Skip to main content

“அவங்க இரண்டு பேர் இல்ல, அடுத்து நான்தான்”- நண்பர்களை நினைத்து கலங்கிய பாரதிராஜா

Published on 05/02/2020 | Edited on 05/02/2020

இயக்குனர் இமயம் என்று அழைக்கப்படும் பாரதிராஜா தற்போது பிஸியான நடிகராக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். பல படங்களில் வில்லன், முக்கிய கதாபாத்திரம் என்று அசத்திக்கொண்டிருக்கிறார் பாரதிராஜா.
 

barathiraja

 

 

இந்நிலையில் மீண்டும் ஒரு மரியாதை என்றொரு படத்தை பாரதிராஜா பல வருடங்கள் கழித்து இயக்கி, நடித்திருக்கிறார். இந்த படம் குறித்து நமக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், “பாலுமகேந்திரா, பாலச்சந்தர் இவர்களுடலான உங்களுடைய கலந்துரையாடல் எப்படி இருக்கும்? ”என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த பாரதிராஜா, “இது கேட்கும்போதே கஷ்டமாக இருக்கிறது. அவர்களை பின்னோக்கி பார்க்கும்போது, நான் உணர்ச்சி வசப்படுகிறேன். அவர்களெல்லாம் போய்விட்டார்கள் என்று யோசிக்கும்போது கஷ்டமாக இருக்கும். அடுத்தது நானாக இருப்பேன். 

பாலுமகேந்திரா என்னுடைய நண்பன் ‘பாலு’ என்று நான் அழைப்பேன்,  ‘பாரதி’ என்று அழைப்பார். என்னை தமிழ் சினிமா துறையில் பாரதி என்று அழைப்பவர்கள் பாலச்சந்தர், பாலுமகேந்திரா, செல்வராஜ் என்ற எழுத்தாளர் இவர்கள்தான். மற்றவர்களெல்லாம் இயக்குனர் சார் என்பார்கள் இல்லையென்றால் அப்பா என்று அழைப்பார்கள். 

நானும் பாலு சாரும் ரொம்ப காமெடியா பேசிப்போம், நீங்கள் முதலில் போவீர்களா? இல்லை நான் போவேனா பாரதி என்று கேட்பார். அதற்கு நான், நம்ப இருவரில் யார் முதலில் போவார்கள் என்று தெரியாது. நீங்கள் முதலில் போனால் ஈமைச் சடங்கிற்கு கண்டிப்பாக வருவேன். உங்களுடைய சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் வித்தியாசப்படும், அதற்கு உள்ளே அனுமதிக்க மாட்டார்கள். ஆனால், நான் உங்களை கண்டிப்பாக தோளில் சுமப்பேன் என்று சொன்னேன். 

அவர் உடல்நிலை சரியில்லாதபோது அவரை சந்தித்துவிட்டு இறைவனை பார்த்து அவர் உயிருடன் இருந்துவிட வேண்டும் என்று மனதிற்குள் வேண்டிக்கொண்டேன். அந்த சமயம் பார்த்து நான் கொழும்பு வரை சென்றிருந்தேன். அவர் இறந்துவிட்டார் என்று செய்தி வந்தவுடன் எப்படியோ விமானத்தை பிடித்து, இங்கு வந்துவிட்டேன். பெசன் நகருக்கு எடுத்து சென்றுவிட்டார்கள் என்று சொன்னார்கள். எப்படியோ தோளில் ஒரு முறை சுமந்து, அவருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிவிட்டேன்” என்றார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“என் தந்தைக்கு நிகரான ஆசிரியர்” - கமல்ஹாசன் நினைவு கூரல்

Published on 23/12/2023 | Edited on 23/12/2023
kamalhassan about balachander

தமிழ் சினிமாவில் 'இயக்குநர் சிகரம்' என போற்றப்பட்டவர் மறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தர். தன் படங்களில் பெண்கள் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை இயக்கி வந்தார். இதுவரைக்கும் 8க்கும் மேற்பட்ட தேசிய விருதுகளையும், தமிழக அரசு வழங்கும் கலைமாமணி, அறிஞர் அண்ணா விருது உட்பட பல்வேறு விருதுகளையும் வாங்கியவர். 

இவரது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், அவரை நினைவு கூர்ந்து சமூக வலைத்தளங்களில் திரை பிரபலங்கள் உட்பட பல ரசிகர்களும் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் கமல்ஹாசன், “அசாத்தியமான எண்ணிக்கையில் திரைப்படங்களை இயக்கிய திறமையாளர்; எத்தனையோ நடிப்புக் கலைஞர்களைத் திரைக்குத் தந்த திண்மையாளர்; தனக்கென்றிருந்த பாணியிலிருந்து தவறாமல் படைப்புகளைக் கொடுத்தவர் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர். இன்று அவரது நினைவு நாள். என் மனதில் தந்தைக்கு நிகரான இடத்தை வகிக்கும் என் ஆசிரியருடனான தருணங்கள் நினைவில் எழுகின்றன” என எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  

Next Story

இயக்குநர் கே.பாலச்சந்தரின் நினைவாக சென்னையில் நினைவு சதுக்கம்

Published on 28/04/2023 | Edited on 28/04/2023

 

Memorial Square in Chennai in memory of director K. Balachander

 

தமிழ் சினிமாவில் 'இயக்குநர் சிகரம்' என போற்றப்பட்டவர் மறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தர். தன் படங்களில் பெண்கள் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தும், பல்வேறு சமூக பிரச்சனைகள் குறித்தும் பேசி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி மறைந்தார். 

 

இந்த நிலையில், கே.பாலச்சந்தரின் நினைவாக சென்னையில் நினைவு சதுக்கம் அமைக்கப்படவுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்ட தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது. சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது.  இதில் மொத்தம் 55 தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளது. அதில் ஒன்றாக மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையில் காவிரி மருத்துவமனை அருகில் ஆயிரம் சதுரடி அளவில் உள்ள போக்குவரத்து இடத்திற்கு கே.பாலசந்தர் சதுக்கம் அல்லது கே.பாலசந்தர் ரவுண்டானா அல்லது கே.பாலசந்தர் போக்குவரத்து தீவு என பெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.

 

முன்னதாக அவ்வை சண்முகம் சாலைக்கு வி.பி.ராமன் பெயரும், மந்தைவெளி மேற்கு வட்ட சாலைக்கு மறைந்த பிரபல பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் பெயரும் சென்னை மாநகராட்சி சார்பில் சூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.