Skip to main content

ஆஸ்திரேலிய பிரதமர் திறந்துவைத்த காந்தி சிலை - மறுநாளே சேதப்படுத்திய மர்மநபர்கள்!

Published on 16/11/2021 | Edited on 16/11/2021

 

gandhi statue

 

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள ரோவில்லே பகுதியில் இந்திய சமூக மையம் அமைந்துள்ளது. இந்த மையத்தில் முழு உருவ காந்தி சிலை ஒன்றை ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கடந்த வெள்ளிக்கிழமை (12.11.2021) திறந்துவைத்தார்.

 

இந்தநிலையில், திறந்துவைக்கப்பட்ட மறுநாளே அந்த சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், "இது அவமானகரமானது. இந்த அளவிற்கான அவமரியாதையைப் பார்ப்பது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. உலகில் மிகவும் வெற்றிகரமான பன்முக கலாச்சார மற்றும் குடியேற்ற தேசமாக இருக்கும் ஒரு நாட்டில், கலாச்சார நினைவுச்சின்னங்கள் மீதான தாக்குதல்களை சகித்துக்கொள்ள முடியாது. இதற்குக் காரணமானவர்கள் ஆஸ்திரேலிய இந்திய சமூகத்தின் மீது மிகுந்த அவமரியாதை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்கள் இதற்காக வெட்கப்பட வேண்டும்" என கூறியுள்ளார்.

 

சேதப்படுத்தப்பட்ட காந்தி சிலை, இந்திய அரசால் ஆஸ்திரேலியாவுக்கு பரிசளிக்கப்பட்டது ஆகும். நாட்டின் பிரதமர் திறந்துவைத்த காந்தி சிலை மறுநாளே சேதப்படுத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி காங்கிரஸ் சார்பில் மரியாதை (படங்கள்)

Published on 30/01/2024 | Edited on 30/01/2024

 

 

மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி இன்று (30-01-24) சென்னை சத்தியமூர்த்தி பவனில் மகாத்மா காந்தி உருவப்படத்திற்கு, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி மலர் தூவி மரியாதை செய்தார். இதனையடுத்து அங்கு தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது. 

Next Story

திமுக சார்பில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
Acceptance of religious harmony pledge on behalf of DMK

நமது நாட்டின் தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 77வது நினைவு தினம் இன்று (30.01.2024) நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி டெல்லியில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர், பிரதமர் மோடி ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில் பல்வேறு இடங்களில் மத நல்லிணக்க உறுதிமொழிகளும் ஏற்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக தலைமை அலுவலகமாக அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் மத நல்லிணக்க உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என். நேரு, தங்கம் தென்னரசு, கீதா ஜீவன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்தனர். அதே போன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுக சார்பில் மத நல்லிணக்க உறுதிமொழி எடுக்கப்பட்டது.

முன்னதாக கடந்த 28 ஆம் தேதி தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டிருந்த அறிவிப்பில், ஜனவரி 30 ஆம் தேதி மத நல்லிணக்க உறுதி மொழியை அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும். அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மத நல்லிணக்க உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும். உறுதிமொழி ஏற்பில் அனைத்து மதங்களையும் சேர்ந்த பிரதிநிதிகளையும் பங்கேற்கச் செய்ய வேண்டும். 'எல்லோருக்கும் எல்லாம்' என்ற தமிழ்நாட்டின் மாண்பை இந்திய ஒன்றியத்திற்கு வெளிப்படுத்துவோம் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.