Skip to main content

பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்; துண்டு பிரசுரம் கொடுக்க வைத்த நீதிமன்றம் 

Published on 03/10/2022 | Edited on 03/10/2022

 

A youth on a bike adventure; The court issued the pamphlet Open in Google Translate • Feedback  Google Translatehttps://translate.google.co.in Google's free service instantly translates words, phrases, and web pages between English and over 100 other lang

 

வாகனத்தில் சாகசம் செய்த நபருக்கு நூதன தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

கடந்த மாதம் 8ம் தேதி ஹைதராபாத்தை சேர்ந்த யூ-டியூபர் பைக் சாகசத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. இதனை தொடர்ந்து காவல்துறை அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது. இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. 

 

வழக்கை விசாரித்த நீதிமன்றம் இளைஞருக்கு முன் ஜாமீன் வழங்கி சில நிபந்தனைகளை விதித்தது. தொடர்ந்து மூன்று வாரங்கள் திங்கள் கிழமைகளில் காலை மாலை வேளைகளில் ஒரு மணி நேரம் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என நிபந்தனை விதித்து உத்தரவிட்டது.

 

இதனை தொடர்ந்து அந்த இளைஞர் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த பாதாதைகளை காட்டியும் துண்டுப்பிரசுரம் கொடுத்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

 


 

சார்ந்த செய்திகள்