Skip to main content

யூ-ட்யூப் சேனல் தொடங்கும் இளைஞர்களுக்கு விக்னேஷ்காந்த்தின் சக்ஸஸ் டிப்ஸ்! 

Published on 19/02/2019 | Edited on 19/02/2019

தமிழ் யூ-ட்யூப் வட்டத்தில் மிக வெற்றிகரமாகத் திகழும் 'பிளாக் ஷீப்' சேனலின் முக்கிய அங்கம், யூ-ட்யூபில் வளர்ந்து, பிஸியான தொகுப்பாளராகி இப்போது சினிமாவிலும் தொடர்ந்து நடித்துவரும் விக்னேஷ்காந்த்திடம் புதுசா யூ-ட்யூப் சேனல் ஆரம்பிக்குற இளைஞர்களுக்கு, எப்படி இந்த டிஜிட்டல் மீடியாவை எப்படி பயன்படுத்தணும், எப்படி வளரலாம் என்று டிப்ஸ் கேட்டோம்... 

 

vignesh kanth

 

ஒரு முக்கியமான கண்டன்ட், இதை எப்படியாவது மக்கள்கிட்ட கொண்டுபோய் சேர்க்கணும்னு ஒரு வீடியோ பண்ணுனா அதை 1 லட்சம் பேர்தான் பார்ப்பாங்க. அதே ஒரு கில்மா கண்டன்ட், வெளியே ஒரு தலைப்பு உள்ள வேற மேட்டர் இருந்தா அதை 10 லட்சம் பேர் பாத்துடுறாங்க. இது மாதிரியான சூழலில் சேனலோட தன்மையையும் ஆடியன்ஸோட தன்மையையும் புரிஞ்சுக்கிட்டு நாம சொல்ல நினைப்பதையும் கலந்து சொல்வதுதான் டிஜிட்டல் மீடியாவுல வீடியோ பண்றதுக்கான ஒரே சாத்தியம். இப்பக்கூட ப்ளாக் ஷீப்ல ‘ஜால்றா’னு ஒரு நிகழ்ச்சி பண்றோம். அந்த நிகழ்ச்சியோட நோக்கம் இதுதான். இப்ப நாம யாரவேணும்னாலும் கலாய்க்க முடியுது. பேச்சு சுதந்திரத்தை முழுசா பயன்படுத்த ஆரம்பிச்சுட்டோம், அதே நேரத்துல அதை தவறா பயன்படுத்தவும் ஆரம்பிச்சுட்டோம். இதை உணர்த்துவதுதான் அந்த நிகழ்ச்சியோட நோக்கம். தி.மு.க இந்த 50 ஆண்டுகால திராவிட ஆட்சியில எவ்வளவோ திட்டங்களை கொண்டுவந்துருக்காங்க அதையெல்லாம் மறந்துட்டு இப்போ இருக்க நிலைமைய மட்டும் வச்சு அவங்கள கலாய்க்குறோம். முன்னாடியெல்லாம் எம்.ஜி.ஆர் ஒரு ஐகான், அவரை யாருமே கலாய்க்க மாட்டாங்க. சூப்பர் ஸ்டாரை கலாய்ச்சு எந்த மேடையிலும் பேசிட முடியாது. ஆனா இப்போ அவரை கலாய்க்காத மேடைகளே இல்லை. யார வேணும்னாலும் கலாய்க்கலாம். ஆனால், அவங்க இந்த இடத்துக்கு வர எவ்வளவு உழைச்சுருக்காங்கனு தெரிஞ்சுக்கிட்டு கலாய்ங்க.

 

 

 

Next Story

“படத்தைப் பார்த்துட்டு போய் ஓட்டு போடுங்க” அரசியல் களமான திரையரங்கம் - உறியடி 2 குறித்து மக்கள் கருத்து   

Published on 05/04/2019 | Edited on 05/04/2019

சூர்யாவின் தயாரிப்பில் உறியடி 2 வெளியாகியுள்ளது. ஏற்கனவே உறியடி முதல் பாகம் பல அரசியல் கருத்துக்களைப் பேசி இளைஞர்களிடையே வரவேற்பை பெற்றிருந்தது. தொடந்து உறியடி இரண்டாம் பாகம் மிகுந்த எதிர்ப்பார்பில் வெளியாகியுள்ளது. படம் தொடங்கும்முன் படத்தின் இயக்குனரும் நடிகருமான விஜயகுமார் “நேர்மையான ஒரு படத்தை, சொல்ல வேண்டிய ஒரு கதையை சொல்லியிருக்கோம். பிரச்சார நெடியில் இல்லாமல் முழுமையான படமாக இதை எதிர்ப்பார்கலாம்” என்று தெரிவித்திருந்தார். தொடர்ந்து படம் பார்த்துவிட்டு வெளியில் வந்த ரசிகர்கள் படத்தைவிட அரசியல் குறித்தே அதிகமாக பேசினர்...

 

People's opinion about uiyadi 2


 
“ஸ்டெர்லைட் மாதிரி ஆலையை கொண்டு வரணும்னா அதுக்கான பாதுகாப்பு விஷயங்களை சரியா கவனிச்சுருக்கணும், அதை அரசாங்கமும் தெரிஞ்சுவச்சுருக்கணும், மக்களுக்கும் அது தெரியணும் அப்படினு செகண்ட் ஹாஃபில் சொல்லியிருக்காங்க. எப்பவுமே ஆளுங்கட்சி எதிர்கட்சியாகுது திரும்பவும் எதிர்கட்சி ஆளுங்கட்சியாகுது. எல்லாமே நம்ம போடுற ஓட்டுல தானே இருக்குனு ஃபர்ஸ்ட் ஹாஃபில் சொல்லியிருக்காங்க” 
 

“ஸ்டெர்லைட்டை மூட சொல்றாங்க, தயவுசெஞ்சு எல்லாரும் சேர்ந்து மூடிடுங்க. நானும் வறேன்”
 

“ஏப்ரல் 18 தேர்தலில் கண்டிப்பா மக்களுக்கு நல்லது செய்யணும்னு நினைக்கிற படிச்ச இளைஞர்களுக்கு ஓட்டுப் போட சொல்லி பத்துபேர் கிட்டயாவது நான் சொல்லுவேன். அரசியல் மாற்றம் உடனே நடந்துடாது, அதை நாம் நடத்துவோம்”
 

“ஒரு பெரிய பிரச்சனையை பேசி அதற்கான தீர்வையும் உறியடி ஸ்டைலில் சொல்லியிருக்காங்க. அந்த கோவம் ரொம்ப சாரியாக இருந்துச்சு”
 

“சாமானிய மனிதனுடைய வலியையும் வேதனையையும் தெளிவா சொல்லியிருக்க படம். 100 சதவீதம் சரியான படம். இதைப் பார்த்துட்டு போங்க, சரியான ஆளுக்கு ஓட்டுப் போடுங்க” என்று பெரும்பாலான ரசிகர்கள் படத்தை தேர்தலுடன் ஒப்பிட்டு பேசி வருகின்றனர். தொடர்ந்து யூ-ட்யூப் பிரபலம் ஆர்.ஜே.விக்னேஷ் காந்த் படத்தைப் பற்றிக் கூறுகையில்...
 

“உறியடி 1 ஒரு ஆழமா அரசியல் பேசுனுச்சு. அதைவிட ஆழமான அரசியலை உறியடி 2 வும் பேசியிருக்கு. சர்வதேச அரசியலை ரொம்ப எளிமையாக சொல்லியிருக்கு. போராட்டம் வேண்டும் வேண்டாம்னு சொல்றவுங்க மத்தியில் ஒரு மாசுபாடு ஏற்பட்டால் மக்களோட வலி எப்படி இருக்கும் அப்படினு சொல்லியிருக்காங்க. மனம் கனத்துதான் படம் பார்க்கவேண்டியிருக்கு. இந்த படம் எப்போ வந்தாலுமே அதுக்கப்புறம் வருகிற எலெக்‌ஷனின் போது இந்தப் படத்தைப் பற்றி நினைச்சுதான் ஆகணும். தேர்தல் அரசியலையும் தாண்டி பிரச்சனைகள் எங்கயோ யாருக்கோ நடக்குதுனு நினைச்சுக்கிட்டு இருப்போம் இல்லையா, அந்த பிரச்சனை நமக்கு நம்ம வீட்டில் நடந்தா அந்த வலி எப்படி இருக்கும்னு காட்டியிருக்காங்க. படத்தால் மாற்றம் வந்துடும் என்றால் 75 வருஷத்தில் எப்பவோ மாற்றம் வந்துருக்கும். ஆனால், இந்த படம் பேசியிருக்க விஷயம் எல்லோருக்குள்ளும் ஆழமாக பதிய வேண்டிய ஒன்னு”என்றார். 
 

 

 

 

Next Story

'எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய சிவகார்த்திகேயன் சாருக்கு நன்றி' -  'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' நாயகி சிலிர்ப்பு 

Published on 05/04/2019 | Edited on 05/04/2019

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ரியோ ராஜ் மற்றும் ஷிரின் காஞ்ச்வாலா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தில் ராதாராவி, நாஞ்சில் சம்பத், ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் மற்றும் சில பிரபலமான யு டியூப் நடிகர்கள் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

 

shirin

 

ஷபீர் இசையில் உருவாகும் இப்படத்தின் 80% பகுதிகள் பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டிருந்தாலும், படத்தின் முடிவில் முக்கியமான, ஒரு வலுவான கருத்தை கொண்டுள்ளது. இது அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் நாயகியாக நடித்துள்ள  ஷிரின் காஞ்ச்வாலா இந்த படத்தில் பணிபுரிந்த அனுபவங்களை பற்றி மிகவும் மகிழ்ச்சியோடு பகிரும்போது....

 

 

"ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக நான் விமான பணிப்பெண்ணாக பணி புரிந்திருக்கிறேன். சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் பேனரில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததை மிகப்பெரிய அதிர்ஷ்டமாக கருதுகிறேன். எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய சிவகார்த்திகேயன் சார் மற்றும் கார்த்திக் வேணுகோபாலன் ஆகிய இருவருக்கும் நன்றி. மொத்த குழுவும் மிகவும் நட்புடன் பழகினர். நான் இந்த படத்தில் பணி புரிந்த ஒவ்வொரு நிமிடமும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். சிவகார்த்திகேயன், கார்த்திக் வேணுகோபாலன் மட்டுமல்ல, படத்தில் உள்ள ஒவ்வொரு கலைஞர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் எனக்கு மிகவும் உதவியாகவும் ஆதரவாகவும் இருந்தனர். ரியோ ராஜ் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். நான் அவரது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்திருக்கிறேன். அவர் இங்கு பல கடினமான காட்சிகளை கூட ஒரே டேக்கில் நடித்ததை பார்க்க பிரமிப்பாக இருந்தது. இது எனது முதல் தமிழ் திரைப்படம். கதை அம்சம் உள்ள நல்ல பல திரைப்படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்" என்றார்.