Skip to main content

திமுக தலைவராக ஸ்டாலினை முன்மொழிந்த  எ.வ.வேலு!

Published on 17/08/2018 | Edited on 17/08/2018
v


திமுக தலைவர் கலைஞர் மறைவுக்கு ஆகஸ்ட் 14ந்தேதி திமுக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதன்பின் மாவட்ட அளவிலான செயற்குழு கூட்டங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெற துவங்கியுள்ளது. 


திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், 16.08.2018 ந்தேதி  காலை 11.00மணிக்கு திருவண்ணாமலை மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னதாக மாவட்ட திமுக அலுவலக வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த, தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு எம்.எல்.ஏ தலைமையில் வடக்கு, தெற்கு மாவட்ட நிர்வாகிகள் மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்.


பின்னர் செயற்குழுகூட்டம் துவங்கியது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் த.வேணுகோபால் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.சிவானந்தம், கழக தணிக்கைக்குழு உறுப்பினர் கு.பிச்சாண்டி, எம்.எல்.ஏ முன்னிலை வகித்தனர். கலைஞர் மறைவிற்கு எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.


மாநில செயற்குழுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி முன்னாள் அமைச்சரும், மாவட்ட கழக செயலாளருமான எ.வ.வேலு எம்.எல்.ஏ பேசினார். அதன்பின்னர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாய் நிறைவேற்றப்பட்டது.

 

v

தீர்மானம் : 1

ஒப்பாரும் மிக்காருமில்லா தமிழனத்தின் தனிப்பெருந்தலைவர், தமிழாய்ந்த முத்தமிழ் அறிஞர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் 50 ஆண்டு தலைவர் திராவிட பேரியகத்தின் முதுபெருந்தலைவர் போட்டியிட்ட 13 பொதுதேர்தல்களிலும் தோல்வியே காணாத சட்டப்பேரவை உறுப்பினர், சட்டமேலவை உறுப்பினர், 19ஆண்டு காலம் தமிழகத்தின் முதலமைச்சர், வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழக இருக்கட்டும் என்று 14வயதில் தமிழ்க்கொடி ஏந்தி, கல்லக்குடி பெயர் மாற்ற தண்டவாளம் தலை வைத்து, மொழிப்போரில் தமிழுக்காக தனிமைச் சிறை அனுபவித்து, தமிழ் வாழ தமிழர்  வாழ, தளராமல் உழைத்த தலைவர், உலகத்து தமிழர்களில் ஒருவருக்கு கொடுமையென்றால், உடனே குரல் கொடுத்தது உரிமை காத்து மானம் காத்த தலைவர், அரசண்ட காலத்தில் விவசாயி, தொழிலாளி, ஆசிரியர், அரசு ஊழியர் அனைத்து நிலை மக்களுக்கும் திட்டம் தந்து ஆதரித்த முதலமைச்சர். தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை நலம் காத்தவர் மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி கண்ட நாயகர். பெண்ணுரிமை போற்றியவர் இந்திய திருநாட்டிற்கே ஏராள முன்னோடி திட்டங்களைத்தந்தவர்.


எழுத்தாளர், நாவலாசிரியர், கட்டுரையாளர், கவிஞர், பத்திரிக்கையாளர், நாடகஆசிரியர், நாடக நடிகர், திரைப்பட கதை, வசன கர்த்தா, திரை இசைப்பாடல் ஆசிரியர் என தொட்ட துறை எல்லாம் முத்திரை பதித்தவர். சுயமரியாதை, பகுத்தறிவு, மூடநம்பிக்கை எதிர்ப்பு என வாழ்நாள் முழுவதும் பெரியாரின் பிள்ளையாய் அண்ணாவின் தம்பியாய் திகழ்ந்தவர்.

தேசிய அரசியலில் கோலோச்சியவர், அரசியல் வாழ்க்கையில்

புயல் அடித்த போதும், பூம்பம் நிகழ்ந்த போதும்,

அலைஅடித்து சாய்ந்த போதும், ஆபத்து சூழ்ந்த போதும்,

இடர்கள் கோடி நேர்ந்த போதும், ஏமாற்றம் நிகழ்ந்த போதும்,

துரோகங்கள் தொடர்ந்த போதும், மலைஉடைந்து சரிந்த போதும்,

மனம் சலியா மாமனிதர், கழகத்தை காத்த தீரர்.


திருக்குவளை எனும் சிறிய கிராமத்தில் எளிய விவாசய குடும்பத்தில் பிறந்த உலகமே திரும்பி பார்க்கும் வகையில் இறுதிவரை கொள்கை வழிநின்று ஓயாமல் உழைத்த ஓய்வறியா தலைவர் தனது 95வயதில் 81 ஆண்டு கால மொழி, இனம், நாடு பகுத்தறிவு சுயமரியாதை, சமூக நீதி, என உழைத்து ஓராயிரம் ஆண்டு ஓங்கித்தவகிடந்து வாரது வந்துதித்த வரலாற்று நாயகன் இறுதியில் ஓய்வு கொடுத்து தன்னுடைய ஆருயில் அண்ணன் நம்முடைய தலைவர், பேரறிஞர் அண்ணா அவர்கள் மீளாத்துயில் கொண்டுள்ள இடத்தருகில் துயில் கொண்டுவிட்டார்.


நம்முடைய இனத்தலைவர் கலைஞர் அவர்களின புகழ் காருள்ள வரை, கதிர் நிலவு உள்ளவரை, பாருள்ளவரை கழக உடன் பிறப்புகளாகிய நாம்காத்து அவர் கண்ட காத்து கடைபிடிப்போம் நிறைவேற்றுவோம் உன உறுதிஏற்று, தலைவர் கலைஞர் அவர்களின் பிரிவால் பெரிதும் துயருற்ற கழக செயல்தலைவர் தளபதி அவர்களுக்கும்,  தலைவர் கலைஞர் அவர்களின் கோடிக்கணக்கான உடன் பிறப்புகளுக்கும் ஆழ்ந்த வருத்தத்தையும், தலைவர் கலைஞர் அவர்களுக்கு ஆழ்ந்த இதய அஞ்சலியையும் வீர வணக்கத்தையும் இம்மாவட் கழகம் தெரிவித்துக் கொள்கிறது.


தீர்மானம் : 2


தலைவர் கலைஞர் அவர்களின், பேரிழப்புக்கு பிறகு கழகத்தைக் கட்டிக்காக்க, கழகத்தை வழிநடத்த 11/2 கோடி கழகதொண்டர்களின் ஏகோபித்த எண்ணம் நிறைவேற, கழக செயல்தலைவர் தளபதி அவர்களை திராவிட முன்னேற்றக் கழத்தின் தலைவராக பொறுப்பெற்க இம்மாவட்ட கழகம் ஏகமனதாக முன்மொழிகிறது. இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.


அதிகாரத்தை கைப்பற்றுவேன் என திமுகவில் இருந்து நீக்கப்பட்ட  அழகிரி போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில் ஸ்டாலினை, திமுகவின் தலைவராக்க மாவட்ட கமிட்டிகள் தீர்மானம் இயற்ற துவங்கியுள்ளன.

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.