Skip to main content

திருப்பதிக்கு ஒருமுறை வந்தாலே போதுமானது- எடப்பாடியை சந்தித்த பின் வெங்கையா நாயுடு பேச்சு...

Published on 25/09/2018 | Edited on 25/09/2018
vengaiya naidu


திருப்பதி கோவிலில் இன்று அதிகாலை துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவும், தமிழக முதல்வர் பழனிச்சாமியும் சாமி தரிசம் செய்தனர். தரிசனத்திற்காக நேற்று இரவே சென்றிருந்த வெங்கையா நாயுடுவை பழனிச்சாமி சந்தித்து சால்வை போர்த்தினார். இந்த திடீர் சந்திப்பு பரப்பரப்பை ஏற்படுத்தியது. பின்னர் தரிசனம் செய்துவிட்டு பத்திரிகையளர்களை சந்தித்த பழனிச்சாமி, ”உலக நன்மைக்காகவும், மக்கள் நலமுடனும், மகிழ்ச்சியுடனும் வாழ பிராத்தனை மேற்கொண்டேன்” என்றார்.
 

அதேபோல, தரிசனத்தை முடித்துவிட்டு பேசிய துணை குடியரசுத் தலைவர், ”தமிழக முதல்வர் தம்மை மரியாதை நிமித்தமாகத்தான் சந்தித்தார். மாவோயிஸ்டுகள் குறித்து கேள்வி கேட்டபோது, திருமலையில் இதுகுறித்து நான் பேசவிரும்பவில்லை என்றேன்” என்று தெரிவித்தார்.
 

மேலும், ”முக்கிய பிரமுகர்கள் யாரும் திருப்பதிக்கு வருடத்திற்கு பலமுறை வேண்டாம். வருடத்திற்கு ஒருமுறை வந்தாலே போதும். இப்படி பிரமுகர்கள் அடிக்கடி வருவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.” என்றும் தெரிவித்துள்ளார். அவ்வப்போது எழுமலையானை சந்தித்து பிரார்த்தனை மேற்கொள்வது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்பது குறிப்பிடத்தக்கது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

துல்கர் சல்மான் படத்தைப் பாராட்டிய முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர்!

Published on 18/08/2022 | Edited on 18/08/2022

 

Former Vice President of India Venkaiah Naidu praises dulquer salmaan in 'sita ramam' movie

 

துல்கர் சல்மான் நடிப்பில் இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் 'சீதா ராமம்'. இப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணால் தாக்கூர் நடித்திருந்தார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா, கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஒரு ராணுவ வீரருக்கும் இளவரசிக்கும் இடையேயான காதலை அழகாக சொல்லியிருக்கும் இப்படத்திற்கு பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர். 

 

அந்த வகையில் இந்தியாவின் முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு 'சீதா ராமம்' படத்தை பார்த்து பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல படத்தைப் பார்த்த உணர்வைத் தந்தது 'சீதாராம்'. போர் ஓசையின்றி கண்களுக்கு இதமான இயற்கையின் அழகைக் கண்டறிந்த இயக்குநர் ஹனு ராகவபுடி, தயாரிப்பாளர் அஷ்வினிதத், ஸ்வப்னா மூவி மேக்கர்ஸ் உள்ளிட்ட படக்குழுவினருக்கு வாழ்த்துகள். நடிகர்களின் நடிப்பும், தொழில்நுட்பத் துறைகளின் ஒருங்கிணைப்பும் அருமையான காட்சியை தந்தது. எளிமையான காதல் கதை போலல்லாமல், வீரனின் பின்னணியுடன் கதை அமைந்திருக்கிறது. அனைவரும் பார்க்க வேண்டிய படம்." என குறிப்பிட்டுள்ளார். 

 

Next Story

சிறந்த ஏற்றுமதியாளருக்கான விருது (படங்கள்)

Published on 25/04/2022 | Edited on 25/04/2022

 

மெப்ஸ் சிறப்பு பொருளாதார மண்டலம் சார்பில் ஏற்றுமதி நிறுவனங்களின் ஏற்றுமதி, முதலீடு, வேலைவாய்ப்பு போன்ற பிரிவுகளின் சாதனைக்கான 2019-20 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஏற்றுமதியாளர்கள் விருது வழங்கப்பட்டன. இந்த விருதினை துணை  ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கினார். உடன் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் அனுப்பிரியா படேல் மற்றும் தமிழக வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் இருந்தனர்.