Skip to main content

விருதுநகர் பாலியல் கொடூர வழக்கு...  நான்கு பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்!

Published on 04/04/2022 | Edited on 04/04/2022

 

15 days court custody for four!

 

விருதுநகரில்  இளம்பெண் ஒருவர்  8 பேரால் வீடியோ எடுத்து மிரட்டப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேருக்கு சிபிசிஐடி காவலில் விசாரணை முடிந்த நிலையில் 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

 

பொள்ளாச்சி கொடூரத்தை போல் விஸ்வரூபம் எடுத்துள்ள இந்த சம்பவத்தில் 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கைதான ஹரிஹரன், ஜூனைத் அகமது, பிரவீன் மற்றும் மாடசாமி ஆகிய 4 பேரை, 7 நாட்கள் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் காவலில் வைத்து விசாரிப்பதற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.  அதன்படி காவலில் எடுக்கப்பட்ட 4 பேரிடமும் சிபிசிஐடி விசாரணை முடிந்த நிலையில், நால்வரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனையடுத்து நான்கு பேருக்கும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்