Skip to main content

வாழ்த்துக்களை தெரிவித்தவர்களுக்கு நன்றி - விஜயகாந்த்

Published on 16/04/2018 | Edited on 16/04/2018
satyaraj

 

தேசிய முற்போக்கு திராவிட கழகம் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை: ’’எனது 40 ஆண்டுகால திரையுலக சேவையை பாராட்டி நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்துகொண்டவர்களுக்கும், வாழ்த்துக்களை தெரிவித்தவர்களுக்கும் நன்றி.

 

எனது 40 ஆண்டுகால கலையுலக சேவையை பாராட்டி, காஞ்சிபுரம் மாவட்டம், கரசங்காலில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொண்டு என்னை நேரில் வாழ்த்திய நடிகர், நடிகைகள், திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், சண்டைப்பயிற்சி இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர் சங்க நிர்வாகிகளுக்கும், மக்கள் தொடர்பாளர்கள், எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த பாராட்டு விழாவை பிரமாண்டமாக நடத்திக்காட்டிய காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் அனகை.டி.முருகேசன்,Ex:MLA, அவர்களுக்கும், அனைத்து நிர்வாகிகளுக்கும், லட்சக்கணக்கில் திரண்டு மாபெரும் மாநாடாக மாற்றிய எனது ரசிக பெருமக்களுக்கும், மகளிர் அணியை சேர்ந்தவர்களுக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும்,  எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.

 

மேலும் தொலைக்காட்சி, தொலைபேசி, அலைபேசி, பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகவலைதளங்கள் வாயிலாகவும் எனக்கு வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்த கட்சி தலைவர்களுக்கும், அனைத்து நல்உள்ளங்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.’’


 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசியல் வருகை குறித்த கேள்விக்கு சண்முகப்பாண்டியன் பதில்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
shanmuga pandian press meet

விஜயகாந்தின் இரண்டாவது மகனான சண்முகப் பாண்டியன் சகாப்தம், மதுர வீரன் ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது படைத் தலைவன் படத்தில் நடித்து வருகிறார். டைரக்டர்ஸ் சினிமாஸ் தயாரிப்பில், உருவாகும் இப்படம் காட்டு யானைகளின் வாழ்வியலை மையப்படுத்தி ஆக்‌ஷன் ஜானரில் உருவாகிறது. யு. அன்பு இயக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். மேலும் ராகவா லாரன்ஸ் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். 

இந்த நிலையில் இன்று சண்முகப் பாண்டியன் பிறந்தநாள் காண்கிறார். இதையொட்டி பிரேமலதா விஜயகாந்துடன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். இன்று விஜயகாந்த் மறைந்து 100 நாள் நிறைவடைகிறது குறிப்பிடத்தக்கது. விஜயகாந்த இல்லாமல் முதல் பிறந்தநாளைக் காண்கிறார். அஞ்சலி செலுத்திய பின்பு செய்தியாளர்களிடம் பேசினார். 

அப்போது அவரிடம் விஜய பிரபாகரரை போல் அரசியலுக்கு வரும் எண்ணம் உள்ளதா என்ற கேள்வி கேட்கப்பட்ட நிலையில் பதிலளித்த அவர்,  “நான் இப்போதைக்கு சினிமாவில் இருக்கிறேன். அண்ணன் அரசியலில் இருக்கிறார். அப்பாவின் ஒரு துறையை அண்ணன் எடுத்துக் கொண்டார். இன்னொரு துறையை நான் எடுத்துக்கொண்டேன்” என்றார். 

இதனிடையே சண்முகப் பாண்டியனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சிறிய வீடியோ ஒன்றை சர்பிரைஸாக வெளியிட்டுள்ளனர் படைத் தலைவன் படக்குழு. அப்படக்குழுவினரும் சண்முகப் பாண்டியனோடு இணைந்து விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.  

Next Story

விஜயகாந்த் மறைந்து 100ஆவது நாள் - கண்ணீருடன் பிரேமலதா அஞ்சலி

Published on 06/04/2024 | Edited on 06/04/2024

 

நடிகர், தேமுதிக நிறுவனத் தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த், கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. அவரது இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். அவரது நினைவிடத்திற்கு இன்றும் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் விஜயகாந்த் மறைந்து இன்றோடு 100 நாள்கள் நிறைவைடைகிறது. இதையொட்டி பிரேமலதா, விஜயகாந்த் நினைவிடத்தில் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினார். அவருடன் மகன் சண்முகபாண்டியன் உடனிருந்தார். அவருக்கு இன்று பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. 

படங்கள் - எஸ்.பி.சுந்தர்