Skip to main content

அடுத்தடுத்து சிம்புவுடன் இணையும் ஜோ....

Published on 09/07/2018 | Edited on 09/07/2018
mr.chandramouli

 

 

 

 

நடிகர் சிம்பு தற்போது மணிரத்னம் இயக்கத்தில் 'செக்கச் சிவந்த வானம்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜோதிகாவும், சிம்புவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது மீண்டும் நடிகர் சிம்பு, ஜோதிகா நடித்து வரும் ‘காற்றின் மொழி’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்கான படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்றிருந்த நிலையில் சிம்பு, ஜோதிகா படப்பிடிப்பில் கலந்துகொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. சிம்பு, ஜோதிகா கடைசியாக சரவணா படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. போப்டா நிறுவனம் சார்பில் தனஞ்ஜெயன், விக்ரம் குமார், லலிதா தனஞ்ஜெயன் தயாரிக்கும் இந்த படம் 'தும்ஹரி சூளு' ஹிந்தி படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகிறது. 

 

 

 

 


 

சார்ந்த செய்திகள்