Skip to main content

பள்ளிக்கு மது போதையில் வந்த ஆசிரியர்!  ஆசிரியர் தினத்தன்று நடந்த அவலம்! 

Published on 06/09/2019 | Edited on 06/09/2019


 
கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி இயங்கி வருகிறது.  இந்த பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுபவர் தாமஸ்.  இவர்  ஆசிரியர் தினமான நேற்று வகுப்பிற்கு மது குடித்து விட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

 

t


இதனை அடுத்து முதல்வர் தாமஸ் குடித்து இருப்பதை உறுதி செய்ததை அடுத்து காவல் நிலையத்தில் ஆசிரியரை பள்ளி நிர்வாகத்தினர் ஒப்படைத்தனர். 

 

t

 

நாடு முழுவதும் ஆசிரியர் தின விழாவை கொண்டாடி வரும்  நிலையில் மாணவர்களின் எதிர்காலத்தை வழங்குகின்ற,  ஆசிரியப் பணியைச் செய்கின்ற ஆசிரியர் ஒருவர் மது குடித்து வந்து வகுப்பறையில் அமர்ந்து இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

சார்ந்த செய்திகள்