Published on 05/10/2019 | Edited on 05/10/2019



தல அஜித் - எச்.வினோத் கூட்டணியில் உருவான 'நேர்கொண்ட பார்வை' படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இவர்கள் இருவரும் மீண்டும் இணையும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

இதற்கான ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே அஜித் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொண்டு கலக்கிவருகிறார். சமீபத்தில் தமிழ்நாடு ரைபிள் கிளப்பி சார்பாக கோவையில் நடந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்துகொண்டார். இந்நிலையில் நேற்று அவர் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொள்வதற்காக விமானநிலையம் வந்தபோது ரசிகர்களுடன் அஜித் செல்பி எடுத்துக்கொண்டது நேற்று வைரலானது. இந்நிலையில் தற்போது அவர் டெல்லியில் டாக்டர் கர்னி சிங் ஷூட்டிங் ரேஞ்சில் நடக்கும் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.