Skip to main content

"என் சிரிப்பின் அளவு பெருகிக்கொண்டே போக அவன் என்னை ஒரு பைத்தியக்காரனைப் போல.." - லதா சரவணன் எழுதும் 'அந்த மைக்ரோ நொடிகள்' #7

Published on 31/07/2020 | Edited on 01/08/2020
yஹ

 

 

கேள்விகள் பதில் தெரியாத முதுகை வளைத்துக்கொண்டு, அசூசையான கூனனின் சீழ்பிடித்த கொப்பளங்களில் இருந்து வெடிக்கும் சுடுநீரைப்போல, அது நொடிக்கொரு முறை வெடித்துக்கொண்டே இருக்க, வலியோடு கூடிய சுகம் ஒன்று வருடிக்கொடுக்க கால், கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்த அவனைப் பார்த்து, எனக்கு சிரிப்பு அதிகமாக வந்தது. தலைகவிழ்ந்த நிலையில் நான் செய்யும் சேட்டைகளை எல்லாம் அவன் சகித்துக் கொண்டே இருக்கிறான். என் சிரிப்பின் அளவு பெருகிக்கொண்டே போக அவன் என்னை ஒரு பைத்தியக்காரனைப் போல கலங்கிய சிவந்த விழிகளோடு பார்த்தான்.

 

நீ யார்? தெளிவற்ற வார்த்தைகள், ஏன் என்னை இப்படி? மீண்டும் கேள்விகள் வாயைப் பொத்திக்கொண்டு சிரித்தேன். நான்...நான்...யோசி நல்லா யோசி... இதுவரையில் நீ என்னைப் பார்த்தது இல்லை ஆனால் என்னை உணர்ந்திருக்கிறாய் நான் உனக்குள் தான் இருக்கிறேன் வாசலில் காலிங்பெல்லின் ஒலி, நான் அவனை விடுத்து அவனை பிணைத்திருந்த கயிற்றை எடுத்து என் தோளில் சுற்றியபடியே ரிவ்யூ மிரரில் எட்டிப்பார்த்தேன். ஒரு குட்டிப்பெண்.....சங்கிலியில் பிணைத்திருந்த கதவு முழுமையாக விலகாமல் என்ன என்றேன். அம்மா ஆன்ட்டிகிட்டே பருப்புப்பொடி வாங்கிட்டு வரச்சொன்னாங்க? என்றது ஆன்ட்டி இல்லையா? இல்லை...அவங்க போயிட்டாங்க

 

எப்போ வருவாங்க அங்கிள்...சட்டென்று அந்த குட்டிப்பெண்ணையும் உள்ளே இழுத்துப் போட்டால் என்ன என தோன்றிய எண்ணத்தை உடனே ரப்பர் இன்றி அழித்தேன். உடலில் ஏற்றிக்கொண்ட வீரியம் குறைந்தது. தெரியாது என்று பதிலுரைத்து முகத்தில் அறைந்தாற்போல் கதவைச் சாத்தினேன். அந்த அறைக்குள் நுழைவதற்குள் சற்று முன் அந்த குட்டிப்பெண் கேட்டுவிட்டுப் போன ஆன்ட்டி காலை இடறினாள். உள்ளே கட்டிப்போட்டு இருக்கிறேனே அவனின் மனைவி இடதுகாலால் அவளின் வயிற்றில் ஓங்கி உதைக்க அவள் சப்தமே கேட்காமல் மெளனமாக சோபாவின் பக்கம் உடலை நகர்த்திக்கொண்டாள். அந்த எதிர்மறை இல்லாமல் இருந்தது மிகவும் பிடித்திருந்தது. இடதுபுறம் எனது அடிக்குப் பயந்து அந்த இரண்டு உடல்களும் செயற்கையான மரத்தின் பின்புறம் ஒளிந்து கொள்ள, திருப்தியாய் அந்த அறைக்குள் நுழைந்தேன்.

ர

 

முதல் பார்த்ததை விடவும், ரொம்பவே பயந்து போயிருந்தான். சம் டிஸ்டபர்ன்ஸ் என்று சொல்லிவிட்டு அமர்ந்தேன். ம்...ஏற்கனவே முடிக்கற்றைகள் ஒவ்வொன்றையும் பிடிங்கியாகிவிட்டது. கொரடு கொண்டு முகச்சவரம் செய்யத் தேவையே இல்லாதபடி தாடியையும் மீசையையும் உருவியாகிவிட்டது. சொல்லப்படாத இடங்களில் எல்லாம் சிறுசிறு கோடுகள் போட்டாகிவிட்டது. அதில் துளிர்த்திருக்கும் ரத்தத்தையும் பார்த்தாகிவிட்டது இன்னும் என்ன மிச்சம்? போரடிக்குது இல்லை நரசிம்மா கொஞ்சநேரம் டிவி பார்க்கலாமா உனக்குத்தான் அது பிடிக்குமே ரிமோட் எடுத்துட்டு ஆன் செய்துவிட்டு சுவற்றின் ஓரம் சாத்திவைக்கப்பட்டு இருந்த பிரிட்ஜை திறந்தான்

 

டிவியின் செய்திகளில் கோகைனுக்குப் பதிலாக பிளாக்கா என்னும் போதை மருந்துகள் தமிழ்நாட்டில் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாகவும் சோமாலியா காடுகளில் அவை வளர்க்கப்படுவதாகவும் தகவல்கள் வந்தது. இந்தியாவிற்குள் குறிப்பாக தமிழ்நாட்டிற்குள் அவை ஊடுருவ யார் காரணம் என்று கண்டுபிடிக்கச்சொல்லி காவல்துறையினரை முடுக்கிவிட்டு இருக்கிறார் உள்துறை அமைச்சர். கோக்கைனுக்குப் பதிலாக கொண்டு வரப்பட்ட இந்த போதை மருந்து பயன்படுத்தப்படும் மனிதர்கள் அசாதாரணமான மனிதர்களாக மாறிவிடுகிறார்கள். இதை பயன்படுத்தும் நபரின் உடல் வெப்பநிலை 105 டிகிரிக்கு மேல் சுமார் 3 மணி முதல் 5 மணி நேரம் இருக்கிறது. இதனால் எக்ஸ்டீரிம் தாண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள்.

 

இன்னும் இன்னும் இத்தியாதிகளோடு பிளாக்காவின் புகழைப் பரப்பிக்கொண்டு இருந்தாள் அந்தப்பெண். பிரிட்ஜ்ஜை திறந்தான். அதில் வெறித்த கண்களோடு இறுகிய உடலோடு உறைந்த ரத்தமுமாய் ஏசியின் ஜில்லிப்பினை கிரகித்துக் கொண்ட அவளின் உடல். அலட்சியப்படுத்திவிட்டு அந்த பாட்டிலையும் சிரிஞ்சியினையும் எடுத்து துளி தண்ணீர் கலந்து அதை அவன் புஜத்தில் ஏற்றினான். மெளனமாய் டீப்பாயின் மேல் செங்குத்தாய் நின்றிருந்த மொபைல் போன் நடப்பவற்றை எல்லாம் உள்வாங்கிக்கொண்டு இருந்தது. இன்னும் டீவியில் லிப்ஸ்டிக் அணிந்த பெண், மருந்தின் உச்சியில் உடல் சூடு ஏற LED டிவியின் திரையின் மூலம் அவளைச் சிதைத்தான் கற்பனையில் !

ர

 

இன்னும் இன்னும் தொண்டையில் எரிந்த எரிச்சல் மயக்க நிலையோடு ஏறிய போதை வெப்பத்தின் உச்சத்தில் அவன் கைகள் நிலையில்லாமல் தரையில் நீச்சல் அடிப்பவனைப் போல தழைந்தது. கண்ணாடி மீன்தொட்டியில் தலையை நுழைத்தான், அகப்பட்ட மீன்களின் நழுவிய உடல்கள் இரையானது. வெப்பத்தின் வீரியம் அதிகரித்தது. பிணைந்திருந்த கயிற்றில் இருந்து நீக்கப்பட்ட விரல்களில் முளைத்திருந்த சிறு கத்தியால் உடலில் பொத்தல்களைப் போட்டான். விரல்களின் வேகம் அதிகரித்தது. சுகம்சுகம் உடலெங்கும் பரவியது. வடிந்த ரத்தம் அவனை பலவீனமாக்கியிருக்க வேண்டும். இப்போது திரையில் அந்த பெண்மறைந்து ஏதோ பாடல்.....கேட்கப்பட்ட இசை ஒரு வித ஆசுவாசத்தைக் கொடுக்க மீண்டும் பிளாக்காவை உடலில் செலுத்தினான் இம்முறை அதிகமான அளவில்....! 

 

உடல் பறந்தது. சூடேறிய ரத்தம் நரசிம்மனுக்கு இதுவரையில் தன்னை ஆட்டு வித்தவன் யார் என்று உணர்த்தியது. கண்ணாடியில் தெரிந்த அந்த உருவம் மீண்டும் சிரித்தது. இம்முறை அந்த சிரிப்பு நரசிம்மனையும் தொற்றிக்கொள்ள, பால்கனியின் கதவை உடைத்து 13வது மாடியில் இருந்து தலைகுப்புற சாலையை நோக்கி போய்கொண்டே இருந்தான் விஷ்ஷென்ற ஒலியுடன். வெப்பமான ரத்தம் முழுமையும் தரையில் சிதறி பூமியின் உஷ்ணத்தோடு கலந்தது. பிளாக்கா அவனைப் பார்த்து சிரித்து, தன் அடுத்த இரையை நோக்கி கோரப்பற்களுடன் நகர்ந்தது.

 

 

Next Story

மாணவியிடம் பேசிய கல்லூரி மாணவன் மீது தாக்குதல்;  போலீஸ் விசாரணை

Published on 31/01/2024 | Edited on 31/01/2024
beaten on college student who spoke to girl student

திருச்சி வயலூர் ரோடு ஜின்னா தெரு பகுதியைச் சேர்ந்தவர் முகமது கர்சத் (வயது 20). இவர் கேகே நகரில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் தனது நண்பர் ராகுல் என்பவருடன் திருச்சி வயலூர் ரோட்டில் உள்ள ஒரு ஜிம்னாஸ்டிக் பயிற்சி மையத்துக்கு சென்றார். அங்கே பயிற்சிக்கு வந்த மேரி என்ற மாணவியுடன் முகமது கர்சத் பேசியுள்ளார். இதனைப் பார்த்து ஆத்திரமடைந்த இன்னொரு மாணவர் எதற்காக அந்த மாணவியிடம் பேசுகிறாய் என்று தகராறு செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாணவர் முகமது கர்சத்தை எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த பாண்டி சஞ்சய் மற்றும் சிலர் சேர்ந்து அவரை கல் மற்றும் கையால் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து முகமது கர்சத் திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

உ.பி.யில் பரபரப்பு; ஆஸ்கர் விருது பெற்ற சிறுமியின் வீடு இடிப்பு

Published on 30/09/2023 | Edited on 30/09/2023

 

Oscar winner Pinki house demolished

 

உத்தரப்பிரதேசத்தில் ஆஸ்கர் விருது பெற்ற சிறுமி பிங்கியின் வீடு இடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

உத்திரப்பிரதேசம், மிர்சாபூர் மாவட்டத்தில், ராம்பூர் தாபி கிராமத்தில் வசித்து வந்தவர் சிறுமி பிங்கி குமாரி சோன்கர். இவருக்கு உதட்டில் பிளவு(Cleft lip) இருந்துள்ளது. அதற்கான சிகிச்சையை சில சமூக ஆர்வலர்களின் உதவியுடன் சிறுமிக்கு சரிசெய்து கொண்டார். இதனை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ‘ஸ்மைல் பிங்கி’ என்ற குறும்படம் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆவணப்(குறும்) படத்திற்கான ஆஸ்கர் விருதினை பெற்றது. இதனைத் தொடர்ந்து உலகத்தின் பார்வை பிங்கியின் கிராமத்தின் பக்கம் திரும்பியது. 

 

அந்த சமயத்தில் மிர்சாபூர் மாவட்ட நிர்வாக சார்பில் வீடு கட்டிக்கொள்ள இடம் கொடுக்கப்பட்டு பிங்கியின் குடும்பத்தினர் வீடுகட்டி வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 21 ஆம் தேதி வனத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு என்று கூறி பிங்கியின் வீட்டோடு சேர்த்து அந்த கிராமத்தில் உள்ள 30 வீடுகளையும் காலி செய்யுமாறு அறிக்கை வெளியிட்டனர். 

 

இது குறித்து பிங்கியின் தந்தை ராஜேந்திர சோன்கர்  கூறுகையில், “நாங்கள் வீடு கட்டும் பொழுது இந்த நிலம் வனத்துறையினருக்கு சொந்தமானது எனக் கூறவில்லை. அந்த கிராமத்தில் 70 வது வருடங்களாக எந்த தடையும் இன்றி வீடுகள் கட்டி வாழ்ந்து வருகின்றனர்” என்றார். அவரது வழக்கறிஞர் பேசுகையில், “வனத்துறையினர் தான் பிங்கியின் வீட்டிற்கு அடிக்கல்லை நாட்டினர். ஆனால் இன்று அவர்களே இதனை ஆக்கிரமிப்பு என சொல்கின்றனர்” என்றார். “இந்த விவகாரத்தில் யாருக்கும் பிரச்சனை ஏற்படாமல் நியாயமான முறையில் தீர்க்கப்படும்” என மிர்சாபூர் மாவட்ட மாஜிஸ்திரேட் பிரியங்கா நிரஞ்சன்  தெரிவித்திருக்கிறார்.