Skip to main content

இந்திய அணிக்கு ஆதரவு கொடுங்கள்- "ஹர்பஜன் சிங்" ட்வீட்!

Published on 10/07/2019 | Edited on 10/07/2019

உலக்கோப்பை முதல் அரையிறுதி தொடரில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதின. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் எடுத்தது. 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் கே.எல். ராகுல், ரோஹித் சர்மா, விராட் கோலி, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

 

 

 

INDIA VS NEW ZEALAND SEMI FINAL MATCH WORLD CUP 2019

 

 

 

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பாஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியில் "இந்தியாவால் வெற்றி பெற முடியும்; இந்திய அணியை நம்பி ஆதரவு கொடுங்கள்" என்றார். நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் 6 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறும் நிலையில் ஹர்பஜன் சிங் ட்வீட் செய்துள்ளார். இந்திய அணி வெற்றி பெறும் முனைப்பில் மஹேந்திர சிங் டோனி , ரவீந்திர ஜடேஜா அதிரடியாக விளையாடி வருகிறார்கள்.