Skip to main content

கொத்தமங்கலத்தில் கிணற்றில் இளம் பெண் மற்றும் பெண் குழந்தை சடலங்கள் மீட்பு

Published on 05/10/2017 | Edited on 05/10/2017
கொத்தமங்கலத்தில் கிணற்றில் இளம் பெண் மற்றும் பெண் குழந்தை சடலங்கள் மீட்பு 
 
கீரமங்கலம், அக், 5. கொத்தமங்கலம் கிராமத்தில் செவ்வாய் கிழமை காணாமல் போன இளம் பெண் மற்றும் ஒரு பெண் குழந்தையின் சடலங்கள் கிணற்றுக்குள் இருந்து மீட்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலிசார் விசாரனை செய்து வருகின்றனர். 

காணாமல் போன் தாய் மகள் : 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் சிதம்பரவிடுதி பகுதியை சேர்ந்தவர் பழனிகுமார் (35) விவசாயி. அவரது மனைவி வசந்தா (30) இவர்களது மகள் முத்தமிழ் (5). கடந்த சில நாட்களாக கணவன் மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்துள்ளது. இந்த நிலையில் செவ்வாய் கிழமை மாலை இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு வசந்தா மற்றும் அவரது குழந்தை முத்தமிழ் ஆகிய இருவரையும் காணவில்லை. உறவினர்கள் பல பகுதியிலும் தேடியுள்ளனர்.  

சடலமாக மீட்பு : 

இந்த நிலையில் பல இடங்களிலும் தேடிய உறவினர்கள் பழனிமுத்த வீடு அருகே உள்ள பழைய கிணற்றில் பார்த்த போது அந்த கிணற்றில் வசந்தா மற்றும் அவரது மகள் முத்தமிழ் ஆகிய இருவரும் சடலமாக மிதப்பது தெரிந்து அக்கம் பக்கத்தினர் கிணற்றுக்குள் இறங்கி சடலங்களை மீட்டனர்.  இந்த சம்பவம் குறித்து கீரமங்கலம் போலிசாருக்கு தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரனை செய்து வருகின்றனர். தாய், மகள் கிணற்றில் சடலமாக கிடந்த 
சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

-இரா. பகத்சிங்

சார்ந்த செய்திகள்