Skip to main content

ஊரடங்கால் வேலை இழந்த 5000 குடும்பத்துக்கு உணவு வழங்க ஹர்பஜன் முடிவு!

Published on 08/04/2020 | Edited on 08/04/2020


உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 14 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 82 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர்.இந்தியாவில் 140-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 5000-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில்,இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. 
 

g


 

இதன் ஒருபகுதியாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கின் காரணமாகப் பலரின் வாழ்வாதாரமும் கேள்விக் குறியாகியுள்ளது.இதற்கிடையே பஞ்சாப்பின் ஜலந்தர் மாவட்டத்தில் இந்த ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட 5000 குடும்பத்திற்கு உணவு வழங்க ஹர்பஜன் சிங் உறுதி அளித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறும்போது, "வீடு இல்லாதவர்கள், வேலை இல்லாதவர்களுக்கு அவர்கள் இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை உணவு வழங்கப்படும்"என்று அவர் கூறியுள்ளார்.