Skip to main content

தொடர்ந்து போராடுவோம் - சாம் கரன் பதிவு!

Published on 19/10/2020 | Edited on 19/10/2020

 

sam curran

 

13-வது ஐ.பி.எல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. தோனி தலைமையிலான சென்னை அணி 9 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகள், 6 தோல்விகள் கண்டு அணிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் 7-ஆம் இடத்தில் உள்ளது. அடுத்த சுற்றுக்கு முன்னேற குறைந்தது 8 வெற்றிகள் தேவையென்பதால், சென்னை அணி அடுத்து வரும் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இன்று நடைபெறும் 37-வது லீக் போட்டியில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. 

 

இந்நிலையில், சென்னை அணியின் இளம் வீரரான சாம் கரன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், "அடுத்த 5 பெரிய போட்டிகள் வரவிருக்கின்றன. தொடர்ந்து போராடுவோம்" எனப் பதிவிட்டுள்ளார். தற்போது இந்தப் பதிவானது வைரலாகி வருகிறது.