Skip to main content

எனது தவறுக்கு வருந்துகிறேன்! - மவுனம் உடைத்த டேவிட் வார்னர்!

Published on 29/03/2018 | Edited on 30/03/2018

தென் ஆப்பிரிக்காவுடனான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய குற்றத்தில் மூளையாக செயல்பட்டவர் டேவிட் வார்னர். இதனால், அவரது துணை கேப்டன் பதவி பறிக்கப்பட்டது. ஸ்பான்சர்ஷிப் மற்றும் ஐ.பி.எல். ஒப்பந்தங்கள் என பலவும் அவர் கைகளில் இருந்து பறிக்கப்பட்டன. 

 

உலக கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியிலும், அதிருப்தியிலும் ஆழ்த்தியுள்ள இந்த செயலுக்கு தாம் வருந்துவதாகவும், தம்மை மன்னிக்கவேண்டும் எனவும் வார்னர் தெரிவித்துள்ளார். 

 

பல்வேறு ஒழுங்கு நடவடிக்கைகளைச் சந்தித்த பின்னர், தற்போது மவுனம் உடைத்த டேவிட் வார்னர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘நாங்கள் செய்த தவறு கிரிக்கெட் விளையாட்டையே சேதப்படுத்திவிட்டது. இந்தத் தவறுக்காக நான் மிகவும் வருந்துகிறேன் மற்றும் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். இதனால், ரசிகர்கள் மற்றும் இந்த விளையாட்டுக்கு மிகப்பெரிய துயரத்தில் ஆழ்த்திவிட்டோம் என்பதை உணர்கிறேன். நான் சிறுவனாக இருந்தபோதில் இருந்தே நேசித்த ஒரு விளையாட்டின்மீது கறை ஏற்படுத்திவிட்டேன்’ என தெரிவித்துள்ளார்.

 

 

A post shared by David Warner (@davidwarner31) on

 

மேலும், ‘இந்தக் காலத்தில் என் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நம்பத்தகுந்த ஆலோசகர்களோடு நேரம் கழிக்கப்போகிறேன். கூடியவிரைவில் உங்கள் முன் பேசுவேன்’ எனவும் அதிக் பதிவிட்டுள்ளார்.

Next Story

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்; இந்திய அணி குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித்

Published on 06/06/2023 | Edited on 06/06/2023

 

World Test Championship; Australian captain Smith on Indian team

 

கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நாளை நடக்கிறது. இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இதனை ஒட்டி இரு அணிகளும் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்திய அணியில் பல வீரர்கள் காயம் காரணமாக போட்டியில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்ட காரணத்தால் அவர்களுக்கு மாற்றாக புதிய வீரர்களும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்திய அணியில், “ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், சித்தேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, கே.எல்.ராகுல், பரத், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாகூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெயதேவ் உனத்கட்” ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக ரஹானே சேர்க்கப்பட்டுள்ளார். விபத்து காரணமாக சிகிச்சை பெற்று வரும் ரிஷப் பண்ட்டிற்கு பதிலாக ஸ்ரீகர் பரத்தும், பும்ராவுக்கு பதிலாக ஜெயதேவ் உனத்கட்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

 

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் இந்திய அணி குறித்து கூறியதாவது, “ஐபிஎல் போன்ற போட்டிகள் உலக அளவில் புகழை எட்டியுள்ளது. இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்த கேள்விகள் அடிக்கடி எழுகிறது. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு என்றும் அழிவில்லை. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி எதிர்கொள்வது மிகவும் சவாலான விஷயம். இந்திய அணி தரமான மற்றும் கலவையான வேகப்பந்து வீச்சாளர்களை பெற்றுள்ளது. முகமது ஷமி, சிராஜ் ஆகியோர் சிறப்பாக செயல்படுகின்றனர். 

 

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் உண்மையாகவே சிறப்பாக செயல்படுகிறார்கள். அவர்கள் எல்லா நிலைகளிலும் சிறப்பாக செயல்படுகிறார்கள். மொத்தமாக அவர்கள் சிறந்த பந்துவீச்சை கொண்டுள்ளனர். இந்த போட்டியில் இந்திய அணிக்கு எதிராக நாங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும்” என்றார்.

 

 

Next Story

வாக்கு சீட்டு முறை அமல்படுத்த கோரிய வழக்கு.. வழக்கை முடித்துவைத்த உயர் நீதிமன்றம்..! 

Published on 27/03/2021 | Edited on 27/03/2021

 

Case sought to enforce ballot system .. High Court closes case ..!


தேர்தலில் வாக்குச் சீட்டு முறையை மீண்டும் பயன்படுத்த உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

 

சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஜி.பார்த்திபன் என்பவர் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில், ‘தமிழக சட்டப்பேரவை தேர்தலில் முன்பு இருந்ததுபோல் மீண்டும் வாக்குச் சீட்டு முறையை கொண்டுவருமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார். 

 

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக தெளிவான நடைமுறைகள் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த தேர்தலுக்கு அறிமுகப்படுத்துவது இயலாத காரியம் என்பதால் அடுத்தடுத்து வரக்கூடிய தேர்தல்களில் வாக்குச் சீட்டை அறிமுகப்படுத்த வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

 

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில், இதே கோரிக்கை தொடர்பாக உச்ச நீதிமன்றம் விசாரித்து முடிவெடுக்கப்பட்ட பிறகே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மட்டும் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், மீண்டும் வாக்குச் சீட்டு முறையைக் கொண்டுவர வாய்ப்பில்லை என விளக்கம் அளிக்கப்பட்டது.

 

இந்த வாதத்தை ஏற்ற  நீதிபதிகள், ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தீர்வு கண்டுள்ள ஒரு விவகாரத்தை மீண்டும் விசாரித்து மீண்டும் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்ற காரணத்தால், மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று கூறி, பார்த்திபனின் வழக்கை முடித்துவைத்தனர்.