Skip to main content

வடசென்னையில் உருவாகும் புதிய ஸ்டேடியம்! அமைச்சர் கொடுத்த தகவல்!

Published on 28/09/2021 | Edited on 28/09/2021

 

New stadium to be built in North Chennai! Information given by the Minister

 

தமிழர்களின் பாரம்பரிய பெருமைமிக்க சிலம்ப விளையாட்டைப் பாதுகாக்கவும், தமிழர்களின் வீரக்கலையான சிலம்பத்தை உலகறியச் செய்யும் நோக்கத்திலும், மத்திய அரசின் ‘கேலோ இந்தியா’ திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுப் பட்டியலில் சேர்த்திட முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் அறிவுரையின்படி கோரப்பட்டது. அதனையேற்று, சிலம்பம் விளையாட்டினை மத்திய அரசின் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் விளையாட்டுத் துறை அங்கீகரித்து, ‘புதிய கேலோ இந்தியா’ திட்டத்தின் கீழான ‘விளையாட்டின் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கி ஊக்குவித்தல்’ என்ற கூறில் சிலம்பம் விளையாட்டினை சேர்த்துள்ளது. அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சிலம்ப விளையாட்டிற்கு 3 சதவீத இடஒதுக்கீடு என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

 

New stadium to be built in North Chennai! Information given by the Minister

 

இந்த அறிவிப்புகளுக்காக ‘நேசம் மனிதவள மேம்பாட்டு மையம்’ சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பாராட்டு விழா மற்றும் நன்றி அறிவிப்பு விழா நடைபெற்றது. சென்னை, இராயபுரம் தனலட்சுமி மேல்நிலைப் பள்ளியில் நேற்று (27.09.2021) மாலை இவ்விழா நடைபெற்றது. நேசம் மனிதவள மேம்பாட்டு மையம் ஒருங்கிணைப்பாளர் பாண்டிச்செல்வம் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றுத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா மற்றும் முனைவர் சுடர்கொடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

 

New stadium to be built in North Chennai! Information given by the Minister

 

இவ்விழாவில் கலந்துகொண்ட விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது, “தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பத்தை தமிழக அரசு உலகறியச் செய்யும். தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்ப கலை தமிழ்நாட்டில் எங்கு தோன்றியது, எப்படி தோன்றியது என ஆய்வு செய்ய விரைவில் உயர் அதிகாரிகள் குழு அமைக்கப்படும். சிலம்ப விளையாட்டு வீரர்களுக்குத் தமிழக அரசு வேலையில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. பள்ளிகளில் சிலம்ப விளையாட்டை கற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் எடுப்பதோடு, வடசென்னையில் சிலம்பம், கால்பந்து, குத்துச்சண்டை ஆகிய விளையாட்டிற்கென பிரத்யேக ஸ்டேடியம் அமைக்கப்படும். ஒலிம்பிக் விளையாட்டில் இடம்பெற்றுள்ள கார்ஃப்பால் விளையாட்டை இந்திய அரசு அங்கீகரித்துள்ளது. அதேபோல் தமிழக அரசும் அதை ஆய்வு செய்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு அமைச்சர் பேசினார். விழாவில் மாணவர்களும், சிறுவர்களும் சிலம்பாட்டம் ஆடி அனைவரையும் கவர்ந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பழைய சேர்மன் இருக்கையில் அமர்ந்து நெகிழ்ந்த அமைச்சர்

Published on 08/07/2023 | Edited on 08/07/2023

 

The minister was moved to sit in the old chairman's seat

 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கல்வித்துறை சம்பந்தமாக அரசுப் பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் கட்டுவது தொடர்பாக அவசர ஆய்வுக்கூட்டம், ஒன்றிய சேர்மன் மகேஸ்வரி சண்முகநாதன் தலைமையில் நடைபெற்றது.

 

அந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், தான் 10 ஆண்டுகள் சேர்மனாக இருந்த நினைவுகளோடு பழைய ஞாபகங்களை மறக்காமல், தான் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராக இருந்த அலுவலக அறைக்குச் சென்று, பெருந்தலைவர் இருக்கையைப் பார்த்தவர், ‘சேர் நல்லா இருக்கே...’ என்று அந்த இருக்கையில் அமர்ந்து நெகிழ்ந்தார். பழைய ஞாபகங்களை சக ஒன்றியக் குழு நிர்வாகிகளிடம் பகிர்ந்து கொண்டார்.

 

இந்த இருக்கையில் இருந்து தான் ஒன்றியத்தில் உள்ள மக்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஆலோசிப்போம். ஏராளமான மக்கள் நலத்திட்டங்களுக்கு இதிலிருந்து தான் கையெழுத்திட்டேன் என்றார். பழைய நினைவுகளோடு அமைச்சர் செய்த செயல் ஒன்றிய அலுவலகத்தில் அனைவரையும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

 

 

Next Story

மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்; அரசாணை வெளியீடு

Published on 23/05/2023 | Edited on 23/05/2023

 

Appointment of district responsible ministers; Promulgation of Ordinance

 

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்வர் ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் தமிழகத்தில் மாவட்டங்களுக்கான பொறுப்பு அமைச்சர்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் திட்டங்கள், வளர்ச்சி பணிகளை விரைவுபடுத்தவும், நலத்திட்டப் பணிகளை கண்காணிக்கவும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அரசாணை தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.

 

கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த ஆர்.காந்தி திருவள்ளூர் மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நாகை, மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த மெய்யநாதன் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மட்டும் பொறுப்பு வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை வருவாய் மாவட்ட பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டத்திற்கு அமைச்சர் கே.என்.நேருவும் தேனிக்கு அமைச்சர் ஐ.பெரியசாமியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நாகை மாவட்ட பொறுப்பு அமைச்சராக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நியமிக்கப்பட்டுள்ளார்.