Skip to main content

திருச்சி சிறை பெண் வார்டன் தற்கொலைக்கு காரணமான காதலன் கைது! கல்யாணம் நிறுத்தம்!!

Published on 06/02/2019 | Edited on 06/02/2019

கடலூர் மாவட்டம் பெரியகாட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த செல்லப்பன் மகள் செந்தமிழ்செல்வி (வயது 23). இவர் திருச்சி பெண்கள் சிறையில் வார்டராக பணியாற்றி வந்தார். திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறைக்காவலர் குடியிருப்பில் தங்கி பணிக்கு சென்று வந்த அவர், கடந்த 3-ந்தேதி இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கே.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தினர்.

 

suicide

 

 

 

இதில், அவரும் திருச்சி மத்திய சிறையில் வார்டனாராக பணியாற்றி வரும் வெற்றிவேலும் (24) காதலித்து வந்ததும், வெற்றிவேலுக்கு வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு நடந்ததால், காதல் தோல்வியின் காரணமாக செந்தமிழ்செல்வி தற்கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

 

இதற்கிடையில் தற்கொலை செய்த செந்தமிழ்செல்வியின் தந்தை செல்லப்பன் கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் தனது மகளின் தற்கொலைக்கு காரணமான வெற்றிவேல் மீதும், சாதியின் பெயரை சொல்லி திட்டிய அவரது அண்ணன் கைலாசம், அவரது அண்ணி ராஜசுந்தரி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க தெரிவித்திருந்தார். அதன்பேரில் தற்கொலைக்கு தூண்டியதாக வெற்றிவேல், அவரது அண்ணன், அண்ணி ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

 

mm

 

வெற்றிவேலும், அவரது அண்ணன் கைலாசமும் திருச்சி மத்திய சிறையில் வார்டராக பணியாற்றி வருகின்றனர். ராஜசுந்தரி திருச்சி மகளிர் சிறையில் வார்டராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தங்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தததால் 3 பேரும் தலைமறைவாகினர். வெற்றிவேலின் சொந்த ஊர் அரியலூர் மாவட்டம் திருமானூர் ஆகும். 3 பேரையும் பிடிக்க கே.கே.நகர் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 3 பேரையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

 

 

இந்த நிலையில் வெற்றிவேல் திருமானூர் பகுதியில் தங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் விரைந்து சென்று அவரை கைது செய்து திருச்சி அழைத்து வந்தனர். மேலும் திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

 

mm

 

கைதான வெற்றிவேல் அளித்த வாக்குமூலத்தில், தான் செந்தமிழ்செல்வியை காதலிக்கவில்லை வேறு ஒருவரை காதலித்தேன். எனக்கும் அவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு மேல் தான் பழக்கம் என்றும் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். 

 

 

இதற்கு இடையில் வெற்றிவேலுக்கு சுவாமிமலையில் வேறொரு பெண்ணுடன் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்த விவகாரம் தெரிந்ததும் அந்த திருமணம் நிறுத்தப்பட்டு விட்டது. இதற்கிடையில் செந்தமிழ்செல்வி அறையில் இருந்து ஒரு டைரி, அவரது செல்போனை கைப்பற்றியிருந்தனர். அந்த டைரியில்

செந்தமிழ்செல்வியும், வெற்றிவேலும் காதலித்து வந்தது பற்றி பல உருக்கமான தகவல்களை கைப்பற்றியிருக்கிறார்கள்.

 

.இதற்கு இடையில் காதலன், செந்தமிழ்செல்வி, அவருடைய அப்பா செல்லப்பன் பேசிய காதல், திருமணம், குறித்த ஆடியோ வெளியாகி உள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.