Skip to main content

விறுவிறுப்பாக முடிக்கப்பட்ட 'பெல்பாட்டம்' ஷூட்டிங்! 

Published on 01/10/2020 | Edited on 01/10/2020

 

bellbottom

 

இந்தியாவின் முன்னணி நடிகரான அக்‌ஷய்குமார் வரிசையாக ஒன்பது படங்களுக்கு மேல் நடித்து வந்தார். இந்த ஊரடங்கு சமயத்தில் அவரது இரண்டு படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு, அதில் 'லக்‌ஷ்மி பாம்' என்னும் படம் மட்டும் ஓ.டி.டி தளத்தில் வெளியாகவுள்ளது. 'சூர்யவன்ஷி' படம் தீபாவளிக்கு திரையரங்கில் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

இதனிடையே 'பெல்பாட்டம்' என்றொரு படத்தில் நடிப்பது குறித்து அறிவிப்பு வெளியானது. தற்போது ஊரடங்கால் இப்படத்தின் ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகுவதாக இருந்த இப்படம் ஊரடங்கு காரணத்தால் தள்ளிப்போனது.

 

பெரும் பாலிவுட் பட்டாளமே நடிக்கும் இப்படத்தை ரஞ்சித் திவார் இயக்குகிறார். படத்திற்கு பெல்பாட்டம் என்று பெயரிட்டதுபோல 80 -களின் ரெட்ரோ லுக்கில் இருக்கிறது செட் மற்றும் அக்‌ஷய் குமாரின் ட்ரெஸ்ஸிங். 

 

கரோனா அச்சுறுத்தல் இருக்கும் நிலையிலும் இப்படத்தின் ஷூட்டிங் உரிய பாதுகாப்புடன் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது. லண்டனில் விறுவிறுப்பாக ஷூட்டிங் நடைபெற்று வந்த நிலையில், மிகவும் குறைந்த நாட்களிலேயே படத்தின் முழுப் பகுதியும் தற்போது எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. 

 

Ad

 

இந்நிலையில், ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடித்துவிட்டதாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அறிவித்துள்ளது படக்குழு. இந்தியா திரும்பியவுடன் இறுதிக்கட்ட பணிகளை முடித்து, 2021-ம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி படத்தை வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்