உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் சென்னை வந்தடைந்தார்.
44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி, கண்கவர் நிகழ்ச்சிகளுடன் நேற்று தொடங்கிய நிலையில், கடந்த ஏழு நாட்களாக வெளிநாடுகளில் இருந்து ஏராளமான செஸ் வீரர்கள், சென்னைக்கு வந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில், நேற்றிரவு உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் சென்னைக்கு வருகை தந்தார்.
அவரை வரவேற்று அதிகாரிகள் மலர்க்கொத்து அளித்தனர். அவருடன் செல்ஃபி எடுத்துக் கொள்வதற்காக, விமான நிலையத்தில் ஏராளமான இளைஞர்கள் குவிந்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மேக்னஸ் கார்ல்சன், "இந்தியாவில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் நான் பங்கு பெறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். வெற்றி பெறுவதற்கு முழு முயற்சியையும் செலுத்துவேன்" எனத் தெரிவித்தார்.