Skip to main content

வெளிப்புறப் படப்பிடிப்பில் லஞ்சம் கேட்கும் காவல்துறையினர் - தயாரிப்பாளர் ஜெயலட்சுமி குற்றச்சாட்டு 

Published on 31/10/2023 | Edited on 31/10/2023

 

Cops asking for bribes in outdoor shoot: :Producer A. Jayalaxmi speech!

 

ஒரே இரவில் நடக்கும் கதையாக லேடீஸ் ஹாஸ்டல் பின்னணியில் உருவாகி இருக்கும் படம் 'ரா... ரா... சரசுக்கு ராரா...' இந்தப் படத்தை ஸ்கை வாண்டர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஏ. ஜெயலட்சுமி தயாரித்துள்ளார். கேசவ் தெபுர் இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு ஆர் .ரமேஷ், இசை ஜி.கே.வி. 9V ஸ்டுடியோஸ் நிறுவனம்  நவம்பர் 3 ஆம் தேதி இப்படத்தை வெளியிடுகிறது. இப்படத்தின் அறிமுக விழா இன்று சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

 

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ஏ. ஜெயலட்சுமி பேசும்போது, "தயாரிப்பாளர்களுக்காகத் தைரியமாகக் குரல் கொடுக்கும் கே. ராஜன் அவர்கள் இங்கே வந்திருக்கிறார். அவரது துணிச்சலுக்காக அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். வாழ்க்கையில் எத்தனை பேர் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்? இரண்டு மணி நேரம் சந்தோஷமாக இருக்க வேண்டும், தன்னை மறந்து ஜாலியாக இருக்க வேண்டும் என்று தான் இந்தப் படத்தை எடுத்துள்ளோம். இப்பொழுது  கத்தி, வெட்டுக் குத்து, ரத்தம் என்று வரும் படங்களைத்தான் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அவற்றிலிருந்து மாறுபட்டு ஜாலியாக இருக்கும்படியாக இந்தப் படம் உருவாகியிருக்கிறது. இது வயது வந்தவர்களுக்கான படம் என்றாலும் இளைஞர்களுக்கும் பெரியவர்களுக்கும் பிடிக்கும் படியாக இருக்கும்.  

 

படத்தை எடுக்கும்போது நாங்கள் பல பிரச்சினைகளைச் சந்தித்தோம். இதன் படப்பிடிப்பு வேலூரில் நடந்தபோது, போலீஸ் தொல்லைகள் தினம் தினம் வந்து கொண்டே இருந்தன. சாதாரண போலீஸ் முதல் இன்ஸ்பெக்டர், கமிஷனர் வரை எங்களுக்குத் தொல்லை கொடுத்தார்கள். அப்போதெல்லாம் எங்களுக்குப் பாதுகாப்பாக ஆதரவாக காட்பாடி ராஜன் அவர்கள் இருந்து வந்திருக்கிறார். அதை என்னால் மறக்க முடியாது. இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.

 


 

சார்ந்த செய்திகள்