Skip to main content

''இதனாலதான்டா கெட்டு போறீங்க...'' - ரோட்டிலேயே லெஃப்ட் ரைட் வாங்கிய பெண்மணி... வைரலாகும் வீடியோ!  

Published on 16/12/2021 | Edited on 16/12/2021

 

The woman who bought the left right on the road ... The video goes viral!

 

அண்மைக்காலமாகவே பள்ளி சிறார்கள், கல்லூரி மாணவர்கள் ஆபத்தான முறையில் பேருந்துகளில் பயணம் செய்யும் வீடியோ காட்சிகள் வெளியாகி சமூகவலைதளங்களில் கண்டனத்தைப் பெற்றுவருகின்றன. இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் பள்ளி சிறார்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதும், புகைப்பிடித்தல், மது அருந்துதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவது தொடர்பாக வீடியோ காட்சிகள் வெளியாகி அவ்வப்போது பேரதிர்ச்சியை தருகிறது.

 

The woman who bought the left right on the road ... The video goes viral!

 

இப்படி இருக்க, பள்ளி சிறுவன் ஒருவன் பள்ளி சீருடையுடன் தெருவில் கேஷுவலாக புகைப்பிடித்துச் செல்ல, அதனைக் கண்ட பெண்மணி ஒருவர் அந்தப் பள்ளி மாணவனைப் பிடித்து லெஃப்ட் ரைட் வாங்கும் காட்சிகள் சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது. அந்தக் காட்சியில் மாணவன் பள்ளி சீருடையுடன் சிகரெட் புகைப்பதைக் கண்டு ஆத்திரமடைந்த பெண்மணி, அந்த மாணவனை சட்டையோடு பிடித்து, ''உன்ன உன் அம்மா அப்பா எல்லாம் கஷ்டப்பட்டு வளர்க்குறாங்க... இப்படி ரோட்ல சாதாரணமா புகைப்பிடிக்கிறனா இந்தப் பழக்கம் உனக்கு இப்போ இருந்திருக்காது... ஆரம்பத்திலேயே இருந்திருக்கும்... படிக்கப் போற இடத்திற்கு இப்படித்தான் தம் அடிச்சிட்டு போவியா... ரோட்ல பெரியவங்க எல்லாம் போறாங்கன்னு கொஞ்சம் கூட பயம் இல்லாம போற.. இதனாலதான்டா கெட்டுப் போறீங்க...'' என சட்டையைப் பிடித்துக்கொண்டு சிறுவனை அடிக்கப் பாய்ந்தார்.

 

''உனக்கு மனசாட்சி இல்ல... என்னடா யூனிஃபார்ம் போட்டு சிகரெட் குடிக்குறோமே, யார்னா கேட்க மாட்டங்களானு... உன் அம்மா அப்பா ஃபோன் நம்பர் கொடு, இல்லன்னா போலீசில் ஒப்படைப்பேன்...'' என கடுமையாக எச்சரித்தார். ''இன்னைக்கு நீ சிகரெட் கேட்டால் நாளைக்கு கஞ்சா கேட்பயே நீ... உன் வீடு எங்க இருக்கு சொல்லு... உங்க அப்பா நம்பர் வேணும்... வீட்டோட முடிக்கவா இல்ல, ஸ்டேஷன்ல முடிக்கவா...” என எச்சரிக்க, அந்த மாணவன் ''அக்கா... அக்கா...'' என கெஞ்சினான். அதன்பின் எச்சரித்த அந்தப் பெண்மணி புத்திமதி சொல்லி அந்த மாணவனை அனுப்பிவைத்தார். சமூகவலைதளத்தில் வெளியான இந்த வீடியோ வைரலாக, அந்தப் பெண்மணிக்குப் பாராட்டுக்கள் குவிந்துவருகிறது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணமான பெண்ணுடன் தப்பிச் சென்றவரை சிறுநீர் குடிக்க வைத்த கொடூரம்!

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
The forcing a man to drink urine for eloping with married woman

திருமணமான பெண்ணுடன் தப்பிச் சென்றுடன் ஒருவரை, கிராம மக்கள் அடித்து துன்புறுத்தி, கட்டாயப்படுத்தி சிறுநீர் குடிக்க வைத்து, காலணி மாலை அணிவித்து ஊர்வலம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மத்திய பிரதேசம் மாநிலம், உஜ்ஜைன் பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட நபர், திருமணமான பெண்ணுடன் ஊரைவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த தகவல் கிராமம் முழுவதும் பரவிய நிலையில், ராஜஸ்தான் மாநிலத்திற்கு சென்ற அவர்களைப் பிடித்து கிராம மக்கள் தங்கள் கிராமத்திற்கு அழைத்து வந்து கொடுமைப்படுத்திய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

இது தொடர்பான வீடியோவில், பாதிக்கப்பட்ட நபரது தலைமுடி மற்றும் மீசையின் சில பகுதிகள் மொட்டையடிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்த இளைஞரை மரத்தில் கட்டி வைத்து செருப்பு மாலை அணிவித்து கிராம மக்கள் தாக்கியுள்ளனர். அவரை வலுக்கட்டாயமாக பாட்டிலில் இருந்து சிறுநீரை குடிக்க வைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர். அவருடன் தப்பிச் சென்ற பெண்ணையும் தாக்கி கொடுமைப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

இது குறித்து போலீசார் கூறுகையில், ‘வீடியோக்கள் காவல்துறையின் கவனத்திற்கு வந்த பிறகு, நாங்கள் பாதிக்கப்பட்டவரின் வீட்டை முன்கூட்டியே தொடர்பு கொண்டோம், ஆனால் அவர் அங்கு இல்லை. பாதிக்கப்பட்ட நபருடன் நான் தொலைபேசியில் பேசினேன். அவர் எங்களை சந்திப்பார். குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் சம்பவம் நடந்த இடத்தை சரிபார்த்த பிறகு, சட்ட நடவடிக்கை தொடங்கப்படும். சம்பவத்தின் பின்னணி குறித்து இன்னும் தெளிவாக இல்லை. பாதிக்கப்பட்டவருடன் பேசிய பிறகு உறுதி செய்யப்படும் என்று’ என்று கூறினர். 

Next Story

பாஜக ரோட் ஷோவில் விதிமீறல்; கோவையில் எழுந்த சர்ச்சை

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Violation at BJP road show; Controversy in Coimbatore

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று கோயம்புத்தூர் வந்திருந்த பிரதமர் மோடி ரோட் ஷோவில் ஈடுபட்டிருந்த நிலையில் இன்று சேலத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் நடைபெற கலந்துகொள்ள இருக்கிறார். இந்தக் கூட்டத்தில் தற்பொழுது கூட்டணியில் இணைந்திருக்கும் பாமக உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சித் தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சேலம் மாவட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மாற்றங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று கோவையில் நடந்த ரோட் ஷோ நிகழ்ச்சியில் விதி மீறலாக பள்ளி மாணவர்கள் அழைத்து வரப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்த, இது தொடர்பாக புகார்கள் எழுந்தது. இந்நிலையில், அது குறித்து விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை ஆட்சியர் கிராந்தி குமார் தெரிவித்துள்ளார். நேற்று நடந்த பாஜக நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்ட கலை நிகழ்ச்சிக்கான மேடையில் பள்ளி மாணவர்களும் இருந்தது குற்றச்சாட்டுக்கு காரணமாகியது. இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு தேர்தல் அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில் விசாரணை நடத்தப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.