Skip to main content

அமாவாசை - பௌர்ணமி; எண்ணெய் பலன்கள் - வீட்டு பூஜை குறிப்புகள்: 01

Published on 11/02/2023 | Edited on 13/02/2023

 

 Amavasai - full moon; Benefits of Oil - Home Pooja Tips : 1

 

*தினமும் காலையும் மாலையும் தூய மனதுடன் சில நிமிடங்களாவது உங்கள் விருப்பமான கடவுள் பெயரை உச்சரித்தல் வேண்டும்.

 

*தினமும் காலை எழுந்தவுடன் பார்க்க வேண்டியவை: கோவில், கோபுரம், சிவலிங்கம், தெய்வப் படங்கள், நல்ல மலர்கள், மேகம் சூழ்ந்த மலைகள், தீபம், கண்ணாடி, சந்தனம், மிருதங்கம், கன்றுடன் பசு, உள்ளங்கை, மனைவி, குழந்தைகள்.

 

*வீட்டின் கிழக்கு பக்கம் துளசி செடி, வேப்பமரம் இருக்க வேண்டும். அதனால் எந்தவித நோயும் வராது. விஷ ஜந்துக்களும் நம்மை அண்டாது. தூய்மையான காற்றும் கிடைக்கும்.

 

*வீடுகளில் பூஜையறை என்று தனியாக இருந்தால், அங்கு தேவையில்லாத உடைந்த பொருட்களை சேர்த்து வைக்காதீர்கள். இது இறைசக்தியைக் குறைக்கும். அங்கு ஆன்மிக அதிர்வுகள் ஏற்படாது. மிகக்குறைந்த பூஜைக்கான பொருட்களை மட்டும் வைத்துக்கொள்ளுங்கள்.

 

*சிவன், பார்வதி, விநாயகர், முருகன் உள்ள படம் ஒன்றை கிழக்கு பார்த்து மாட்டிவைத்தால், அது வீட்டிலுள்ள வாஸ்து குறைபாடுகளை சிறிது  சிறிதாக நீக்கும்.

 

*செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களில் பூஜையறையை தண்ணீர் ஊற்றிக் கழுவ வேண்டும். மார்பிள், கிரானைட் தரையாக இருந்தால் ஈரத்துணியால் துடைக்க வேண்டும். 

 

*நமது வலது உள்ளங்கையில் மகாலட்சுமி இருப்பதால் காலை எழுந்தவுடன் வலது உள்ளங்கையை பார்க்க வேண்டும். இது துவாதசன தரிசனம் எனப்படும்.

 

*அமாவாசை, திவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது.

 

*அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, ஜென்ம நட்சத்திரம் ஆகிய தினங்களில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கக்கூடாது.

 

*பொதுவாக நெற்றிக்குத் திலகமிடாமல் பூஜை செய்யக்கூடாது.

 

*பெண்கள் பூசணிக்காய் உடைத்தல் கூடாது. இரு கைகளால் தலையைச் சொரிதல் ஆகாது.

*கர்ப்பிணி பெண்கள் தேங்காய் உடைத்தல் கூடாது. மற்றவர்கள் தேங்காய் உடைக்குமிடத்தில் இருக்கவும் வேண்டாம்.

 

*சாமி படங்களுக்கு வாசனையில்லாத பூக்களை சூட்டக்கூடாது.

 

*வீட்டின் நிலைகளில் குங்குமம், மஞ்சள் வைக்கவேண்டும். இதனால் தீய சக்திகளும், விஷப்பூச்சிகளும் வீட்டிற்குள் வராது.

 

*வீட்டுப் பூஜையில் கற்பூரதீபம் தானே குளிர்ந்துவிடுவதுதான் நல்லது. நாம் அணைக்கக் கூடாது.

 

*அதிகாலை நான்கரை மணிமுதல் ஆறு மணிக்குள்ளும், மாலை ஐந்தரை மணிமுதல் ஆறு மணிக்குள்ளும் தீபமேற்றுவதால் நிறைவான வளமும் பலன்களும் நிச்சயம் கிடைக்கும். எக்காரணம் கொண்டும் எவர்சில்வர் விளக்குகளைப் பூஜையறையில் விளக்கேற்றப் பயன்படுத்தக் கூடாது.

 

*நெய், விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகிய ஐந்தும் கலந்து 48 நாட்கள் விளக்கேற்றிப் பூஜை செய்தால் தேவியின் அருளும், மந்திர சக்தியும் கிடைக்கும்.

 

*ஏற்றிய விளக்கிலிருந்து கற்பூரத்தையோ ஊதுவத்தியையோ ஏற்றக்கூடாது.

 

*விளக்கேற்றும்போது மற்றவர்கள் ஏற்றிவைத்த விளக்கின் மூலமாக நம் விளக்கை ஏற்றக்கூடாது. தீப்பெட்டி மூலமாகத்தான் விளக்கேற்ற வேண்டும்.

 

* "ஓம்' என்னும் மந்திரத்தை, பூஜையறையில் பத்மாசனத்தில் அமர்ந்து ஒருவர் தொடர்ந்து கூறி தியானம் செய்து வந்தால், அவரை எப்பேற்பட்ட வினைப்பயனும் வியாதியும் நெருங்காது.

 

*வீட்டில் பூஜையறையில் தெய்வப் படங்களுடன் மறைந்த மூதாதையர் படத்தைச் சேர்க்காமல் தனியாக வைத்து வணங்கினால் சிறந்த பலன் கிடைக்கும்.

 

*சனி பகவானுக்கு வீட்டில் எள்விளக்கு ஏற்றக்கூடாது.

 

*ருத்ரம், சமகம் போன்றவற்றை வீட்டில் காலையில் தினமும் கேட்பது நல்லது.

 

*நாம் வீட்டில் கடவுளை வணங்கும் போது நின்றவாறே தொழுதல் குற்றமாகும். அமர்ந்தபடிதான் தொழுதல் வேண்டும்.

 

*யாராவது தூங்கிக்கொண்டிருக்கும் போது காலை, மாலை வேளைகளில் விளக்கேற்றக் கூடாது. தூங்குபவர்கள் எழுந்த பிறகுதான் விளக்கேற்ற வேண்டும். தூங்குபவர்களின் தலைக்கு நேராக தேங்காய் உடைக்கக் கூடாது.