Skip to main content

நடிகை ஷோபனாவுக்கு ஒமிக்ரான் தொற்று 

Published on 10/01/2022 | Edited on 10/01/2022

 

actress shobana tested positive omicron

 

இந்தியாவில் குறைந்து வந்த கரோனா பரவல் தற்போது மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. தொற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்த அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் தொற்று எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, நாட்டில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக  கரோனாவிற்குத் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில் பிரபல நடிகை ஷோபனாவுக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில்," முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இருந்தபோதிலும், கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. உடல் வலி, சோர்வு, நடுக்கம் ,தொண்டை கரகரப்பு போன்ற அறிகுறிகள் முதல் நாளே அதிகமாக இருந்த நிலையில் அது தற்போது படிப்படியாக குறைய தொடங்கியது.  தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொண்டது எனக்கு மகிழ்ச்சி. அது கரோனா பாதிப்பில் இருந்து 85 சதவீதம் பாதுகாப்பை அளிக்கிறது. அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். இந்த கரோனா தொற்று ஒமிக்ரானுடன் முடிவுக்கு வர பிரார்த்திக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

நடிகை ஷோபனா 1980 மற்றும் 90களில் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்துள்ளார். இவர் தமிழில், 'இது நம்ம ஆளு', 'எனக்குள் ஒருவன்', 'பொன்மனச் செம்மல்', 'தளபதி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒன்றிணைந்த மோகன் லால் - ஷோபனா ஜோடி

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
mohanlal shobana at shooting spot of l 360

மலையாள முன்னணி நடிகர் மோகன் லால், கடைசியாக லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் மலைக்கோட்டை வாலிபன் படத்தில் நடித்திருந்தார். இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இப்படத்தை அடுத்து பிரித்விராஜ் இயக்கத்தில் ‘எல்.2 - எம்புரான்’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் சில படங்களை கைவசம் வைத்துள்ளார். 

இந்த நிலையில் மோகன்லாலின் 360ஆவது படம், தற்காலிகமாக எல்360 என்ற தலைப்பில் உருவாகி வருகிறது. இப்படத்தை தருண் மூர்த்தி இயக்க ஷோபனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் 15 வருடங்களுக்கு பிறகு மோகன் லால் - ஷோபனா இருவரும் இணைந்து நடிக்கின்றனர். இதற்கு முன்னால் 55 முறை இருவரும் இணைந்து நடித்துள்ளனர். அந்த அளவுக்கு இவர்களின் ஜோடி ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது . 

இந்தச் சூழலில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் மோகன்லாலும், ஷோபனாவும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்தித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

Next Story

33 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிக்கு ஜோடியாகும் நடிகை 

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
shobana to pair with rajini in thalaivar 171 after 33 years

ரஜினிகாந்த் தற்போது தனது 170ஆவது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இப்படத்தை ஜெய் பீம் பட இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கி வருகிறார். இப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

இப்படத்தைத் தொடர்ந்து 171ஆவது படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் கை கோர்த்துள்ளார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பரிவ் இணைந்துள்ளனர். இப்படத்தின் கதை எழுதும் பணிகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார். இந்த மாதம் படப்பிடிப்பு தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜூனில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.  

இப்படத்தில் ராகாவா லாரன்ஸ் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. பின்பு பாலிவுட் முன்னணி நடிகர் ரன்வீர் சிங் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இதில் ரன்வீர் சிங் நடிப்பது உறுதியாகிவிட்டதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் டைட்டில் டீசர் வீடியோ, வருகின்ற 22ஆம் தேதி வெளியாகவுள்ளது. இது தொடர்பான போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலானது. மேலும் அந்த போஸ்டரில் ரஜினி வித்தியாசமான தோற்றத்தில் இடம்பெற்றிருந்தார். மேலும் கையில் கடிகாரத்தை விலங்காக கட்டியிருந்தார். இதை வைத்து ஏகப்பட்ட கதைகள் ரசிகர்களால் யூகிக்கப்பட்டது.

 

shobana to pair with rajini in thalaivar 171 after 33 years

இந்த நிலையில் இப்படத்தில் ஷோபனா நடிக்க, அவரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவல் உண்மையாகும் பட்சத்தில் தளபதி படத்திற்குப் பிறகு 33 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரஜினிக்கு ஜோடியாக அவர் நடிக்க உள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது.