Skip to main content

கடப்பாவில் இறந்த தமிழர்கள் உடல் சேலம் நோக்கி விரைவு

Published on 20/02/2018 | Edited on 20/02/2018
tamilar murder

 

ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள ஓண்டிமிட்டா காட்டுப்பகுதியில் உள்ள ஏரியில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த 5 மலைவாழ் மக்கள் இறந்துகிடக்கும் தகவல் வெளியாகி அதிர்ந்தது தமிழகம்.

 

உண்மையில் அவர்கள் எப்படி இறந்தார்கள் என்பதை தெரிந்துக்கொள்ளவும், அவர்களது உடலை முறைப்படி தமிழகம் கொண்டு வர மர்மமான முறையில் இறந்துப்போன 5 பேரின் குடும்பத்தாரோடு சேலம் மாவட்ட போலிஸார் கடப்பா அரசு மருத்துவமனைக்கு சென்றனர்.

 

ஒண்டிமிட்டா காவல்நிலைய போலிஸார் இறப்பு தொடர்பாக வழக்கு பதிவு செய்து கடப்பா ராஜிவ்காந்தி மருத்துவமனையில் உடல் ஆய்வு கூறு நடத்தி பாதுகாப்பாக வைத்திருந்தனர். அங்கு இருந்த கடப்பா மாவட்ட போலிஸாரோடு தமிழகத்தில் இருந்து சென்ற காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது தமிழக அதிகாரிகளிடம் ஆந்திரா போலிஸார், செம்மரம் வெட்ட வந்தவர்களை யாரோ மடக்கியுள்ளனர். அப்போது அங்கிருந்து தப்பி ஓட முயன்றபோது ஏரியில் மூழ்கி இறந்துள்ளார்கள் என்கிற தகவலை கூறியுள்ளனர். அதனை போலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

தமிழக அதிகாரிகளுடன் வந்துயிருந்த இறந்தவர்களின் உறவினர்களிடம் ஆந்திரா போலிஸார், ஏன் அவர்கள் கடப்பா வந்தார்கள், அவர்களை அழைத்து வந்தது யார், இதற்கு முன்பு இங்கு வந்துள்ளார்களா, உண்மையில் நீங்கள் இறந்தவரின் உறவினர்கள் தானா என்கிற கேள்வியை எழுப்பி பதிலை பெற்றுக்கொண்டு பதிவு செய்துக்கொண்டனர். இறந்தவர்கள் தங்களது உறவினர் தான் என்கிற ஆவணங்களை பெற்றுக்கொண்டு கிராம நிர்வாக அலுவலர் ஆனந்த்குமார், வாழப்பாடி காவல் ஆய்வாளர் உமாசங்கர் இருவரையும் சாட்சியாக வைத்துக்கொண்டு கடப்பா டி.எஸ்.பி உடல்களை ஒப்படைத்துவிட்டு உடல் அவர்களிடம் ஒப்படைத்தற்கான ஆவணங்களில் கையெழுத்து பெற்றுக்கொண்டது ஆந்திரா போலிஸ்.

 

சேலம் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த 5 அமரர் ஊர்த்தியில் உடல்கள் ஏற்றப்பட்டு சேலம் நோக்கி வந்துக்கொண்டு இருக்கிறார்கள்... அரசு அதிகாரிகளும், இறந்தவர்களின் உறவினர்களும்.

சார்ந்த செய்திகள்

Next Story

வெள்ளத்தில் 2000 பேர் பலி; சர்வதேச உதவியைக் கோரும் லிபியா

Published on 12/09/2023 | Edited on 12/09/2023

 

Libya appeals for international aid for 2000 people died in the flood

 

வடக்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் நாடு லிபியா. ஆப்பிரிக்க நிலப்பரப்பின் அடிப்படையில் 4வது நாடாக இருந்தாலும், இங்கு வாழும் மக்களின்  எண்ணிக்கை மிகக் குறைவு. இந்த நிலையில், மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள லிபியாவை கடந்த ஞாயிற்றுக்கிழமை (10-09-23) டேனியல் புயல் தாக்கியது. குறிப்பாக லிபியாவின் கிழக்கு பகுதிகளைக் கடும் புயல் மற்றும் மழை தாக்கியுள்ளது. இதனால், டெர்னா, பெங்காஸி, பெடா உள்ளிட்ட பல பகுதிகளில் மோசமான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 

கனமழை காரணமாக டெர்னா பகுதியில் உள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி வழிந்துள்ளன. சில அணைகள் இடிந்தும் விழுந்துள்ளன. இந்த வெள்ளத்தில் குறைந்தது 2000 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பல ஆயிரம் பேர் இதில் மாயமாகி இருக்கலாம், எனவே அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

 

இப்பகுதியில் போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்டவை தடைப்பட்டிருப்பதால், மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன. கிழக்கு லிபியாவில் இந்த வெள்ளத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து மாறுபட்ட தகவல்களும் வெளியாகி வருகிறது. வெள்ளம் பாதித்த டெர்னா நகரைப் பேரழிவு மண்டலமாக அந்நாட்டுப் பிரதமர் ஹமாட் அறிவித்துள்ளார். மேலும், நாடு முழுவதும் உள்ள கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்க விடவும் உத்தரவிட்டுள்ளார். 

 

பாதிப்பு மிக மோசமாக இருக்கும் பகுதியான கிழக்கு சிரேனைக்கா மாகாணத்தில் மூன்று பகுதிகளை வெள்ளம் காரணமாக பேரழிவுப் பகுதியாக அறிவித்து சர்வதேச உதவியைக் கோரியுள்ளதாக லிபியா ஜனாதிபதி கவுன்சில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, லிபியா பிரசிடென்சி கவுன்சிலின் தலைவர் மொஹமட் மென்ஃபி, வெள்ளத்தால் ஏற்பட்ட பரவலான பேரழிவைச் சமாளிக்க சர்வதேச உதவிக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதில் அவர், "சகோதர மற்றும் நட்பு நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஆதரவை வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

 

 

Next Story

இலங்கையில் குறையும் தமிழர்களின் எண்ணிக்கை; அதிர்ச்சி தரும் புள்ளி விவரம்

Published on 06/06/2023 | Edited on 06/06/2023

 

 Declining number of Tamils ​​in Sri Lanka; The statistics are shocking

 

இலங்கையில் பூர்வீகத் தமிழர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக புள்ளி விவரங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

 

இலங்கையில் தொடர்ச்சியாக நடைபெற்ற இனப் பிரச்சனையால் நேரிட்ட போர், அதன் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள், அதன் காரணமாக ஏற்பட்ட இடம்பெயர்தல் ஆகிய காரணங்களால் அகதிகளாக மக்கள் தொடர்ந்து வெளியேறி வருவதால் அங்குள்ள தமிழர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

 

இது இலங்கை அரசு வெளியிட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளி விவரங்களில் தெளிவாகத் தெரிகிறது. கிழக்கு மாகாணத்தில் சிங்களர், இஸ்லாமியர்களுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்திற்கு தமிழ் மக்களின் மக்கள் தொகை இடம்பெற்றுள்ளது. குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.

 

இலங்கையில் தமிழர்களை பொறுத்தவரை மூன்று பிரிவுகளாக பார்க்கப்படுகிறது. ஈழத்தமிழர், மலையகத்தமிழர், தமிழ் பேசும் இஸ்லாமியர் என குறிப்பிடப்படும் வகையில் 1881 ஆம் ஆண்டு 24.9 சதவீதமாக இருந்த தமிழர்களின் எண்ணிக்கை 2012-ல் 11.2 சதவீதமாகக் குறைந்துள்ளது. திரிகோணமலையில் 1881-ல் 64.8 சதவீதமாக இருந்த தமிழர்களின் எண்ணிக்கை 2012-ல் 32.3 எனப் பாதியாகக் குறைந்துள்ளது. அதேபோல் அம்பாறை மாவட்டத்தில் 1963-ல் 28.8 சதவீதமாக இருந்த தமிழர்கள் எண்ணிக்கை 2012-ல் 17.4 சதவீதமாகக் குறைந்துள்ளது.