Skip to main content

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் தலைமறைவான கருணா

Published on 19/05/2018 | Edited on 19/05/2018
karuna


முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் ஒன்பதாம் ஆண்டு நிறைவையொட்டி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 18.05.2018 அன்று மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு உள்ளிட்ட தமிழர்கள் அதிகம் வாழும் மாவட்டங்களில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளிவாய்க்காலில் 9-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் நினைவேந்தலில் நினைவுச் சுடரை இலங்கையின் வட மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் ஏற்றி வைத்தார்.
 

இதேபோல் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சியினர் நடத்தினர். இதில் பலர் கலந்து கொண்டு முள்ளிவாய்க்கால் படுகொலை சம்பவத்தில் உயிர்களை ஈந்த உறவுகளுக்கு சுடரேற்றி அஞ்சலியை செலுத்தினர். ஆனால் போராட்ட களத்தில் இருந்தவர் என தன்னைக் கூறும் வினாயகமூர்த்தி முரளிதரன் கருணா இந்த நிகழ்வுகளில் எதிலும் கலந்து கொள்ளவில்லை. இந்த நாளில் அவர் என்ன செய்தார் அல்லது ஏன் இதைப் புறக்கணித்தார் என்று நினைவேந்தலில் பங்கேற்ற பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு மெரினாவில் தடை போலீசார் குவிப்பு

Published on 20/05/2018 | Edited on 20/05/2018

சென்னை மெரினாவில் சுமார் ஆயிரம் எண்ணிக்கையிலான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

சென்னை மெரினாவில் ஆண்டுதோறும் இலங்கை முள்ளிவாய்க்காலில் 2009-ஆம் ஆண்டு மே 18 இனப்படுகொலை செய்யட்ட லட்சக்கணக்கான தமிழகர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டுவந்தது. ஆனால் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின் இனி மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை என 41 எ சட்டப்பிரிவின் படி மெரினாவில் போராட்டம் நடத்த தடை உத்தரவை தமிழக அரசு வாங்கியுள்ளது.

 

may17

 

தற்போது நேற்று மே பதினேழு இயக்கமும் மற்றும் வைகோ உட்பட பதினோரு அமைப்புகளை சேர்ந்தவர்களும் நாளை திட்டமிட்டபடி மெரினாவில் நினைவேந்தல் கூட்டம் நடக்கும் என அறிவித்திருந்தனர். இதை தொடர்ந்து தற்போது தடை விதிக்கப்பட்ட நிலையில் தடையை மீறி  நினைவேந்தல் நடத்தப்படலாம் என்பதால் முன் எச்சரிக்கைக்காக தடுப்பதற்கு சுமார் ஆயிரம் போலீசார் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் குவிக்கப்பட்டுள்ளனர். 

 

அதுமட்டுமின்றி தடையைமீறி குவியும் கூட்டத்தை கைது செய்ய சுமார் 20 மாநகர பேருந்துகளும், தடுப்புக்களும் ரெடியாக வைக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து பதற்றம் நீடித்துவருகிறது. 

 

Next Story

மே 18ஆம் தேதியில் இந்த சந்திப்பு தேவைதானா? 

Published on 19/05/2018 | Edited on 19/05/2018

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுதினத்தன்று இந்திய ராணுவத்தளபதி இலங்கை அதிபரைச் சந்திருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

 

IA

 

இலங்கையில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில், பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் இலங்கை ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட தினமான மே 18 தமிழகம் முழுவதும் நினைவுதினமாக அனுசரிக்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள பல அரசியல் கட்சிகளும், அமைப்புகளும், இன உணர்வாளர்களும் முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுப்படுத்தும் விதமாக கூட்டங்களை நடத்தினர். தமிழ் இன உணர்வாளர்களின் நெஞ்சில் நீங்கா வடுவாய் நிலைத்திருக்கும் இந்த நாளில், இந்திய ராணுவத் தளபதி இலங்கை அதிபரைச் சந்தித்திருக்கிறார்.

 

இந்திய ராணுவத் தளபதி பிபின் ராவத் நேற்று இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனாவை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் இருநாட்டு பாதுகாப்பு மற்றும் ஒன்றுபட்ட செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது இலங்கை ராணுவத்தின் லெஃப்டினண்ட் ஜெனரல் மகேஷ் செனநாயகேவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்ட நாளில், இலங்கை ராணுவத்துடன் நல்லுறவு குறித்து இந்திய ராணுவத் தளபதி சந்தித்திருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.