பரம், ஆரஞ்சு மிட்டாய் பிரபா, முத்துக்குமார், இந்திய தயாரிப்பாளர்கள் சங்க தலைவரும் நிறுவனருமான சாலமன், சமூக சொற்பொழிவாளர் முகிலன், தொழிலதிபர்கள் எஸ்.ஆர் பாபு, ராஜசேகர் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது, “இதை ஒரு சுமாரான படம் என்று நினைத்து தான் வந்தேன். ஆனால் இங்கே காட்சிகளை பார்த்தபோது ரிச் ஆகவே எடுத்து இருக்கிறார்கள். ஒரு மசாலா படம் குஜாலா இருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளவர் இங்கே வரவில்லை. கதாநாயகிகள் படத்தை புரமோஷன் பண்ணுவதற்காக மட்டுமல்ல, அவர்களையே புரமோஷன் பண்ணிக் கொள்வதற்காக இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு வரவேண்டும். வேறு படங்களில் நடித்துக் கொண்டிருப்பதால் வரவில்லை என்றால் அதை ஏற்றுக் கொள்ளலாம். இருந்தாலும் அவர்களையும் கேட்டு இதுபோன்று தேதிகளை முடிவு செய்ய வேண்டும். 

சமீபகாலமாக சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பல படங்கள் பெரிய படங்களாக மாறி இருக்கின்றன. தரமணி திரைப்பட நகரத்தை மூடியபோது சிறிய படங்கள் எல்லாம் பாண்டிச்சேரிக்கும் பெரிய படங்கள் எல்லாம் ஹைதராபாத்திற்கும் கிளம்பி சென்றனர். அதனால் அவற்றை திறக்க வேண்டும் என்று கலைஞரிடமும் கடந்த வருடம் முதல்வர் மு.க ஸ்டாலினிடமும் கோரிக்கை வைத்தேன். சமீபத்தில் நடைபெற்ற கலைஞரின் நூற்றாண்டு விழாவில் முதல்வர் மு.க ஸ்டாலின்,  பூந்தமல்லி அருகில் 140 ஏக்கரில் 500 கோடி செலவில் திரைப்படம் நகரம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு நம்மை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளார். சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் இதை மனதார வரவேற்கிறோம்.

கடந்த பத்து வருடங்களாகவே தமிழ் சினிமாவில் சிறு முதலீட்டு பட தயாரிப்பாளர்களுக்கு சோதனைகள், கஷ்டங்கள். வேதனைகள் தொடர்ந்து வருகின்றன. இந்த திரைப்பட நகர் உருவாகிவிட்டால், நிச்சயமாக தயாரிப்பு செலவில் ஒரு 40 சதவீதம் மிச்சமாகும். அந்த திரைப்பட நகருக்கு கலைஞரின் பெயரை வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். விஞ்ஞான வளர்ச்சி வேண்டும். ஆனால் அது உயிரை பறிப்பதாக இருக்கக் கூடாது என்பதுதான் என்னுடைய வேண்டுகோள். இது ஆன்லைன் விளையாட்டில் ஈடுபாடு கொண்டு அந்த மோகத்தில் இருக்கும் நபர்களை நல்வழிப்படுத்தும் படமாக இருக்கும் என நம்புகிறேன்” என்று கூறினார்.