கேரளாவில் வேகமாக பரவி வரும் நிபா வைரஸால் அங்குள்ள தமிழக தொழிலாளிகள் அச்சத்தில் உள்ளனர். இந்த வைரஸ் தாக்கியுள்ள மாவட்டங்களில் இருந்து வெளியே செல்பவர்களும் அதேபோல் மாவட்டத்திற்குள் வருபவர்களும் அவர்களாகவே அருகில் உள்ள மருத்துவமனைகளில் சென்று பரிசோதனை செய்ய வேண்டுமென்று கேரளா சுகாதார அமைச்சர் சைலஜா டீச்சர் கேட்டுள்ளார்.
கேரளாவை தற்போது அச்சுறுத்தி வரும் நிபா எனும் வைரஸ் நோய் தலைகீழாக தொங்கும் பாலூட்டி இனத்தை சோ்ந்த வௌவாலில் இருந்து பரவி வருகிறது. இந்த நோய் தாக்கி இதுவரை 11 போ் உயரிழந்துள்ளனர்.
கேரளாவின் எல்லை மாவட்டங்களான கோழிக்கோட்டில் மூஸாக் மற்றும் அவருடைய மகன் முகம்மது ஸாலிஹ் இருவரையும் இந்த நோய் தாக்கியிருப்பது முதலில் ஆய்வு மூலம் கண்டறியப்பட்டது. இதில் அந்த இரண்டு பேரும் உயிரிழந்தனா். பின்னா் அவர்களுக்கு சிகிட்சையளித்த நர்ஸ் லினியும் இந்த நோயால் தாக்கப்பட்டு உயரிழந்தார். அதன் பிறகு மலப்புரத்தில் 7 பேரும் காசர் கோட்டில் ஒருவரும் உயிரிழந்தனர்.
மேலும் இந்த மூன்று மாவட்டங்களிலும் 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நிபா வைரஸ் நோய் வேகமாக பரவும் தன்மை கொண்டதால் மேலும் பலர் பாதிக்கப்படுவார்கள் என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த நோய் தாக்கியவா்களுக்கு தலைவலி, காய்ச்சல், மயக்கம், அடுத்து கோமா என மரணம் வரை கொண்டு போய்விடும்.
இந்நிலையில், தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு சென்று ஏராளமான கூலித் தொழிலாளர்கள் கட்டிட பணிகள் மற்றும் இரும்பு பீரோ செய்யும் பணிகள் செய்து வருகின்றனர். இதனால் நிபா வைரஸ் தங்களையும் தாக்குமோ என்ற அச்சத்தில் தமிழக தொழிலாளர்கள் பீதியில் உள்ளனர்.
மேலும் இந்த நோயை கட்டுப்படுத்தும் விதமாக மாநில சுகாதாரத்துறை சில கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகத்துக்கு விதித்துள்ளது. கடிப்பட்ட பழங்களை வியாபாரிகள் யாரும் விற்கக் கூடாது என்றும் அந்த பழங்ளை வௌவால் கடித்து இருக்கலாம் என்றும் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இதே போல் கேரளா கா்நாடகா எல்லையிலும் நிபா வைரஸை தடுக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் அமைச்சர் சைலஜா டீச்சர் கூறியுள்ளார்.
கேரளாவை அச்சுறுத்தும் நிபா வைரஸால் தமிழக தொழிலாளர்கள் அச்சம்
சார்ந்த செய்திகள்
Next Story
நிஃபா வைரஸ் எதிரொலி; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கேரளாவில் இருவருக்கு உறுதி செய்யப்படாத வைரஸ் தாக்குதல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிகிச்சையில் இருந்த இருவரும் உயிரிழந்தனர். இதையடுத்து இறந்தவர்களின் மாதிரிகள் புனேவில் உள்ள வைரஸ் ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதில் உயிரிழந்த இருவருக்கும் நிஃபா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. இரண்டு பேர் நிஃபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்திருந்தார்.
நிஃபா வைரஸ் பரவல் காரணங்களால் கேரளாவில் பொதுமக்கள் முகக் கவசம் அணிய வேண்டும் எனக் கேரள மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கேரளாவில் குறிப்பாக கோழிக்கோடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த கேரள சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேபோல் மாநில எல்லைகளிலும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நிஃபா வைரஸ் தொற்றைத் தடுக்க எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஐ.சி.எம்.ஆர் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளது. கரோனா பரவலைத் தடுப்பதற்கான வழிகாட்டுதலை போலவே கைகளை நன்றாகக் கழுவ வேண்டும் எனவும், முகக் கவசம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிஃபா வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்குத் தொற்றுவதால் தடுப்பு நடவடிக்கைகள் மிகவும் முக்கியமானது என ஐ.சி.எம்.ஆர் தலைவர் ராஜீவ் தெரிவித்துள்ளளார்.
தற்போது, உறுதிசெய்யப்பட்ட நிஃபா நோயாளிகளின் தொடர்பு பட்டியலில் 1080 பேர் உள்ளனர். மேலும், இன்று 130 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில், கோழிக்கோடு மாவட்டத்தைத் தவிர தொடர்பு பட்டியலில் 29 பேர் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து தொடர்பு பட்டியலில் உள்ளவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். நிஃபா வைரஸ் காய்ச்சலின் பரவல் அதிகமாக இருப்பதால் கேரள மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் மத்திய குழு அம்மாவட்டத்திற்கு சென்று ஆய்வு நடத்தி வருகிறது.
இந்த நிலையில், நிஃபா வைரஸ் காரணமாக கேரள மாநிலம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் வருகிற செப்டம்பர் 24 ஆம் தேதி வரை அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், படிப்பு சார்ந்த நிறுவனங்கள், டியூசன் மையங்கள் ஆகிய அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் நடத்தப்படும் வகுப்புகளுக்கு தடையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
நிஃபா வைரஸ் எதிரொலி; 'வவ்வாலுக்குத் தொல்லை தந்து பறக்க வைக்க வேண்டாம்' - அமைச்சர் அறிவுரை
கேரளாவில் இருவருக்கு உறுதி செய்யப்படாத வைரஸ் தாக்குதல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிகிச்சையில் இருந்த இருவரும் உயிரிழந்தனர். இதையடுத்து இறந்தவர்களின் மாதிரிகள் புனேவில் உள்ள வைரஸ் ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதில் உயிரிழந்த இருவருக்கும் நிஃபா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. இரண்டு பேர் நிஃபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்திருந்தார்.
நிஃபா வைரஸ் பரவல் காரணங்களால் கேரளாவில் பொதுமக்கள் முகக் கவசம் அணிய வேண்டும் எனக் கேரள மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கேரளாவில் குறிப்பாக கோழிக்கோடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த கேரளா சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேபோல் மாநில எல்லைகளிலும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நிஃபா வைரஸ் தொற்றைத் தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கைகள் குறித்து ஐ.சி.எம்.ஆர் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளது. கரோனா பரவலைத் தடுப்பதற்கான வழிகாட்டுதலை போலவே கைகளை நன்றாகக் கழுவ வேண்டும் எனவும் முகக் கவசம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிஃபா வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்குத் தொற்றுவதால் தடுப்பு நடவடிக்கைகள் மிகவும் முக்கியமானது என ஐ.சி.எம்.ஆர் தலைவர் ராஜீவ் தெரிவித்துள்ளார். நிஃபா வைரஸால் பாதிக்கப்படுபவரின் வியர்வை, உமிழ்நீர், ரத்தம் போன்றவற்றை தொடக்கூடாது. நிஃபா வைரசால் பாதிக்கப்பட்டவரை தனிமைப்படுத்தி சிகிச்சை தர வேண்டும் என முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஐ.சி.எம்.ஆர் வழங்கியுள்ளது. அதே நேரம் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், 'வவ்வாலில் இருந்து தான் நிஃபா வைரஸ் பரவுகிறது. எனவே அவற்றுக்குத் தொல்லை தந்து பறக்க வைக்க வேண்டாம்' எனத் தெரிவித்துள்ளார்.