Skip to main content

குகையில் சிக்கிய மாணவர்களை மீட்க உதவிய இந்தியர்கள்...

Published on 12/07/2018 | Edited on 12/07/2018
thai


 

 

 

தாய் கால்பந்தாட்ட சிறுவர்கள், தாம் லுஆங் என்ற மலைக்குகைக்குள் 18 நாட்கள்வரை சிக்கிக்கொண்டனர். கால்பந்தாட்ட பயிற்சியை முடித்துவிட்டு, குகைக்குள் சாகச பயணம் மேற்கொள்ள அந்த 13 பேர் உள்ளே சென்றுள்ளனர். பிறகு அவர்கள் மாட்டிக்கொண்டதை எட்டு நாட்களுக்கு பின்னர்தான் கண்டுபிடித்தது இராணுவம். மழை அதிகமாக பொழிந்துவந்ததால் குகைக்குள் தண்ணீர் ஏறிக்கொண்டே சென்றது. அது வறண்டுபோக நான்கு மாத காலம் எடுத்துக்கொள்ளும் அதுவரை சிறுவர்கள் அங்கேயே இருக்கட்டும் என்று தாய் இராணுவம் தெரிவித்தது. உள்ளே மாட்டிக்கொண்டவர்களுக்கு மூச்சு விடவும், சாப்பாடும் ஸ்கூபா டைவர்ஸ் மூலமாக தொலை தூரம் உள்ளே சென்று கொடுக்கப்பட்டுள்ளது. இப்படி நடந்துகொண்டிருப்பதை டிவியில் பார்த்துக்கொண்டிருந்த உலகமக்கள் அனைவரும் பிராத்தனை செய்யாத நேரம் இல்லை. உலகமுழுவதிலும் இருந்து பல்வேறு உதவிகள் இந்த சிறுவர்களுக்காக வந்தது. அப்படி வந்தவர்கள்தான் இங்கிலாந்தை சேர்ந்த ஸ்கூபா டைவர்ஸ். இந்த மீட்புப்பணியில் பல்வேறு மக்கள் உதவிசெய்துள்ளனர் அதில் இரண்டு இந்தியர்களும் அடக்கம். 

 

 

 

புனே நகரத்தை சேர்ந்த கிர்லோஸ்கர் பிரதர் லிமிடேட் என்ற பம்ப் நிறுவனத்தை சேர்ந்த இரண்டு இன்ஜினியர்கள் அந்த மீட்புக்குழுவில் தொழில்நுட்ப துறையில் செயல்பட்டனர். பிரசாத் குல்கர்னி மற்றும் ஷ்யாம் ஷுக்லா என்ற அந்த இன்ஜினியர்கள் ஜூலை 5 ஆம் தேதி அந்த குகைக்கு சென்று சிறுவர்களை மீட்கும் மீட்பு குழுவில் சேர்ந்தனர். குகைக்குள் இருக்கும் தண்ணீரை வெளியேற்ற இவ்விருவர்களும் அதில் சேர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. குகையில் நீர் அதிகரித்துக்கொண்டும், குகையின் அமைப்பு ஆழமாக இருந்ததால் கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்ததாக மீட்பு பணியில் கலந்துகொண்ட குல்கர்னி தெரிவித்துள்ளார்.

 

 

 

இறுதியில் குகைக்குள் இருந்த சிறுவர்கள் மூன்று கட்டமாக வெளியேற்றப்பட்டனர். முதல் கட்டத்தில் நான்கு பேர்களை வெளியேற்றினர். அடுத்த நாளில் அடுத்த நான்கு பேரை வெளியேற்றினனர். ஜூலை 10 ஆம் தேதி கடைசி கட்ட மீட்பில் ஐந்து பேர் வெளியேற்றப்பட்டனர். தற்போது இந்த விஷயம் உலகமுழுக்க பெருமையாக பேசப்பட்டு கொண்டிருக்கிறது. அதில் நம் தேசத்தை சேர்ந்தவர்களும் உதவி செய்துள்ளார்கள் என்று நினைக்கும்போது பெருமையாகத்தான் இருக்கிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அவைக்கூட்டத்தின் நடுவே எம்.பி. செய்த செயல்... பட்ஜெட் வாசிப்பின்போது தாய்லாந்து நாடாளுமன்றத்தில் சர்ச்சை!!

Published on 18/09/2020 | Edited on 18/09/2020

 

thailand mp caught red handed in parliament

 

 

பட்ஜெட் வாசிப்பின்போது தாய்லாந்து நாடாளுமன்றத்தில் எம்.பி ஒருவர் ஆபாசப்படம் பார்க்கும் காட்சி இணையத்தில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

 

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை நடந்த கூட்டத்தின்போது பட்ஜெட் உரை வாசிக்கப்பட்டது. அப்போது ரொன்னாதேப் அனுவத் என்ற எம்.பி. நீண்ட நேரம் தன்னுடைய செல்போனில் எதையோ பார்த்தபடி இருந்துள்ளார். பிறகு அவர் செல்போனில் ஆபாசப்படம் பார்ப்பதை அங்கிருந்தவர்கள் கண்டறிந்தனர். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

இந்நிலையில், இதுகுறித்து விளக்கமளித்துள்ள அவர், தனக்கு வந்த செய்தி ஒன்றில் பெண் ஒருவர் அவசரமாக உதவி கேட்டதாகவும், அந்த செய்தியுடன் ஒரு புகைப்படம் ஒன்றையும் அந்த பெண் அனுப்பியிருந்ததாகவும் தெரிவித்தார். மேலும், அதைத் திறந்து பார்த்தபோது ஆபாச புகைப்படம் இருந்ததாகவும், இதை வைத்து அந்த பெண் ஆபத்தில் இருக்கிறாரா, வற்புறுத்தப்படுகிறாரா? என்ற ரீதியில் ஆராய்ந்து வந்ததாகவும் கூறியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினரின் செயலையும், அதற்கான அவரது விளக்கத்தையும் தாய்லாந்து மக்கள் கடுமையாக விமர்சித்துவரும் நிலையில், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்று சபாநாயகர் சுவான் லீக்பாய் தெரிவித்துள்ளது தற்போது சர்ச்சையை மேலும் பெரிதாக்கியுள்ளது.

 

 

Next Story

அந்த 13 உயிர்கள்... –தமிழகமும் தாய்லாந்தும்!!!

Published on 12/07/2018 | Edited on 12/07/2018

தாய்லாந்து நாட்டில் குகைக்குள் சிக்கிய 13 சிறுவர்களையும் அவர்களுடைய பயிற்சியாளரையும் மீட்க அந்த நாட்டு அரசு மேற்கொண்ட சர்வதேச அளவிலான முயற்சி வெற்றி பெற்றுள்ளது. அவர்கள் மீட்கப்படும்வரை நிலவிய பதற்றம் நமக்கு ஆச்சரியத்தை அளித்தது.

 

thailand


 

 

 

13 உயிர்களுக்கு இவ்வளவு மதிப்பா என்று நமக்கே வியப்பாக இருக்கிறது. இதற்கு காரணம் சமீபத்தில்தான் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் குறிபார்த்து சுடுபவர்களால் 13 பேரை தமிழக அரசு சுட்டுக் கொன்றது. அவர்கள்போக, 100க்கு மேற்பட்டோர் குறிதவறி குண்டு பாய்ந்ததால் காயமடைந்திருந்தனர். பலருக்கு கைகளும் கால்களும் துண்டிக்கப்பட்டன.

 

சுட்டுக் கொன்ற அரசாங்கமே, கொல்லப்பட்டவர்களின் குடும்பத்துக்கு தலா 20 லட்சம் ரூபாயும், காயம்பட்டவர்களுக்கு அவர்களுடைய காயத்துக்கு தகுந்தபடியான தொகையையும் இழப்பீடாக அளித்துவிட்டு தனது வேலையைப் பார்க்கத் தொடங்கிவிட்டது.

 

okchi


 

அதற்கு கொஞ்சநாட்கள் முந்தி, ஒக்கி என்ற புயல் தாக்கியதில் தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த மீனவர்கள் 661 பேர் காணாமல் போனதாக இந்திய அரசாங்கமே அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. காணாமல் போனவர்கள், உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு கணிசமான இழப்பீட்டுத் தொகையை வழங்கிவிட்டு, அரசுகள் அடுத்தகட்ட கொள்ளையில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டன.

 

இந்தியாவில் குறிப்பாக உயிர்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் சாதிக்கு தகுந்தபடி வேறுபடும் என்பது எதார்த்தமான உண்மை. டெல்லியில் நிர்பயா என்ற பெண் ஓடும் பேருந்தில் நள்ளிரவில் பலரால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகி இறந்தபோது இந்தியாவே கொந்தளித்தது. அந்தப் பெண்ணைப்பற்றிய பின்னணியை வெளியிடாமல் மறைத்து, அத்தனை மீடியாக்களும் அரசுக்கு எதிராக ஓலமிட்டன. குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டு தண்டனை விரைவாக வழங்கப்பட்டது.

 

 

 

சென்னை கோடம்பாக்கம் மின்சார ரயில்நிலையத்தில் ஸ்வாதி என்ற பெண் பட்டப்பகலில் கொல்லப்பட்டபோதும் இப்படித்தான் கொந்தளித்தது. அந்தப் பெண்ணைப்பற்றிய பின்னணித் தகவல்களை வெளியிட அரசாங்கமே தடைவிதித்தது. கொன்றவனைப் பற்றிய தகவல்களையும் மறைத்தது. ராம்குமார் என்பவனை கைது செய்து அவனை கடைசிவரை செய்தியாளர்களிடம் பேசவிடாமல், சிறையிலிருந்து பிணையில் வெளிவரும் நிலையில் நிரந்தரமாக பேசவிடாமலே செய்துவிட்டார்கள்.

 

ஆனால், காதலித்தார்கள் என்பதற்காகவே சாதியின் பேரால் இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டாலும், வீடுபுகுந்து சிறுமி என்றும் பார்க்காமல் பாலியல் வன்புணர்வு செய்து கொல்லப்பட்டாலும், கால்மேல் கால் போட்டு அமர்ந்தார்கள் என்பதற்காகவே மூன்றுபேரை வெட்டிக் கொன்றாலும் எந்தவித சலனமும் இல்லாமல் கடந்து போவதைப் பார்த்து பழகியவர்களுக்கு தாய்லாந்து சிறுவர்கள் மீட்கப்பட்ட நிகழ்வு வியப்பையே ஏற்படுத்தும்.

 

thailand


 

கடந்த ஜூன் 23 ஆம் தேதி தாய்லாந்து கால்பந்தாட்ட அணியைச் சேர்ந்த 13 சிறுவர்களும் அவர்களுடைய பயிற்சியாளரும் தாம்லுவாங் என்ற நீளமான குகைக்குள் சாகசப் பயணம் மேற்கொண்டனர். 4 கிலோமீட்டர் தூரம் சென்ற நிலையில் பலத்தமழை பெய்து குகையில் நீர் நிரம்பிவிட்டது. வெளியில் வரமுடியாத அவர்கள் குகைக்குள் சிக்கிக் கொண்டார்கள்.

 

அவர்களைக் காணாமல் தேடிய அரசு, அவர்களைக் கண்டுபிடித்து மீட்க உடனடியாக சர்வதேச உதவியை நாடியது. அதைத்தொடர்ந்து, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் உதவிக்கரம் நீட்டின. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நீர்மூழ்கி வீரர்கள் குகைக்குள் சென்று சிறுவர்களும், பயிற்சியாளரும் உயிரோடு இருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து, அவர்களுக்கு தேவையான ஆக்சிஜன், உணவு மற்றும் உயிர்க்காப்பு பொருட்கள் வழங்கப்பட்டன.

 

thailand


 

குகையில் மழைநீர் அதிகரித்துவிடாமல் இருப்பதற்காக இந்தியாவைச் சேர்ந்த கிர்லோஷ்கர் மோட்டார் நிறுவனம் ராட்சத பம்ப்புகளை கொடுத்து நீரை வெளியேற்றிக் கொண்டே இருந்தது. இதனிடையே, சிறுவர்களுக்கு சுவாசிக்க ஆகிசிஜன் சிலிண்டரைக் கொடுத்துவிட்டு திரும்பும்போது தாய்லாந்து நாட்டின் கடற்படை வீரர் சமன் குனன் உயிரிழந்தார்.

 

ஒருவழியாக சிறுவர்களை மீட்பதற்கான திட்டம் வடிவமைக்கப்பட்டு, கடந்த ஞாயிறன்று தொடங்கியது. முதல் நாள் 4 சிறுவர்களும், திங்கள்கிழமை 4 சிறுவர்களும், மீதமிருந்த 4 சிறுவர்கள் மற்றும் ஒரு பயிற்சியாளர் செவ்வாய்க்கிழமையும் மீட்கப்பட்டனர்.

 

சிறுவர்கள் காணாமல் போய் 9 நாட்கள் அவர்களைத் தேடும்பணி நீடித்தது. அப்போதுதான், தாம்லுவாங் குகை முன் சிறுவர்கள் சென்ற சைக்கிள்கள் நிற்பதை பார்த்த சிலர் தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்துதான் சிறுவர்கள் குகைக்குள் சிக்கியிருக்கலாம் என்று தெரியவந்தது.

 

 

 

மனித உயிர்களின் மதிப்பறிந்த தாய்லாந்து அரசு அந்த உயிர்களைக் காப்பாற்ற கவுரவம் பார்க்காமல் சர்வதேச உதவியை நாடியது.

 

ஆனால், ஒக்கி புயலில் காணாமல் போன தனது நாட்டு மீனவர்கள் நூற்றுக்கணக்கானவர்களை காப்பாற்றுவதில் இந்தியக் கப்பற்படை வேண்டுமென்றே மெத்தனம் காட்டியது என்று கன்னியாகுமரி மீனவர்கள் குமுறியதை கேட்க முடிந்தது. கடலோரப்பகுதிகளில் இருந்து தங்களை வெளியேற்றுவதே இந்திய அரசின் நோக்கமாக இருக்கிறது என்று குற்றம்சாட்டியதும் கடல் அலையில் மோதி கரைந்துவிட்டது.

 

உயிரைக்கொல்லும் திட்டங்களுக்கு சாதகமாக மக்களுடைய உயிரை எடுக்கவும் தயங்காத அரசுகள், தாய்லாந்து அரசிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.