Skip to main content

நடிகை குஷ்பூ கொடுத்த 'அரண்மனை 3' பட அப்டேட்!

Published on 28/08/2021 | Edited on 28/08/2021

 

Aranmanai 3

 

சுந்தர் சி. இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான ‘அரண்மனை’ திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. அதனைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டது. இரண்டாம் பாகத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தபோதும், வசூல் ரீதியாக படம் வெற்றிபெற்றது. இவ்விரு பாகங்களுக்கும் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ‘அரண்மனை’ படத்தின் மூன்றாம் பாகம் உருவாகிவருகிறது. இதில், கதாநாயகனாக ஆர்யா நடிக்க, அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்‌ஷி அகர்வால் என 3 கதாநாயகிகள் நடித்துள்ளனர். மேலும், சுந்தர் சி. முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, விவேக், யோகி பாபு, மனோபாலா, நளினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

 

இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவுசெய்துள்ள படக்குழு, தற்போது இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்திவருகிறது. இந்த நிலையில், ‘அரண்மனை 3’ படத்தின் முதல் பாடல் வெளியீடு குறித்த அறிவிப்பை நடிகையும் இப்படத்தின் தயாரிப்பாளருமான குஷ்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, வரும் 30ஆம் தேதி ‘அரண்மனை 3’ படத்தின் முதல் பாடல் வெளியாகவுள்ளது. 

 

கடந்த ஏப்ரல் மாதம் வெளியான ‘அரண்மனை 3’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு, படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்