Skip to main content

எதுக்காக குளிக்கிறோம் தெரியுமா? குளித்தால் உடல் சூடு குறையுமா? - டாக்டர் அருணாச்சலம் விளக்கம்

Published on 31/05/2023 | Edited on 31/05/2023

 

Do you know why we bathe? Does taking a bath reduce body heat? - Explained by Dr. Arunachalam

 

சருமத்தைப் பராமரிப்பதன் முக்கியத்துவம் குறித்து நம்மிடம் டாக்டர் அருணாச்சலம் விவரிக்கிறார்.

 

உடலில் தோல் என்பது ஒரு முக்கியமான அரண். அதுதான் நம் உடலைப் பாதுகாக்கிறது. தோலில் வரும் கட்டிகளுக்கு முக்கியமான காரணம் தோல் கிழிவது தான். கிருமிகளிடமிருந்து நமக்கு பாதுகாப்பு தருவது நம்முடைய தோல் தான். வெயில் அதிகமாக அடிக்கும்போது வியர்வை வரும். அதன் மூலம் சூடு நம் உடலைத் தாக்காமல் இருக்கும். அந்த வகையில் வியர்வைச் சுரப்பிகள் நம்மைப் பாதுகாக்கின்றன. 

 

பல்வேறு நோய்கள் இப்போது தோல் வியாதிகளாக வருகின்றன. தூசியில் அதிகம் வேலை செய்பவர்கள் உடலை சோப்பு போட்டு கழுவ வேண்டும். கோடை காலத்தில் வியர்க்குரு மூலமும் நிறைய பிரச்சனைகள் ஏற்படும். குளியல் மூலம் அதைத் தடுக்க முடியும். தலைக்கு குளித்தால் சளி பிடிக்கும் என்று இங்கு பலர் தவறாக நினைக்கின்றனர். பல்வேறு கெமிக்கல்களால் மூக்கு பாதிக்கப்படுவதால் தான் சளி பிடிக்கும். 

 

அதிக குளிர்ச்சியான நாட்களில் கூட கேரள மக்கள் தலைக்கு குளிக்காமல் இருப்பதில்லை. அவர்களுக்கு அதனால் சளி பிடிப்பதில்லை. தலைக்கு குளிப்பது என்பது மிகவும் முக்கியம். வியர்வை அதிகமாக இருக்கும்போது தலைக்கு குளிப்பதால் தான் வியர்வை மூலம் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்க முடியும். தோலில் உள்ள அழுக்குகளைக் கழுவி சுத்தப்படுத்துவது தான் குளியல். உடல் சூடு தணிவதற்கும் குளியலுக்கும் சம்பந்தமில்லை. நீர் ஆகாரங்களின் மூலம் தான் உடல் சூட்டைத் தணிக்க முடியும்.

 


 

Next Story

வெப்ப அலை முன்னெச்சரிக்கை; ஓ.ஆர்.எஸ் கொடுக்க ஏற்பாடு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
nn

கோடை காலம் தொடங்கிய நிலையில் தமிழகத்தில் வெப்ப அலைக்கான எச்சரிக்கைகளை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சில நாட்களாகவே தமிழகத்தில் வெயில் செஞ்சுரி அடித்து வருகிறது. இந்தநிலையில் வெட்ப அலை காரணமாக மக்களுக்கு நீர்ச்சத்து இழப்பு ஏற்படுவதை தடுப்பதற்கு ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்க பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதிய அளவில் ஓ.ஆர்.எஸ் கரைசல் பாக்கெட்டுகள் இருப்பில் வைக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்கள் தாங்களாகவே சென்று இந்த ஓ.ஆர்.எஸ் கரைசலைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக விவசாயக் கூலித் தொழிலாளிகள், கட்டுமான தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள் ஆகியோருக்கு இந்தக் கரைசலை விநியோகிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

டாஸ்மாக்கிற்கு இருக்கும் எதிர்ப்பு கூட இதற்கில்லை - மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் விளக்கம்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
  Dr Radhika | Mobile phone | Youngsters

வாழ்வியல் மாற்றமும், தூக்கமின்மையும் மன அழுத்தத்திற்கு எவ்வாறு பங்கு விளைவிக்கிறது என்று மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் விளக்குகிறார்.

இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் தனி மனிதனுக்கு  மன அழுத்தம் கொடுக்கத்தான் செய்கிறது. முந்தைய காலத்தில் வேலை பார்க்கும் நடைமுறையே  நன்றாக இருந்தது. அலுவலகத்தில் கூட வேலை பார்ப்பவர்களுடன் இருக்கும் உறவு சிறப்பாக இருந்தது. ஆனால் தற்போது கொரோனா லாக்டவுனுக்கு பிறகே அது அப்படியே மாறி விட்டது. தனித்து வேலை பார்க்கும் சூழலில் நிறைய சிக்கலும் இருக்கிறது. மேலும், அலுவலகத்திலும் துன்புறுத்தல் மற்றும் பாலியல் தொந்தரவுகளை சந்திக்க வேண்டி இருக்கிறது. வழக்க நேரத்திற்கும் அதிகமாக வேலை பார்க்கும்படி அழுத்தம் கொடுக்கப்படுகிறது. உணவு முறை, சரியான உடற்பயிற்சி இல்லாமை போன்றவை டிப்ரெஷன் அதிகமாக காரணமாகிறது. வெளிநாடுகளில் தற்போது நிறைய ஆரோக்கிய மாற்றங்களை கொண்டு வந்து விட்டனர். பள்ளி அருகே பாஸ்ட் புட் கடைகளை வைக்க அனுமதிப்பதில்லை. 

நம் நாட்டில் டாஸ்மாக்கிற்கு காட்டும் எதிர்ப்பை இந்த ஜங்க் ஃபுட் கடைகளுக்கு காட்டுவதில்லை. ஜங்க் ஃபுட் உணவுகள் ஆரோக்கியமற்ற உடல்நிலையை கொண்டு வரும். தூக்கமற்ற சூழலும் மன அழுத்தத்திற்கு பெரும்பங்கு இருக்கிறது. குழந்தைகள் 16 மணி நேரம் உறங்கவேண்டும் என்றால் பெரியவர்கள் 6-7 மணி நேரம் தூங்குதல் அவசியம். இது போன்று குவாலிட்டி ஸ்லீப் பாதிக்கும் போது 'பிரைமரி இன்சோம்னியா' வருகிறது. நெடு நேரம் மொபைல் பார்த்துக் கொண்டிருப்பதால் உடனடியாக தூக்கத்திற்கு உடல் ஒத்துழைப்பதில்லை. நம் இயல்பு காலையில் விழித்து இரவில் தூங்க வேண்டும். அப்பொழுது தான் சரியான ஹார்மோன்ஸ் இயங்கி  நம் உடல் சரியாக பராமரிக்கும். 

ஆனால் இன்றைய சூழலில் உடல்நிலைக்கு எதிராக இரவில் வேலை பார்த்து பகலில் தூங்குகிறார்கள். இப்படியான சூழல் வரும் போது தான் உடல் பாதிப்பிற்கு உள்ளாகிறது. அன்றைய காலத்தில் 'இன்சோம்னியா' என்ற நோயே கிடையாது. இன்றைய காலத்தில் குழந்தைகள் கூட பெற்றோர்களின் முறையான வழிகாட்டுதல் இல்லாமல் இரவு ஒரு மணி வரை கூட விழித்து மொபைல் பார்க்கிறார்கள். குறைந்த வயதில் டிப்ரெஷன் வர இதுவும் ஒரு காரணம் தான்.  உணவுமுறை மாற்றம், இனிப்பு வகைகள் அதிகமாக எடுத்து கொள்வது, சரியான அளவில் நீர் பருகாமல் இருப்பது கூட இதுபோன்ற இன்னல்களை வரவைக்கிறது.