Skip to main content

பணத்திற்காக இளம்பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக பயன்படுத்தும் யூடியூப் சேனல்... நடவடிக்கை தேவை!

Published on 06/08/2021 | Edited on 07/08/2021

 

 YouTube channel misrepresenting children...

 

அண்மைக் காலமாகவே யூடியூப் போன்ற இணையங்களில் வியாபார நோக்கத்தோடு ஆபாசமான செய்திகள், பேச்சுக்களை பதிவுடுபவர்களை காவல்துறை கைது செய்து வருகிறது. அதன் அடிப்படையில் அண்மையில் பப்ஜி கேம் மூலம் பிரபலமான மதன் என்பவர் ஆபாசமாக பேசி வெளியிட்ட கேம் வீடியோவை அடிப்படையாகக்கொண்டு அவர் கைது செய்யப்பட்டதோடு அந்த சேனலும் முடக்கப்பட்டது. இதற்கு முன்பே பல மாதங்களுக்கு முன்பு 'சென்னை டாக்ஸ்' என்ற யூடியூப் சேனலில் கருத்துக்கேட்பு என்ற பெயரில் பொது இடங்களில் கூடும் இளைஞர்களிடம், பெண்களிடம் ஆபாசமாக கேள்விகள் கேட்கப்பட்டு ஆபாசமாக பதில்கள் பெறப்பட்டு வியாபார நோக்கத்தோடு ஆபாசமாக வெளியிடப்பட்ட வீடியோக்கள் டெலிட் செய்யப்பட்டதோடு சம்பந்தப்பட்ட நபர்கள் கைதும் செய்யப்பட்டிருந்தனர்.

 

youtube

 

இவ்வாறு தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில், இதேபோல் கண்ணில் சிக்காத பல யூடியூப் சேனல்கள் ஆபாசம் என்பதை மையமாகக் கொண்டு வியாபார நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது. இதில் ராபின் எஸ்ஜே என்பவர் நடத்தி வரும் யூடியூப் சேனலில் ஆபாசமான கருத்துக்கள் கொண்ட வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது. அதிலும் யூடியூப் வீடியோவின் முகப்பு பக்கத்தில் வைக்கப்படும் 'தம்ப்நெய்ல்' எனப்படும் விடீயோவின் முகப்பு புகைப்படத்தில் சம்பந்தமே இல்லாத இளம்பெண்களின் புகைப்படங்களை வைத்ததோடு 'பணமும் உண்டு சுகமும் உண்டு' என்ற டைட்டிலோடு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

 

youtube

 

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து காவல்துறை தொடர்ச்சியாக அறிவுறுத்தல்களை கொடுத்து வருகிறது. பாலியல் தொடர்பான விஷயங்களில் பாதிக்கப்பட்ட சிறுவர் சிறுமிகள், இளம்பெண்களின் புகைப்படங்களை வெளியிடக்கூடாது என்று இருக்கும் நிலையில், சம்பந்தமே இல்லாத இளம்பெண்களின் புகைப்படங்களை அவருடைய வீடியோவின் முகப்பு பக்கத்தில் வைத்து ஆபாசமான தலைப்பையும் வைத்து வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த யூடியூப் சேனல் மட்டுமல்லாது இதுபோன்று தவறான கண்ணோட்டத்தோடு வீடியோக்களை வெளியிடும் அனைத்து சேனல்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக ராபின் எஸ்ஜே என்ற இந்த சேனலில் முழுவதுமாக பாலியல் வியாபாரம், ஆண் விபச்சாரம் உள்ளிட்ட முழுக்க முழுக்க ஆபாச விஷயங்கள் தொடர்பாகவே அந்த நபர் வீடியோ வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.