இந்தியா அபார வெற்றி
ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியை துடைத்தெறிந்தது இந்திய அணி. கொழும்புவில் நடைபெற்ற 5வது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. முதலில் ஆடிய இலங்கை அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 238 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்திய அணி 46.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது.