Skip to main content

விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலைப் பேசும் நூல்; புத்தகத்தை வெளியிட்ட இயக்குநர் 

Published on 14/03/2023 | Edited on 14/03/2023

 

 A book of poetry on the lives of marginalized people; the director who published the book

 

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ‘கூகை’ நூலகத்தில்,  மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் கிராமத்தைச் சேர்ந்த மகிழ் அறிவின் ‘நீலவானில் மிதக்கும் நட்சத்திரக் கடிதம்’ எனும் முதல் கவிதை நூல் 04-03-2023 அன்று வெளியானது. 

 

திரைப்பட இயக்குநர் வ.கீரா அவர்கள் நூலை வெளியிட சமூக ஆர்வலர் ஜலீல் நூலை பெற்றுக் கொண்டார். எழுத்தாளர் கரன் கார்க்கி, இயக்குநர் வடலூர் ஆதிரை, எழுத்தாளர் ஷாலின் மரியா லாரன்ஸ், எழுத்தாளர் பிறைமதி குப்புசாமி, தமிழ்நாடு மாணவர் இளையோர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் லயோலா மணி, வழக்கறிஞர் பூபாலன், கவிஞர் வீரா உள்ளிட்ட திரைப்பட உதவி இயக்குநர்கள் மற்றும் வாசகர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் நூலை வெளியிட்டு பேசியவர்கள்,  “ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்களின் வாழ்வியலைப் பற்றி தனது நூலில் அற்புதமாக எழுதியுள்ளார்” என்று குறிப்பிட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்