Skip to main content

அறிவிக்கப்படாத அவசர நிலை நிலவுகிறது; நாடு பாசிசத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது  - முத்தரசன் 

Published on 18/09/2018 | Edited on 18/09/2018
மு

 

நாட்டிலுள்ள 125 கோடி மக்களின் பாதுகாப்பு எழுத்துரிமை, பேச்சுரிமை கொண்ட து அரசியலைப்பு சட்டம் தான். இந்த அரசியலைப்பு சட்டத்திற்கு எதிராக மோடி அரசு செயல்படுகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கடுமையாக சாடினார் .

 

அரசியல் அமைப்பு சட்டத்தை காப்போம் இந்திய நாட்டை பாதுகாப்போம் என்ற தலைப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரச்சாரம் பயணம் வேதாரண்யத்தில் தொடங்கி தமிழகம் முழுவதும் 6 குழுக்களாக சென்று வருகிற செப்டம்பர் 23ம் தேதி திருப்பூரில் பொதுக் கூட்டத்துடன் நிறைவடைகிறது.

 

இந்த பிரச்சார இயக்கம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் திருவாரூர் வந்தடைந்தது. பின்னர் திருவாரூர் கீழவீதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு முத்தரசன் பேசுகையில், "இந்திய நாட்டிலுள்ள 125 கோடி மக்களின் பாதுகாப்பு எழுத்துரிமை,  பேச்சுரிமை கொண்டது அரசியலைப்பு சட்டம் தான். இந்த அரசியலைப்பு சட்டத்திற்கு எதிராக மோடி அரசு செயல்படுகிறது. குறிப்பாக வகுப்புவாதத்திற்கு எதிராக பேசுபவர்கள் தண்டிக்கப்படுவதில்லை கொலை

 
செய்யப்படுகின்றனர். எனவே மத்திய அரசு கடுமையான அடக்கு முறையை கையாளுகிறது, நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை நிலவுகிறது, நாடு பாசிசத்தை நோக்கி நாடு நகர்ந்து கொண்டு இருக்கிறது

 

இதே போன்று எடப்பாடி அரசு லாயக்கற்ற அரசாக உள்ளது. ஒரு முறைக்கு நான்கு முறை மேட்டூர் அணை நிரம்பியும் கடை மடைக்கு தண்ணீர் வரவில்லை. கீழ்மட்டம் முதல் தலைமை செயலகம் அதாவது மேல்மட்டம் வரை ஊழல் தலை விரித்தாடுகிறது. இந்த இரண்டு அரசுகளும் அகற்றப்படவேண்டும் அதற்கான முயற்சிகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்டு வருகிறது." என்றுபேசிமுடித்தார்.

 

பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழகத்தில் தந்தை பெரியாரின் சிலையை அவமதிக்கப்பட்டிருப்பது வேதனைக்குரியது.
அவமதித்தவர்களை காவல்துறையினர் உடனடியாக கைது  செய்ய வேண்டும்.

காவிரி டெல்டா கடைமடை பகுதிகள் வரை தண்ணீர் சென்றுவிட்டது என அமைச்சர்கள் கூறுகிறார். ஆனால் சத்தியமாக  தண்ணீர் செல்லவில்லை  சம்பாபயிர்கள் கருகி கொண்டிருக்கிறது என்பதே உண்மை. கருகும் சம்பா பயிர்களை காப்பாற்ற தமிழக அரசு கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

விநாயகர் சிலை ஊர்வலம் என்ற பெயரில் மத கலவரங்களை பிஜேபி அரசு உருவாக்கி வருகிறது.  வன்முறையை தூண்டும் வகையில் பேசி வரும் எச் ராஜாவை உடனடியாக கைது செய்ய வேண்டும்". என முத்தரசன் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மோடியின் நாய்க்குட்டிபோல் அமலாக்கத்துறை செயல்படுகிறது” - முத்தரசன்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Mutharasan criticism of BJP

புவனகிரி பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன் சிதம்பரம் நாடளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தொல்.திருமாவளவனுக்கு ஆதரவு திரட்டி பானைச் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். 

அப்போது பேசிய அவர், “அமலாக்கத்துறை மோடியின் நாய்க்குட்டி போல செயல்படுகிறது. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு அபராதம் விதித்துள்ளனர். சம்பந்தபட்ட துறை அதிகாரிகளை மோடி, அமித்ஷா ஆட்டி படைக்கிறார்கள். மோடி, தேர்தலுக்குப் பிறகு திராவிட முன்னேற்ற கழகம் இருக்காது என கூறுகிறார். உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை அழித்து விடுங்கள் என கூறுகிறார். இதற்கு அர்த்தம் என்னவென்றால் ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வந்து பாரதிய ஜனதா கட்சியை மட்டும் வைத்துக்கொண்டு சர்வாதிகாரி போல் செயல்படுவதற்காக அனைத்து கட்சிகளையும் ஒழிக்க திட்டமிட்டுள்ளார்.

மோடியின் தேர்தல் அறிக்கையில் சொன்னதை எதையுமே செய்யவில்லை. விவசாயிகளுக்கு ஆதார விலை, சாமிநாதன் கமிஷன் பரிந்துரை அமல்படுத்தவில்லை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. தற்போது கச்சத்தீவைப் பற்றி பேசுகிறார். கச்சத்தீவை கடந்த 10 ஆண்டுகளில் மீட்பதற்கான மோடி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுவரை அவர் யாருக்கு பேன் பார்த்துக் கொண்டு இருந்தார்.

மாநில உரிமைகள் பறிக்கப்படுகிறது. ஆளுநர் போட்டி அரசாங்கம் நடத்துகிறார். இது ஜனநாயகத்திற்கு விரோதமானது. இதனை திமுக, கம்யூனிஸ்ட் பிரச்சினையாக பார்க்காமல் பொது பிரச்சினையாக பார்க்க வேண்டும்.  மோடியிடம் சமூக நீதியை எதிர்பார்க்க முடியாது. அப்படி சமூக நீதி அவர்களுக்கு இருந்தால், இட ஒதுக்கீட்டை அமல்படுத்துகிறேன் என கூறியதால் வி.பி.சிங் ஆட்சியை கவிழ்த்திருக்கமாட்டார்கள்.

பாஜக பத்தாண்டுகளில் செய்த தவறு கொஞ்ச நஞ்சமல்ல. சிறுபான்மை மக்களுக்கு எதிராக, சிறு குறு தொழில் நடத்துபவர்களுக்கு எதிராக, விவசாயிகளுக்கு எதிராக 3 சட்டங்கள் நிறைவேற்றினார்கள். தொழிலாளர்களுக்கு எதிராக சட்டங்களை கொண்டு வந்தார்கள்.

இதற்கு அதிமுக ஆதரவளித்தது. தற்போது ஜனநாயகத்தை காப்போம் என  ஏமாற்று வேலை செய்கிறது. சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்கு பானைச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார். இவருடன் கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் மணிவாசகம்,  மாவட்டச் செயலாளர் துரை, மாவட்ட துணைச் செயலாளர் சேகர், வட்டச் செயலாளர் தமிமுன் அன்சாரி உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

Next Story

'மீண்டும் பாஜக வந்தால் நாடு அடிமை நாடாக மாறிவிடும்'-முத்தரசன் பேச்சு 

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
'If the BJP comes again, the country will become a slave country' - Mutharasan's speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

கடலூர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே.விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து, கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே நடந்த பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன் பேசுகையில்,''அரசியலமைப்பு சட்டம் தான் நாட்டை வழி நடத்துகிறது. அந்த அரசியலமைப்பு சட்டம் இன்றைக்கு கேள்விக்குறியாகி இருக்கிறது. தேர்தல் ஆணையம் குறிப்பிடுவது போல இது ஒரு தேர்தல் திருவிழா அல்ல. இது ஒரு தேர்தல் யுத்தம். ஒவ்வொரு நாளும் நம்முடைய இந்தியா படை முன்னேறிக் கொண்டே இருக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்திற்கு, அரசியலமைப்பு சட்டம் அமைத்து தந்திருக்கிற அமைப்புகளுக்கு எதிராக, மதச்சார்பின்மை கொள்கைக்கு எதிராக, பாசிச கொள்கையோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிற ஒரு அமைப்பை எதிர்த்து நடத்திக் கொண்டிருக்கிற யுத்தம் இது.

என்னை பொறுத்தமட்டில் 40 தொகுதிகளிலும் நம்முடைய கூட்டணி மகத்தான வெற்றி பெற்று விட்டது. வாக்குகளை பல மடங்கு அதிகரிக்க வேண்டும். எதிர்த்து நிற்கிற பாஜக, அதிமுக கூட்டணிகள் நிராகரிக்கப்பட்டு, வைப்புத் தொகையை இழக்க செய்ய வேண்டும்.

அரசியல் அமைப்புச் சட்டம் நீதிமன்றம், தேர்தல் ஆணையம், வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றை அமைத்து கொடுத்துள்ளது. இந்த அமைப்புகள் எல்லாம் யாருடைய உத்தரவுக்கும் கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லை. சுதந்திரமாக செயல்பட வேண்டிய அமைப்புகள். ஆனால், இன்றைக்கு சுதந்திரமாக செயல்படுகிறதா என்கிற கேள்வி எழுகிறது. நாட்டில் வாழுகிற ஒரு கடைக்கோடி மனிதன் பாதிக்கப்பட்டால் அவன் நியாயம் கேட்டு நிற்கிற இடம் நீதிமன்றம். அந்த நீதிமன்றத்தின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பகத்தன்மை இன்றைக்கு கேள்விக்குறியாகிவிட்டது. நீதி மன்றமே ஒருவருடைய கட்டுப்பாட்டுக்குள் சென்று விட்டால், அப்புறம் நீதி எங்கிருந்து பெறுவது.

மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்கள் சுதந்திரமாக நடத்தப்பட வேண்டும். அதற்கு தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இருக்க வேண்டும். முடிகிறதா? நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடைக்கவில்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் நீதிமன்றம் சென்று பெறவேண்டியதாயிற்று. மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் கிடைக்கவில்லை. ஆனால், பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள தமாகாவுக்கு சைக்கிள் சின்னம், அமமுகவிற்கு குக்கர் சின்னம் கிடைக்கிறது. அரசியலமைப்பு சட்டத்தால் உருவாக்கப்பட்ட வருமான வரித்துறை, அமலாக்கத்துறையினர் நேர்மையாக செயல்பட வேண்டும். காங்கிரஸ் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை அபராதம் கட்ட வேண்டும் என்று வருமான வரித்துறை நோட்டீஸ் விடுகிறது.

இந்தியாவில் தன்னைத் தவிர வேறு எந்த கட்சியும் இருக்கக் கூடாது பிரச்சாரத்தில் மோடி பேசுகிறார். தமிழ்நாட்டில் தேர்தலுக்குப் பின்னர் திமுக இருக்காது என்கிறார். இது ஒரு ஜனநாயக விரோதமான செயல். இதே ஆபத்து நாளை அதிமுக, தேமுதிக, பாமகவிற்கு வராதா? நரேந்திர மோடிக்கு 10 வருஷமா கச்சத்தீவு குறித்து ஞாபகமே வரவில்லை. இப்போது கச்சத்தீவு குறித்து பேசுவதற்கு என்ன காரணம். இது பிரச்சனைகளை திசை மாற்றி விடுவது தான் காரணம். தமிழ்நாட்டில் பாஜக, அதிமுக இரண்டு கட்சி எதிர்த்து நிற்கிறது. பாமகவின் சமூக நீதிக்கும் பாஜகவுக்கு என்ன சம்பந்தம். அதிமுக ஆதரவு தரவில்லை. தற்போது உறவில்லை விலகிவிட்டோம் எனக் கூறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக, பாஜக நிராகரிக்கப்பட வேண்டும். பாஜகவிற்கு  மூன்றாவது முறை வாய்ப்பு அளித்தால் நாடு அடிமை நாடாக மாறிவிடும்  . நாடு முழுவதும் இந்தியா கூட்டணி முன்னேறி வருகிறது'' என்றார்.