Skip to main content

''உண்மையை காலம் சொல்லும்''.... பாடகியின் குற்றச்சாட்டிற்கு கவிஞர் வைரமுத்து ட்வீட்

Published on 10/10/2018 | Edited on 10/10/2018

 

VAIRAMUTHTHU

 

பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்திருந்த நிலையில், தன்மீதான குற்றச்சாட்டிற்கு ''உண்மைக்கு புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை உண்மையை காலம் சொல்லும்'' என ட்வீட்டரில் கவிஞர் வைரமுத்து விளக்கம் அளித்துள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவில்,

''அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைகாலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன் அவற்றில் இதுவும் ஒன்று. உண்மைக்கு புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை ,உண்மையை காலம் சொல்லும்'' என தெரிவித்துள்ளார்

சார்ந்த செய்திகள்