Skip to main content

இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் உடல்நிலை குறித்து பரவிய வதந்தி... மருத்துவர்கள் விளக்கம்! 

Published on 12/03/2021 | Edited on 12/03/2021

 

sp jananathan

 

'இயற்கை', 'ஈ', 'பேராண்மை', 'புறம்போக்கு என்கிற பொதுவுடமை' உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமடைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன், நேற்று (11.03.2021) மயங்கிய நிலையில் வீட்டில் காணப்பட்டார். உடன் இருந்தவர்கள் அவரை மீட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட எஸ்.பி.ஜனநாதன், மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். இந்நிலையில், அவர் மரணமடைந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

 

இதுகுறித்து, அப்பல்லோ மருத்துவர்களிடம் நாம் விசாரித்தபோது, “மூளை ரத்தக்கசிவு காரணமாக நேற்று அப்பல்லோ மருத்துவமனையின் அவசரப்பிரிவில் இயக்குநர் ஜனநாதன் அட்மிட் செய்யப்பட்டார். பொது மருத்துவர் ரமா நரசிம்மன்தான் இரவில் ஆரம்பக்கட்ட சிகிச்சை அளித்தார். தற்போது, ஜனநாதனின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அதேநேரத்தில், தீவிர அறுவை சிகிச்சை செய்யலாமா என்று மூளை அறுவை சிகிச்சை நிபுணர் சீனிவாசன் பரமசிவம் தலைமையிலான டாக்டர்கள் ஆலோசித்துக்கொண்டிருக்கிறார்கள்” என விளக்கம் அளித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் முழு உருவச்சிலை திறப்பு! (படங்கள்)

Published on 26/12/2021 | Edited on 26/12/2021

 

மறைந்த திரைப்பட இயக்குநர் எஸ்.பி. ஜனநாதனின் முழு உருவச் சிலை மற்றும் படத்திறப்பு விழா அடையாற்றில் உள்ள டி.என்.ராஜரத்தினம் கலையரங்கில் நடைபெற்றது. விழாவில் எஸ்.பி.ஜனநாதனின் உருவப்படத்தை இந்திய விடுதலை போராட்ட வீரர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஐயா நல்லகண்ணு திறந்து வைத்து புகழ் வணக்க உரையாற்றினார்.  

 

அவரது முழு உருவச் சிலையை இந்திய சுதந்திரப் போராட்ட வீரர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் என்.சங்கரய்யா காணொளி வாயிலாகத்  திறந்து வைத்து உரையாற்றினார். விழாவில் நடிகர் விஜய் சேதுபதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே,பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு சி.மகேந்திரன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டு பேசினர்.

 

 

Next Story

எஸ்.பி.ஜனநாதன் மறைவு... லாபம் படம் குறித்து தயாரிப்பு நிறுவனம் விளக்கம்!

Published on 20/03/2021 | Edited on 20/03/2021

 

laabam

 

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லாபம்'. இப்படத்தை, விஜய் சேதுபதியுடன் இணைந்து 'சவன் சி என்டர்டெயின்ட்மென்ட்' நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்றதையடுத்து, இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் திடீரென மரணமடைந்தார். அவரது மரணம் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

இந்த நிலையில், லாபம் படத்தின் நிலை குறித்து தயாரிப்பு நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், லாபம் படத்திற்கான அனைத்துப் பணிகளையும் எஸ்.பி.ஜனநாதன் முடித்துக் கொடுத்துவிட்டதாகவும் எஞ்சியுள்ள ஒரு சில பணிகளை படக்குழுவினர் நிறைவு செய்வார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், அந்த அறிக்கையில்,  'படம் திட்டமிட்டபடி ஏப்ரல் மாதத்தில்  தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிரம்மாண்டமாக வெளியாகும்' என்றும் கூறப்பட்டுள்ளது.