Skip to main content

தவறான பாதையில் வழக்கு செல்கிறது! நிர்மலாதேவி, முருகன் ஜாமின் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

Published on 28/09/2018 | Edited on 28/09/2018

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மற்றும் பேராசிரியர் முருகன்,  உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஜாமின் கோரிய வழக்கில், இன்று தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. 

 

nirmala


ஜாமின் வழங்கக்கோரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்திருந்தார் நிர்மலாதேவி. ஆறு முறையும் ஜாமின் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியின் ஜாமின் மனுவை கடந்த ஜூலை மாதம் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

 

nirmala


இன்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், நிர்மலாதேவி மற்றும் முருகனின் ஜாமின் மனுக்கள் நீதிபதி இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்  ‘இச்சம்பவத்தில் குற்றவாளிகள் மூன்று பேரைத் தவிர, இதன் பின்புலத்தில் இருந்த முக்கிய அதிகாரிகளைத் தப்பிக்க வைக்கும் நோக்கத்தோடு போலீசார் செயல்படுகின்றனர். பாதிக்கப்பட்ட மாணவிகள் எந்த இடத்திலும் முருகன், கருப்பசாமி மீது குற்றம் சாட்டவில்லை. பேராசிரியை நிர்மலாதேவிக்காக, புத்தாக்கப் பயிற்சி மைய இயக்குநர் கலைச்செல்வன்தான், புத்தாக்கப் பயிற்சி வகுப்பிலிருந்து நீக்கக் கூடாது என்று தேவாங்கர் கல்லூரிக்கு கடிதம் எழுதினார். காவல்துறையினரோ, கலைச்செல்வனிடம் விசாரணை நடத்தவில்லை. அதே நேரத்தில், நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகிய மூவர் மீது மட்டுமே குற்றச்சாட்டுக்களைக் கூறுகின்றனர். தவறான பாதையில் இந்த வழக்கு செல்கிறது. நீதிமன்றம் உத்தரவிடும் எவ்வித உத்தரவுக்கும் கட்டுப்படக்கூடியவர்கள் என்பதால், ஜாமின் வழங்கிட வேண்டும்.’ என்று கூறினார்.

 

nirmala

 

நிர்மலாதேவியுடன் முருகனுக்கு நேரடித் தொடர்பு உண்டா? மாணவிகளுடன் முருகன் பேசியிருக்கிறாரா? நேரடி ஆதாரம் எதுவும் இருக்கிறதா? என்பது போன்ற கேள்விகளுக்கு போலீசார் தரப்பில் ‘இல்லை’ என்றே பதிலளித்திருக்கின்றனர். மாணவிகளுக்குப் பொருளாதார ரீதியாக உதவும் அளவுக்கு முருகன் ஒன்றும் வசதியானவர் கிடையாது என்பதற்கு ஆதாரமாக, வங்கியில் கடன் பெற்ற விபரம் மற்றும் நகை அடமான ரசீது போன்றவற்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். 

 


அரசுத் தரப்பில், குற்றவாளிகளுக்கு ஜாமின் வழங்கினால், சாட்சிகளைக் கலைக்க முற்படுவார்கள். அதனால், ஜாமீன் வழங்கக் கூடாது என்று கூறப்பட்டது. இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பினை  தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டிருக்கிறது உயர் நீதிமன்றம்

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.