Skip to main content

இங்கிலாந்து மகாராணி குடும்பத்தில் ஓரகத்தி சண்டை... 

Published on 18/02/2019 | Edited on 18/02/2019

சாமானியாக இருந்தாலும், மகாராணியாக இருந்தாலும் வீட்டுக்கு வீடு வாசப்படி என்பது போல வீடாக இருந்தாலும் அரண்மனையாக இருந்தாலும் குடும்ப மோதல் சகஜம் என்பது வரலாறு நமக்கு காட்டி வந்துள்ளது. இன்றும் உலகமே உற்று நோக்கும் இங்கிலாந்து மகாராணி குடும்பத்திலும் ஓரகத்தி சண்டை மூண்டுள்ளது.

 

elizabeth

 

ஒருக்காலத்தில் உலக நாடுகளை தனது காலடிக்கு கீழ் வைத்து ஆண்டவர் இங்கிலாந்து மகாராணி. பின்னர் உலக மக்களிடையே ஏற்பட்ட மாறுதல், புரட்சி போன்றவை காலணி நாடுகள் சுதந்திர நாடுகளாக மாறின. அதன்பின்னர் இங்கிலாந்தும் மக்களாட்சி நாடாக மாறியது. அது மக்களாட்சி நாடாக இருந்தாலும், மகாராணிக்கான அரச மரியாதையை இன்றளவும் தந்துவருகிறது. அவர் பெயரில் தான் ஆட்சி மறைமுகமாக நடக்கிறது. அதனை இங்கிலாந்து நாடாளுமன்றம் உறுதி செய்கிறது. மகாராணியின் செலவு, குடும்ப செலவு, மகாராணியின் அரண்மனையான பங்கிம்காம் அரண்மனை பராமரிப்பு செலவு என பலவற்றையும் இங்கிலாந்து அரசு நிதி தந்து வருகிறது.
 

இங்கிலாந்து போல வடஅயர்லாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா உட்பட 13 நாடுகளின் ஆட்சி மகாராணி பெயரில் தான் நடக்கிறது. உலகில் பதிவு எண் பொறிக்கப்படாத கார் வைத்துள்ள ஒரே நபர் இங்கிலாந்து மகாராணி மட்டுமே. அதேப்போல் அவருக்கு என தனியாக கடவுச்சீட்டு என்கிற பாஸ்போட் கிடையாது. இந்த உலகம் அவருக்கு கட்டுப்பட்டது என்பதை இன்றும் பெரும்பாலான நாடுகள் ஏற்றுக்கொண்டு செயல்படுகின்றன. அப்படிப்பட்ட மகாராணி குடும்பத்தில் தான் ஓரகத்தி சண்டை மூண்டுள்ளது.

elizabeth

 

தற்போது மகாராணியாக இருப்பவர் இரண்டாம் எலிசபெத். இவரது கணவர் அரசர் பிலிப். இந்த தம்பதியினருக்கு நான்கு பிள்ளைகள். சார்லஸ், ஆனி, ஆண்ட்ரூ, எட்வர்ட் ஆவர். நான்கு பேருக்கும் திருமணமாகிவிட்டது. இவர்கள் தத்தமது குடும்பத்தோடு தனித்தனி அரண்மனையில் வசித்து வருகின்றனர்.


இதில் இளவரசியின் மூத்த மகன் இளவரசர் சார்லஸ் – மறைந்த வேல்ஸ் இளவரசியான டயானா தம்பதியின் மகன்கள் வில்லியம்கேட், ஹென்றி என்கிற ஹாரி. இருவருக்கும் திருமணமாகிவிட்டது. வில்லியம் – காத்ரின் மிடில்டன் என்பவரையும், ஹாரி – மேகன்மார்கல் என்பவரையும் திருமணம் செய்துக்கொண்டு தத்தமது குழந்தைகளோடு லண்டனில் உள்ள கென்சிங்டன் அரண்மனையில் வசித்துவருகின்றனர்.
 

தற்போது வில்லியம், ஹாரி குடும்பம் பிரிந்து தனிக்குடித்தனத்துக்கு தயாராகிவருகிறார்கள். இதற்கான காரணமாக கூறப்படுவது காத்ரின் – மேகன்மார்கல் இருவரிடையே ஏற்பட்ட மோதல் என்கிறது இங்கிலாந்தின் பத்திரிக்கைகள்.
 

வில்லியம் க்கு 2011 ஏப்ரல் 29ந்தேதி திருமணம் நடைபெற்றது. ஹாரிக்கு 2018 மே மாதம் திருமணம் நடைபெற்றது. வில்லியம்க்கு 3 குழந்தைகள் உள்ளனர். ஹாரிக்கு இன்னும் இரண்டு மாதத்தில் குழந்தை பிறக்கவுள்ளது. திருமணம் ஆனது முதல் இரண்டு குடும்பமும் ஒன்றாக தான் இருந்து வருகிறது. இரண்டாம் எலிசபெத்துக்கு பின்னர் அவரது மகன்தான் மகாராஜாவாக போகிறார். அதற்கடுத்து வில்லியம் அந்த பதவிக்கு வருவார். இதனால் அவரது மனைவிக்கு அரண்மனையில் கூடுதல் முக்கியத்தும் இருந்துவந்துள்ளது. இதனை பொருத்துக்கொள்ள முடியவில்லையாம் ஹாரி மனைவியால் இதனால் சின்ன சின்ன மோதல்கள் வந்துள்ளன.

 

elizabeth


ராஜ குடும்பத்துக்கு வாழ்க்கை பட்டுவருபவர்களுக்கு பலவித கட்டுப்பாடுகள் உண்டு. மக்களிடம் சாதாரணமாக புழங்க முடியாது, உடை கட்டுப்பாடு, உணவு கட்டுப்பாடு, சுற்றுலா கட்டுப்பாடு, சமூக வளைத்தளங்களில் அக்கவுண்ட் வைப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. குடும்பத்தில் மூத்தோர்களை மதிக்க வேண்டும், அரச மரபுகளை கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்பது கடும் விதி. இதனை மீறினால் ராஜதண்டனை கிடைக்கும்.


ஓரே அரண்மனைக்குள் வசித்து வந்த வில்லியம் மனைவிக்கும் ஹாரி மனைவிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ராஜ குடும்பத்தில் இப்படிப்பட்ட மோதல்கள் வருவது சாதாரணம். ஆனால் அதனை பெரும் கவுர பிரச்சனையாக கருதும் இங்கிலாந்து இராணி குடும்பம். அது உடனே சரிச்செய்யப்படும். இந்த ஓரகத்தி மோதலும் மகாராணி கவனத்துக்கு சென்றுள்ளது.


இதனால் இளவரசர்களை தனித்தனி குடும்பமாக்க முடிவு செய்துள்ளார் மகாராணி. அவரின் கட்டளைப்படி வெகு விரைவில் ஹாரி குடும்பம் பிராக்மோர் அரண்மனைக்கு குடிபெயரவுள்ளார்கள் என்கிறது இங்கிலாந்து பத்திரிக்கைகள். ஹாரி – மேகன் தம்பதிக்கு புதிய அரண்மனையில் தான் குழந்தை பிறக்கும் என்கின்றன.


அரச குடும்பத்தை பொருத்தவரை, அரசப்பட்டியலில் உள்ளவர்களுக்கு திருமணமாகிவிட்டால் அவர்களை தனித்தனி குடும்பமாக உருவாக்கிவிடுவது அரச மரபு. இது கடந்த காலத்திலும் நடந்துள்ளது. அதோடு, அவர்களை ராஜாங்க வேலைகளை பார்க்க அனுமதிக்கப்பட்டு, பணிகள் பகிர்ந்தளிக்கப்படும். இதனால் பல பிரச்சனைகளை தவிர்க்க தனி குடும்பமாக மாற்ற தனித்தனி அரண்மனைகளில் வைப்பது ராஜ வழக்கம் என்கிறார்கள்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மறைந்த எலிசபெத் ராணியை கொல்ல சதி; இந்தியருக்கு சிறை தண்டனை

Published on 07/10/2023 | Edited on 07/10/2023

 

Indian jailed because Queen of England

 

இங்கிலாந்து எலிசபெத் மகாராணியை கொல்ல முயன்ற இந்திய வம்சாவளிக்கு இங்கிலாந்து நாட்டு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 

 

இங்கிலாந்து ராணி 2ஆம் எலிசபெத் தனது 96 வயதில் கடந்த 2022ஆம் ஆண்டில் மரணம் அடைந்தார். இவர் உயிருடன் இருக்கும் போது, அவரை கொல்ல முயன்றதாக இங்கிலாந்தில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரைப் போலீஸார் கைது செய்தனர். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இந்திய வம்சாவளியான ஜஸ்வந்த் சிங் சைலு என்பவர் வசித்து வந்துள்ளார். 

 

21 வயதான இவர், கடந்த 2021ஆம் ஆண்டில், இங்கிலாந்து நாட்டின் பக்கிங்ஹாம் அரண்மனையில் சட்டவிரோதமாக நுழைய முயன்றார். முகத்தில் முகமூடி அணிந்து அந்த அரண்மனையில் ஊடுருவிய ஜஸ்வந்த சிங்கை, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படை வீரர்கள் மடக்கிப் பிடித்தனர். இதனைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், இங்கிலாந்து ராணி 2ஆம் எலிசபெத்தை கொலை செய்ய வந்ததாக தெரிவித்தார். மேலும், கடந்த 1919ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பழிவாங்கும் நோக்கத்தில் ராணி எலிசபெத்தை கொல்ல வந்ததாக தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக அந்த நாட்டு காவல்துறையினர் ஜஸ்வந்த் சிங்கை கைது செய்தனர். 

 

இதனையடுத்து, அவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை அந்த நாட்டின் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் ஜஸ்வந்த் சிங் மீதான குற்றச்சாட்டுகள் உறுதியானதால், அவருக்கு 9 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது. 

 

 

Next Story

இங்கிலாந்து மன்னராக முடி சூடப் போகும் மூன்றாம் சார்லஸ்

Published on 06/05/2023 | Edited on 06/05/2023

 

Charles III to be crowned King of England

 

இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத் தனது 96-வது வயதில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9ம் தேதி உயிரிழந்தார். கடந்த 1952 முதல் பிரிட்டன் ராணியாக இருந்து வந்த இரண்டாம் எலிசபெத், பிரிட்டன் வரலாற்றில் அதிக காலம் ராணியாக இருந்தவர் என்ற நிலையில் அவரது மறைவு உலக நாடுகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. உலக தலைவர்கள் அனைவரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து பல்வேறு மரியாதைக்கு பிறகு அவரது உடல் செப்டம்பர் மாதம் 19ம் தேதி அடக்கம் செய்யப்பட்டது. 

 

ராணி இரண்டாம் எலிசபெத் மரணத்தைத் தொடர்ந்து பிரிட்டனின் இளவரசர் மூன்றாம் சார்லஸ் பிரிட்டனின் மன்னராகப் பொறுப்பேற்றார். மன்னராகப் பொறுப்பேற்ற சார்லஸின் முடி சூடும் விழா இன்று லண்டனில் நடைபெறவுள்ளது. இதற்காக ஒட்டுமொத்த இங்கிலாந்தும் தயாராகி வருகிறது. சார்லஸ்ஸை அழைத்துச் செல்ல 700 ஆண்டுகள் பழமையான பாரம்பரியமிக்க தங்கமுலாம் பூசப்பட்ட சிம்மாசன சாரட் வண்டி தயார் செய்யப்பட்டுள்ளது. 

 

இங்கிலாந்து மன்னராக சார்லஸ் முடி சூடிக்கொண்ட பிறகு அவரும் அவரது மனைவி கமிலாவும் பக்கிங்காம் அரண்மனை தேவாலயத்திற்கு சாரட் வண்டியில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுவார்கள். மன்னராக முடி சூட்டப்படும் சார்லஸ்க்கு புனித எட்வர்டின் கிரீடம் அணிவிக்கப்படும். அதனைத் தொடர்ந்து அவரது மனைவி கமிலா இங்கிலாந்து இராணியாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார். 

 

இந்த விழாவில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பங்கேற்கவுள்ளனர். இந்தியா சார்பில், துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்கிறார்.