Skip to main content

ஓய்வில் 360 டிகிரி...

Published on 26/05/2018 | Edited on 26/05/2018

இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு விளையாட்டு வீரரின் வீடியோ வெளியானது. அந்த வீடியோ வெளியான பின் விளையாட்டு வீரர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியது. வீடியோவில் பேசியது என்னவென்றால், “நான் உடனடியாக அனைத்து தரப்பு சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்றுக்கொள்ளப்போவதாக முடிவு செய்துள்ளேன். இது மற்றவர்களுக்கான நேரம். எனக்கு ஒரு மாற்றம் தேவை, உண்மையிலேயே நான் டையர்ட் ஆகிவிட்டேன். எனக்கு எல்லாமே அந்த பச்சை மற்றும் கோல்ட் நிற உடைதான். எனக்கு உதவிய தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் ஊழியர்கள், வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். நான் மேலும் வருவாய் ஈட்டுவதற்காக இதிலிருந்து செல்லவில்லை, எரிவாயு தீர்ந்தும் ஓடிக்கொண்டிருக்கிறேன். இது நான் வெளியேற வேண்டிய காலம். உங்களுடைய இறக்கத்திற்கும், பெருந்தன்மைக்கும், உங்களுடைய புரிதல்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்" என்று தன் விடைபெறும் துயரத்தை ரசிகர்களுக்கு பகிர்ந்துவிட்டு, ரசிகர்களையும் கலங்க செய்துவிட்டார், ஏ.பி. டிவில்லியர்ஸ்.
 

abd

 

 

 

ஏபி டிவில்லியர்ஸ் என்ற மனிதர் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்தான். ஆனால் அவர் இந்தியாவில் விளையாடினாலும், உலகில் வேறெந்த மைதானத்தில் விளையாடினாலும் அவரை கொண்டாட ஒரு கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். தோனி ஆடுவது சென்னை அணிக்காக இருந்தும் அவரை மற்ற அணி ரசிகர்களும் கொண்டாடுகின்றனரே அது போலத்தான் ஏபிடியையும் அவர் எந்த அணிக்காக விளையாடினாலும் அவரை எதிரணி ரசிகர்களும் கொண்டாடுவார்கள். இதுபோன்ற ரசிகர்களை சம்பாரிப்பது ஒன்றும் எளிதல்ல. விளையாட்டு வீரர்களுக்கு ரசிகர் அமைவதெல்லாம் ஒன்று அவரது ஆட்டத்தை பொறுத்து மற்றொன்று அவரின் நடவடிக்கையை பொறுத்தது. 
 

 

abd 1

 

 

 

ஏபிடிக்கு ரசிகர் பட்டாளம் இதுபோன்று அமைந்ததற்கு காரணம் இந்த இரண்டுமே தான். அவரது ஆட்டம், பேயாட்டம். பந்து வீசுபவர் எங்கு பந்தை வீசினாலும் அதை லாபகமாக சிக்ஸ் அடிக்கும் ஒரே வீரர் இவர்தான். வேகப்பந்தை ஸ்விப் அடிப்பதும் இவர்தான். இவரின் பேட்டிங்கை ரசிப்பவர்கள் இவருக்கு 360 டிகிரி என்ற செல்லப்பெயரையும் வைத்து இருக்கின்றனர். மைதானத்தின் பிட்ச் பேட்டிங்குக்கு சாதகமாக இருந்தாலும், பவுலிங்குக்கு சாதகமாக இருந்தாலும் ஏபிடியின் அதிரடி ஆட்டத்தை தடுப்பது கொஞ்சம் கடினம்தான். பேட்டிங்கை பற்றியே பேசிக்கொண்டிருக்கிறோம் என்று நினைக்காதீர்கள். பீல்டிங்கிலும் இவர் ஒரு குட்டி ஜான்டி ரோட்ஸ் என்பது ஊரறிந்தது. வீக்கட் கீப்பராக நின்றபோதிலும், பீல்டராக பவுண்டரி கோட்டிலும், 30 யார்ட்க்கு உள்ளும் இவர் பிடித்த கேட்சுகள் எல்லாம் வேற லெவல். ஒரு சாதரண பீல்டராக இருந்தால் பந்தை தடுக்க மட்டுமே செய்திருப்பார், ஆனால் ஏபிடியோ அதை கேட்சாக மாற்றுவார். 
 

 

abd crying

 

 

 

ஏபிடியின் வெற்றிக்கு மூன்று விஷயங்கள்தான் காரணம் ஒன்று வெறித்தனமான பேட்டிங், இரண்டு சிறுத்தைப்போல பீல்டிங், மூன்று அன்பை கொட்டும் மனசு. 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜோஹன்னஸ்பர்க் மைதானத்தில் இவர் பிங்க் உடை அணிந்து ஆடிய பேட்டிங்கை பார்த்தவர்களுக்கு கண்டிப்பாக இவர் ஒரு ஏலியனாகதான் தெரிந்திருப்பார். வைடாக பந்து போட்டாலும் பந்தை நோக்கி சென்று மடக்கி பின்னே அடிக்கும் சிக்ஸுகள். டைமிங்கில் அடிக்கும் சிக்ஸுகள் என்று முப்பத்தியொரு பந்துகளில் சதத்தைக் கடந்தார். இன்றுவரை அதை யாராலும் சர்வதேச கிரிக்கெட்டில் முறியடிக்க முடியவில்லை. பீல்டிங் செய்யும் போது பாய்ந்து பிடித்த கேட்சுகளை பார்க்கும் போது சுப்பர் மேன் நிஜம்தானோ என்ற எண்ணத்தை கொண்டு வந்துவிடும். என்னதான் இத்தனையும் உழைத்து தன்னை மெருகேற்றியவருக்கு, அதிர்ஷ்டம் ஒரு போதும் கைகொடுக்கவில்லை. இந்த அதிர்ஷ்டமின்மை அவருக்கு மட்டுமில்லை, தென்னாபிரிக்கா நாட்டிற்கே உண்டானது. என்னதான் கிரிக்கெட்டில் தலைசிறந்த அணியை வைத்திருந்தாலும் உலகக்கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வந்தனர். இவர் தலைமையில் ஆடிய 2015 உலக கோப்பையிலும் இதே நிலைதான். வெளியேறியபோது மனமுடைந்து அழுதுகொண்டே சென்றார். ஏர்போர்ட்டில் ரசிகர் ஒருவர் உங்களை கட்டிப்பிடித்து ஆறுதல் சொல்ல ஆசையாக இருக்கிறது என்று பலகையை வைத்து நிற்க அதையும் செய்தார். நீங்கள் என்னதான் உலகக்கோப்பையை ஜெயிக்கவில்லை என்றாலும் கோடானகோடி ரசிகர்களை ஜெயித்துவிட்டீர்கள் ஏபிடி. இந்திய மக்களாகிய நாங்கள் உங்களை கண்டிப்பாக மிஸ் செய்வோம்.   

 

 

Next Story

வீறு கொண்டு எழுந்த விராட்; பஞ்சாப்பை திணறடித்த தினேஷ்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
rcb vs pbks ipl live score updated kohli dinesh creates the magic

ஐபிஎல் 2024 ஆறாவது லீக் ஆட்டம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி பஞ்சாப் அணி முதல் பேட் செய்ய களமிறங்கியது. அந்த அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. அந்த அணியின் முக்கிய ஆட்டக்காரர்களில் ஒருவரான பேர்ஸ்டோ 8 ரன்களில் ஆட்டம் இழக்க அடுத்து வந்த பிரப் சிம்ரன் சிங் 25 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அடுத்து வந்த லிவிங்ஸ்டன் 17 ரன்களில் ஆட்டம் இழந்தார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபக்கம் கேப்டன் தவான்  பொறுப்பாக ஆடி 45 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். சாம் கரண்,  ஜித்தேஷ் சர்மா ஜோடி ஓரளவு அதிரடி காட்டியது. சாம் கரண் 17 பந்துகளில் 23 ரன்களும் ஜித்தேஷ் சர்மா 20 பந்துகளில் 27 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். கடைசி கட்ட ஓவர்களில் சஷாங் சிங்கின் 21 ரன்கள் பஞ்சாப் அணிக்கு கௌரவமான ஸ்கோரை எட்ட உதவியது. 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது.

பெங்களூர் அணி தரப்பில் சிராஜ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் தயால், அல்சாரி ஜோசப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி ஆடத் தொடங்கியது. ஆரம்பம் முதலே அதிரடியைத் தொடங்கினார் கோலி. கேப்டன் டுபிளசிஸ் 3 ரன்களில் வீழ்ந்தார். க்ரீன் 3 ரன்களில்  ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடிய பட்டிதார் 18 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் 3 ரன்களில் வெளியேறி மீண்டும் ஏமாற்றினார். அடுத்து வந்த அனுஜ் ராவத் ஓரளவு நிதானம் காட்ட மறுபக்கம் கோலி தனது அதிரடியைத் தொடர்ந்தார். 

அணியின் வெற்றிக்கு 4 ஓவர்களில் 47 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கோலி 77 ரன்களில் அவுட் ஆனார். பின்னர் அனுஜ் ராவத்தும் 11 ரன்களில் எல்.பி.டபுள்யூ ஆக ஆர்சிபி அணிக்கு சிக்கல் எழுந்தது. பின்னர் தினேஷ் கார்த்திக்குடன் இம்பாக்ட் வீரராக தயாலுக்கு பதிலாக மகிபால் லொம்ரோர் களமிறங்கினார். வந்தவுடன் அதிரடி காட்டத் துவங்கினார். பின்னர் தன் பங்கிற்கு தினேஷ் கார்த்திக்கும் அதிரடியைத் தொடங்கினார். தினேஷ் கார்த்திக் 10 பந்துகளில் 28 ரன்களும், லொம்ரோர் 8 பந்துகளில் 17 ரன்களும் எடுத்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

இறுதியில் ஆர்சிபி அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி தரப்பில் ரபாடா, ப்ரார் தலா 2 விக்கெட்டுகளும், ஹர்ஷல், சாம் கரண் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். சிறப்பாக ஆடி 77 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த கோலி ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டு போட்டிகளில் ஆடியுள்ள ஆர்சிபி அணிக்கு இது முதல் வெற்றியாகும். இதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் பெங்களூரு அணி 6ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. முதல் ஐந்து இடங்களில் ராஜஸ்தான், சென்னை, குஜராத், கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் உள்ளன.

Next Story

CSK vs RCB: ராவத் - தினேஷ் இணை அதிரடியால் பெங்களூரு ரன்கள் குவிப்பு

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
CSK vs RCB ipl latest live score update

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த 17 வது சீசன் ஐபிஎல் தொடர் ஆனது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று கோலாகலமாக தொடங்கியது. ஐபிஎல் தொடக்க விழாவானது ஏ. ஆர். ரகுமான் அவர்களின் இசை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. மேலும் இந்த தொடக்க விழாவில் இந்தி பாடகர் சோனு நிகம் மற்றும் இந்தி நடிகர் அக்ஷய் குமார் டைகர் ஷெராப் உள்ளிட்டோர் ஏ. ஆர். ரகுமான் துள்ளல் இசைக்கு நடனமாடி ரசிகர்களை மகிழச் செய்தனர்.

தொடக்க விழா முடிந்த பின்பு முதல் ஆட்டம் சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் டூப்ளசிஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய ஆர். சி. பி அணிக்கு கோலி மற்றும் டூப்ளசிஸ் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். டூ ப்ளசிஸ் அதிரடி காட்ட, கோலி நிதானம் காட்டினார். சிறப்பாக ஆடிய டூப்ளசிஸ் 35 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.  அடுத்து வந்த, கடந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட ராஜட் பட்டிதார் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.  இவர்கள் இருவரின் விக்கெட்டையும் முஷ்டபிசுர் ரஹ்மான் அடுத்து அடுத்து எடுத்தார்.

அடுத்து வந்த அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்மெல்லும் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அதன் பின்பு வந்த கேமரூன் கிரீன் மற்றும் கோலி இணை ஓரளவு பொறுமையாக ஆடியது.  கோலி 21 ரன்களுக்கும்,  கேமரூன் க்ரீன் 18 ரன்களுக்கும் ஆட்டம் இழந்தனர். இந்த ஆட்டத்தில் கோலி 6 ரன்களை எடுத்தபோது டி20 கிரிக்கெட் 12000 ரன்களை கடந்துள்ளார். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 12000 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் மற்றும் ராவத் இணை சிறப்பாக ஆடியது. அதிரடி காட்டிய இருவரும் பந்துகளை சிக்ஸர்களுக்கும் பவுண்டரிகளுக்கும் அனுப்பிய வண்ணம் இருந்தனர்.  மிகச் சிறப்பாக ஆடிய ராவத் , தேஷ்பாண்டே ஓவரில் மூன்று சிக்ஸர்களை பறக்க விட்டார். தினேஷ் கார்த்திக் தன் பங்குக்கு அவ்வப்போது பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை விளாசினார். ராவத்  48 ரன்களும், தினேஷ் கார்த்திக் 38 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. சென்னை அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய முஷ்டபிசுர் ரகுமான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.