Skip to main content

ஒரே நாளில் மூன்று படுகொலை! புதுவை மக்கள் பீதி!

Published on 22/12/2018 | Edited on 22/12/2018

சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது47), மீனவரான இவர் கடந்த 2 ஆண்டுகளாக புதுச்சேரி வீராம்பட்டினம் நாகூரான் தோட்டம் பகுதியில் உள்ள உறவினரான முருகன் வீட்டில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வந்தார். மதுகுடிக்கும் பழக்கம் உள்ள ஸ்ரீதர் நேற்று முன் நாள் இரவு வீராம்பட்டினத்தில் உள்ள சாராய கடைக்கு மது குடிக்க சென்றார். அங்கு சாராயம் குடித்து கொண்டு இருந்த போது ஸ்ரீதருக்கும்,  வீராம்பட்டினம் சுனாமி குடியிருப்பை சேர்ந்த கமல் (35) என்ற வாலிபருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது கமலை ஸ்ரீதர் தாக்கினார். அதையடுத்து  நேற்று (21.12.2018) அதிகாலை 4 மணிக்கு ஸ்ரீதர்  சாராயக்கடைக்கு சென்ற போது அங்கிருந்த கமலுக்கும், ஸ்ரீதருக்கும் மீண்டும் சண்டை ஏர்பட்டுள்ளது.  ஆத்திரமடைந்த கமல் அங்கிருந்த சோடா பாட்டிலை உடைத்து ஸ்ரீதரின் கழுத்தில் சரமாரியாக குத்தினார். அதில் ஸ்ரீதர் அதே இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து அரையாங்குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

murder

 

அதேபோல் நேற்று மாலை  புதுச்சேரி சின்னையாபுரத்தை சேர்ந்தவர் அய்யப்பன்(26) என்ற மெக்கானிக் நெல்லித்தோப்பு மணிமேகலை அரசு பள்ளி அருகே மோட்டார் சைக்கிளில்  சென்று கொண்டு இருந்தார்.  அப்போது அவரை வழிமறித்த 4 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக கத்தியால் வெட்டி விட்டு தப்பியோடியது.  ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டு இருந்த அய்யப்பனை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.  அங்கு  சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். உருளையன்பேட்டை போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பகுதியில் நடந்த கொலை வழக்கில்  அய்யப்பன் முக்கிய குற்றவாளி என்பதும்,  அதற்கு பழிக்குப்பழியாக வெட்டபட்டாரா? என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

murder

 

 

இந்நிலையில் நேற்று இரவு அரியாங்குப்பத்தை அடுத்துள்ள தமிழக பகுதியான சின்ன இருசம்பாளையத்தை சேர்ந்த சந்திரன் என்பவர் நோணாங்குப்பம் அருகே மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செயப்பட்டார்.

 

murder

 

நேற்று மட்டும் புதுச்சேரியில் 3 கொலைகள் நடந்துள்ளது. ஒரே நாளில் நடந்த தொடர் கொலைகளால் புதுச்சேரி மக்கள் பீதியில் உள்ளனர். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் கைது; காவல்துறை விளக்கம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Kalashetra Ex-Professor issue Police explanation

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்குப் பேராசிரியர்கள் நான்கு பேர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் புகார் எழுந்த நிலையில், கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து மாணவிகள் அளித்த புகார் தொடர்பாகத் தேடப்பட்டு வந்த ஹரிபத்மனை ஹைதராபாத்தில் வைத்துக் கடந்த ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். 60 நாட்களுக்கும் மேலாகச் சிறையில் இருந்த ஹரிபத்மனுக்கு கடந்த ஜூன் 6 ஆம் தேதி நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியிருந்தது.

மேலும் இது தொடர்பாக விசாரிக்க கலாஷேத்ரா நிர்வாகம் சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி கண்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அதே சமயம் இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இத்தகைய சூழலில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாஷேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர். கலாஷேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த கைது சம்பவம் குறித்து காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 1995 ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் திருவான்மியூர், கலாஷேத்ரா அறக்கட்டளையின் முன்னாள் மாணவிகள் இருவர் இந்த அறக்கட்டளையின் முன்னாள் ஆசிரியரான ஷீஜித் கிருஷ்ணா என்பவர் தங்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில், முதற்கட்ட விசாரணை நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி, கடந்த பிப்ரவரி மாதத்தில் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஷீஜித் கிருஷ்ணா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

Kalashetra Ex-Professor issue Police explanation

இதனையடுத்து நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர புலன்விசாரணை மேற்கொண்டு இந்த வழக்கில் தொடர்புடைய சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடு பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் ஷீஜித் கிருஷ்ணா (வயது 51) நேற்று முன்தினம் (22.04.2024) கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நேற்று முன்தினம் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.