Skip to main content

தமிழகத்தில் இனிமேல்தான் பாஜக விஸ்வரூபம் எடுக்கும்; நீங்களா நாங்களா பார்ப்போம்- ஸ்டாலின் பேச்சுக்கு தமிழிசை பதில்!!

Published on 23/12/2018 | Edited on 23/12/2018
kk

 

இன்று விழாவில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் பிரதமர் மோடி சாடிஸ்ட் மனப்பான்மை கொண்ட பிரதமர் எனவேதான் கலைஞர் சிலை திறப்பு விழாவில் அவரை சாடிஸ்ட் பிரதமர் என்று கூறினேன். புயலால் பாதித்த தமிழக மக்களுக்காக ஒரு வருத்தம் கூட தெரிவிக்காத பிரதமரை சாடிஸ்ட் பிரதமர் என்று சொல்வதில் என்ன தவறு. எனவே தற்போது உறுதியாக அதே நிலையில் இருக்கிறேன். பிரதமர் மோடி  சாடிஸ்ட் பிரதமர் என கூறியிருந்தார். ஸ்டாலினுக்கு பதிலளிக்கும் வகையில் சென்னை அமைந்தகரையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசுகையில்,

 

மதுரையில் மீனாட்சி அம்மன் பெயர் புகழ் எப்படி இருக்கிறதோ அதேபோல் மதுரையில்  சாமானியர்களுக்கு சேவை செய்ய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை ஓங்கி நிற்கும். தமிழகத்தில் உள்ள தலைவர்கள் குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மோடி அவர்கள் புயலுக்கு தமிழக மக்களுக்கு எந்த ஒரு வருத்தத்தையும் தெரிவிக்கவில்லை என்று தொடர்ச்சியாக பொய் பேசி வருகிறார். எனது ட்விட்டர் பக்கத்தில் நான் சொல்லியிருந்தேன் ''உயிரிழந்த தமிழக மக்களின் குடும்பத்தோடு நான் நின்று கொண்டிருக்கிறேன்'' என்று தெளிவாக மோடி பதிவிட்டு இருக்கிறார். முதலமைச்சரிடம் என்னென்ன உதவிகள் தேவையோ அதை செய்கிறேன் என உறுதியளித்து இருக்கிறேன் என சொன்னதையும் மறைத்து... மறைத்து... ஒரு பொய்யை ஸ்டாலின் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

 

இன்னொன்றையும் அவர் சொல்கிறார். தமிழகத்தில் ஏதோ பாஜகவை ஒழித்துவிட்டேன் என கூறுகிறார். ஸ்டாலின் அவர்களே தமிழகத்தில் இனிமேல்தான் பாஜக விஸ்வரூபம் எடுக்கும் நீங்களா நாங்களா என்று பார்க்கத்தான் போகிறோம். எங்களை ஏதோ ஒழித்து விடலாம் என எண்ணாதீர்கள்.  உங்களால் தமிழகத்திலேயே யாரையும் எதிர்கொள்ள முடியாது. இதில் அகில இந்திய அளவில் எப்படி எதிர்கொள்வீர்கள். அகில இந்திய கூட்டணிக் கட்சிகள் அத்தனையும் ஸ்டாலின் ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்ததை  ஏற்றுக் கொள்ளாமல் எல்லோரும் பின்வாங்கி விட்டார்கள். இவர் முன்மொழிய முன்மொழிய எல்லோரும் பின்வாங்கி கொண்டே இருக்கிறார்கள். அப்படி இருக்கும் பொழுது தமிழகத்தில் பாஜகவை இவர் ஒன்றும் ஒடுக்கவும் முடியாது அடக்கவும் முடியாது.

 

ஏற்கனவே பாஜக போன பாராளுமன்ற தேர்தலில் 19.5 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. இந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் அவர்கள் கூட்டணியா அல்லது நாங்களா என்று பார்த்து விடுவோம். எனவே சும்மா பொய் பிரச்சாரம் செய்யக்கூடாது. சாடிஸ்ட் பிரதமர் என்று  நீங்கள் சொல்லிக் கொண்டிருக்கலாம். மக்கள் அப்படி நினைக்கவில்லை. லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த சாடிஸ்ட் மனப்பான்மை கொண்ட சோனியா காந்தியை மேடையில் வைத்துக் கொண்டு பிரதமரை சாடிஸ்ட் பிரதமர் என சொல்கிறார் எனவே அவர் இனி  சாடிஸ்ட் ஸ்டாலின் எனக்கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.