Skip to main content

இந்த சிலையை எங்கே வைக்கப் போகிறீர்கள்?

Published on 08/02/2019 | Edited on 09/02/2019

வாழ்க்கையைக் கடமைக்கு என்று கழிப்பவர்கள் நிறைய பேர் உள்ளனர். இவர்களுக்கு எதிலுமே சுவாரசியம் இருக்காது. ஒரு ஒழுங்குமுறை இருக்காது. நேர நிர்வாகம் இருக்காது.சாப்பிடுவதையும் கடமைக்கு என்று நினைப்பார்கள். விழாக்கள் கொண்டாடுவதையும் கடமைக்கு என்று நினைப்பார்கள். திருமணம் செய்து கொள்வதையும் கடமைக்கு என்றே எண்ணுவார்கள். இப்படி தங்கள் வாழ்வின் எந்தவொரு செயலையுமே கடமைக்கு என்றே கருதுவார்கள். இவர்களால் நிச்சயமாக எதனையுமே சாதிக்க முடியாது.  காலம்  பொன் போன்றதுகடமை கண் போன்றது என்பார்கள்.சிற்பி ஒருவர் சிலை ஒன்றை செதுக்கிக் கொண்டிருந்தார். அந்த வழியே வந்த வழிப்போக்கர் ஒருவர் சிலை செதுக்கும் அழகைப் பார்த்து ரசித்தார்.
 

statue working image

அப்போது அருகில் அதேபோன்ற சிலை ஒன்றும் இருப்பதைப் பார்த்தார். சந்தேகத்துடன், ‘‘யாராவது ஒரே மாதிரி இரண்டு சிலைகள் செதுக்க சொன்னார்களா?’’ என்று சிற்பியிடம் கேட்டார்.‘‘இல்லையே’’ என்றார் சிற்பி.‘‘அப்புறம் எதற்காக ஒரே மாதிரி இரண்டு சிலைகள் செதுக்கிக் கொண்டிருக்கிறீர்கள்?’’ என்று கேட்டார் வழிப்போக்கர்.‘‘அந்த சிலையில் சின்ன குறை ஏற்பட்டுவிட்டது. அதனால்தான் வேறொரு சிலையை செதுக்குகிறேன்’’ என்றார் சிற்பி.‘குறை எங்கே இருக்கிறது?’ என்று அந்த சிலையைக் கூர்ந்து பார்த்தார் வழிப்போக்கர். அவர் கண்களுக்கு எதுவும் தெரியவில்லை.‘‘இதில் எந்தக் குறையும் இருப்பதுபோலத் தெரியவில்லையே!’’ என்றார் வழிப்போக்கர் சந்தேகத்துடன்.‘‘அதன் மூக்கு பகுதியை நன்றாக உற்றுப் பாருங்கள். ஒரு சிறு கீறல் விழுந்திருப்பது தெரியும். அதனால்தான் இந்த சிலையை வடிக்கிறேன்’’ என்றார் சிற்பி.நன்றாக உற்றுப் பார்த்த பிறகுதான் அதில் மிக மெல்லிய கீறல் ஒன்று இருப்பது தெரிந்தது.இந்த சிலையை எங்கே வைக்கப் போகிறீர்கள்?’’ ‘‘அதோ தெரிகிறதே அந்த மேடையில்தான்’’ என்று சுட்டிக் காட்டினார் சிற்பி.மேடையைப் பார்த்த வழிப்போக்கர், ‘‘அது எவ்வளவு உயரம் இருக்கும்?’’ என்று கேட்டார். இருபது அடி உயரம் என்றார் சிற்பி. அவ்வளவு உயரத்தில் வைக்கும்போது கீறல் இருப்பது யாருக்கும் தெரியாதே. பிறகு ஏன் கஷ்டப்பட்டு இன்னொரு சிலையை வடிக்கிறீர்கள்? என் மனசாட்சிக்குத் தெரியும். இவ்வளவு அழகான சிலையைக் குறையோடு நிர்மாணிக்க எனக்கு விருப்பமில்லை’’ என்றார் சிற்பி.

அதாவது, கடமைக்காக எதனையும் செய்யக் கூடாது. கடமையை உண்மையாக, மனப்பூர்வமாக நினைத்து ரசித்து செய்ய வேண்டும். எதிலும் ஒரு முழுமை இருக்க வேண்டும்.ஒரு நிறைவு இருக்க வேண்டும்.ஆழ்ந்த ஈடுபாட்டுடன் ஒரு செயலைச் செய்கிறபோது இவை உங்களுக்குத் தானாகவே வந்துவிடும்.ஒரு செயல் பணம் தருகிறதா, புகழ் தருகிறதா என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அது நமக்கு மனநிறைவைத் தருகிறதா என்பதில் மட்டுமே கவனமாக இருக்க வேண்டும்.சிரத்தையுடன் எதிலும் ஈடுபட வேண்டும். அதில் ஒழுங்கும், நேர்த்தியும் அவசியம் இருக்க வேண்டும். கடமையை கடமைக்காகச் செய்யக் கூடாது. மனநிறைவோடு செய்ய வேண்டும்.

Next Story

பறக்கும் முத்தத்தால் பந்தாடிய மனைவி!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
The husband who flew because of the flying kiss

நாகையில், மனைவிக்கு பறக்கும் முத்தம் (flying kiss) கொடுத்த கணவரை மனைவியே அடியாட்களை வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நாகை தேவூர் பகுதியைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் செந்தமிழ் செல்வன். அவருடைய மனைவி சுதா. அவரும் சித்த மருத்துவராக உள்ளார். செந்தமிழ் செல்வன் - சுதா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 10 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்வதாகக் கூறப்படுகிறது. இருவரும் முறையாக விவாகரத்து பெற்றுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி தன்னுடைய 13 வயது மகனைப் பார்ப்பதற்காக செந்தமிழ் செல்வன் சென்றுள்ளார். ஆனால் அவரது மனைவியான சுதா மகனை சந்திப்பதற்குத் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இந்தநிலையில், அடிக்கடி சுதா பணியாற்றும் மருத்துவமனைக்கு வரும் செந்தமிழ் செல்வன், பறக்கும் முத்தம் (flying kiss) கொடுப்பதைப் போல் செய்வதால், தொல்லை தாங்க முடியாத சுதா அடியாட்களை வைத்து செந்தமிழ் செல்வனை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த செந்தமிழ் செல்வன் மருத்துவமனையில் தலையில் கட்டுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story

‘நல்ல நண்பன் வேண்டும் என்று அந்த மரணமும் நினைக்கின்றதா?’ - இதயம் நொறுங்க வைத்த சம்பவம்

Published on 20/09/2023 | Edited on 20/09/2023

 

friend who wandered while keeping him in a trolley' - a heartbreaking incident

 

மேம்பாலத்தில் சுயநினைவின்றிக் கிடந்த தனது நண்பரைத் தள்ளுவண்டியில் வைத்து, மருத்துவமனை நோக்கித் தள்ளிக்கொண்டு வாலிபர் ஒருவர் ஓடிய வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இப்படி தள்ளுவண்டியில் வைத்துக் கொண்டு செல்வதாக அந்த வாலிபர் பேசும் அந்த வீடியோ காட்சி காண்போரின் இதயத்தைக் கலங்கடிக்க வைக்கிறது.

 

விருதுநகர் மாவட்டம் யானைக்குழாய் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். கொத்தனாராகப் பணியாற்றி வந்த இவருடன், தூத்துக்குடியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரும் வேலை பார்த்து வந்துள்ளார். தற்பொழுது வேலை எதுவும் கிடைக்காததால் ஆறுமுகம் ஆதரவின்றி தெருக்களில் சுற்றித் திரிந்துள்ளார். பல நாட்களுக்குப் பிறகு தன்னுடன் வேலை செய்த ஆறுமுகம் உடல் நலிவுற்று மயக்கமடைந்த நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ந்த சுரேஷ், உடனடியாக ஆறுமுகத்தை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லத் திட்டமிட்டார்.

 

ஆனால் சுரேஷிடம் செல்போன் இல்லாததால், 108க்கு எப்படி அழைப்பது என்று அவருக்குத் தெரியவில்லை. அருகில் இருந்தவர்களும் உதவி செய்யாததால் தன்னிடமிருந்த தள்ளுவண்டியில் அவரை வைத்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் தள்ளிச் சென்றுள்ளார். பாலம் ஒன்றின் வழியாகச் செல்லும் பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் 'ஏன் இப்படி தள்ளிக்கிட்டு போறீங்க' எனக் கேட்க, ஆம்புலன்ஸ் கிடைக்காததால் தள்ளுவண்டியில் வைத்து அழைத்துச் செல்வதாக வண்டியைத் தள்ளிக்கொண்டே அவர் பரபரப்பாகப் பேசும் அந்த வீடியோ காட்சி இணையத்தில்  வைரலாகி வருகிறது. அந்த இருசக்கர வாகன ஓட்டி, தன் வாகனத்தை வைத்து தள்ளுவண்டியை உந்த வைத்து அவருக்கு உதவி புரிந்தார். ஒருவழியாக தன்னுடைய நண்பரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்தார் சுரேஷ்.