Skip to main content

எஸ்.ஜே.சூர்யாவிடம் நன்றிக்கடனை செலுத்திய ஏ.ஆர்.முருகதாஸ்!

Published on 01/09/2018 | Edited on 01/09/2018

அமிதாப் பச்சன் முதல்முறையாக நேரடி தமிழ்ப்படத்தில் நடிக்கவிருக்கும் தகவல் நேற்று முன்தினம் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆச்சரியத்துக்கு முக்கிய காரணம் அமிதாப் பச்சன் நடிக்கவிருக்கும் படமும் அந்த டீமும்தான். 'மணிரத்னம் அல்லது ஷங்கர் தான் அவரை தமிழ் சினிமாவுக்கு கூட்டிட்டு வருவாங்கன்னு நினைச்சோம். யாருமே எதிர்பார்க்காதமாதிரி இப்படி ஒரு அறிவிப்பு' என்றே பலரும் இதைப் பற்றி எண்ணுகின்றனர். ஆம், 'கள்வனின் காதலி', 'மச்சக்காரன்' ஆகிய படங்களை இயக்கிய தமிழ்வாணன்தான் அமிதாப் பச்சன் நடிக்கும் முதல் தமிழ்ப்படமான 'உயர்ந்த மனிதன்' படத்தை இயக்குகிறார். எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ரஜினிகாந்த் வெளியிட்டார்.

 

amithab bachan



இந்த டீம் எப்படி அமிதாப் பச்சனிடம் கதை சொல்லி ஓகே வாங்கினார்கள் என்பதே பலருக்கும் கேள்வியாக இருந்தது. எஸ்.ஜே.சூர்யா 'குஷி' படத்தை ஹிந்தியில் இயக்கியிருந்தாலும் சமீபத்தில் பாலிவுட்டில் அவர் கவனம் செலுத்தவில்லை. அப்படியிருக்க இந்த டீம் அமிதாப் பச்சனை அணுக உதவியது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்தானாம். 'கஜினி'யில் தொடங்கி 'ஹாலிடே' வரை பாலிவுட்டில் நல்ல பெயர் பெற்றுவிட்ட முருகதாஸ்தான் அமிதாப்புடன் சந்திப்பை சாத்தியமாக்கியதாம். இதற்காக 'எங்களுக்கு உதவியாக இருந்த முருகதாஸுக்கு நன்றி' என்று எஸ்.ஜே.சூர்யா குறிப்பிட்டார்.

 

sjsarm



'வாலி' வெற்றிக்குப் பிறகு அஜித்துடன் நெருக்கமாக இருந்த எஸ்.ஜே.சூர்யாதான் முருகதாஸை அஜித்துக்கு அறிமுகப்படுத்தி 'தீனா' திரைப்படத்தை அவர் இயக்க வழிவகுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 'தீனா' திரைப்படத்தை இயக்கும்போது முருகதாஸ் மிக இளம் இயக்குனர் ஆவார். அவர் குறித்து அஜித்திற்கு நம்பிக்கை ஏற்படுத்தியவர் எஸ்.ஜே.சூர்யா. இந்த வகையில் அமிதாப்பை அறிமுகம் செய்ததன் மூலம் முருகதாஸ் தன் நன்றிக்கடனை திரும்ப செலுத்தியுள்ளார் என்று விளையாட்டாகக் கூறுகின்றனர் சினிமா பார்வையாளர்கள்.      

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜனநாயக கடமையாற்றினார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Actor Rajinikanth cast his vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.  அதன்படி நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

Next Story

“அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்!”- ரஜினிகாந்த்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Rajinikanth has said that he will not answer political questions

வேட்டையன் படப்பிடிப்பிற்காக சென்னையிலிருந்து ஹைதராபாத் சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த், படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பினார்.ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளிவரும் திரைப்படமான வேட்டையன் படப்பிடிப்பு, ஹைதராபாத் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்து வருகிறது.

அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ள, சென்னையிலிருந்து விமானம் மூலம் கடந்த 9ஆம் தேதி ஹைதராபாத் புறப்பட்டார். 75 சதவீத படப்பிடிப்பு நிறைவுற்ற நிலையில், அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

“படப்பிடிப்பு நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது..” என்று மீடியாக்களிடம் ரஜினிகாந்த் தெரிவித்தபோது, நாடாளுமன்றத் தேர்தல் குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு  “அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்..” என்று கூலாகச் சொல்லிவிட்டு கிளம்பினார்.