தேனி பாராளுமன்ற தொகுதியில் உள்ள ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாலசமுத்திரம் வாக்குச்சாவடியில் இன்று மறு வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. இதனைத் தொடர்ந்து வாக்குச்சாவடி மையத்தை ஆண்டிபட்டி திமுக வேட்பாளர் மகாராஜன் பார்வையிட்டார். அதன் பின் பத்திரிகையாளர்களிடம் பேசும் போது,

ஓ.பி.எஸ் மகன் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே இந்த மறு வாக்குப்பதிவு நடத்தப்படுகின்றது. ஆனால் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு கிடையாது. திமுக – காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது. இந்த மறு வாக்குப்பதிவினால் எங்களுக்குத்தான் கூடுதலான வாக்குகள் கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் இந்த தேர்தலில் வெற்றி பெற்று ராகுல் காந்தி பிரதமராவார். வருகின்ற ஜீன் 3ஆம் தேதி ஸ்டாலின் முதல்வராக அமருவார். அதனால் இப்போதே போலீஸ் பிடியில் தப்புவதற்கு மோடி குகையைத் தேடி அமர்ந்து விட்டார். அது போல ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரும் ஓடி, ஒழிந்து கொள்ள குகையை தேடி வருகின்றனர். இவர்களுக்கு எந்த குகையும் கிடைக்கப் போவதில்லை என்று கமெண்ட் அடித்தார்.